- சுகுணா கார்த்திகேயன்
மாலை நேரம்.
காற்று சற்றே குளிர்ந்தது.
வீட்டின் வாசலில் மல்லிகை வாசம் நெடிய மூச்சாய் பரவியது.
மங்கலா சாளரத்தைத் திறந்தபோது, நிழல் போல ஒரு பழைய நினைவு அவளது மனதைத் தழுவியது.
அவள் கண்ணில் நீர்த்துளிகள் — ஆனால் இன்று அந்த நீர் துயரத்தின் அல்ல; அது உயிர்த்திருப்பின் நனைவு.
அந்த இரவு ஒரு சிறிய விழா.
கூட்டாக வந்திருந்த குழந்தைகள் சிரிப்பால் வீடு முழுதும் மினுக்கி ஒளிர்ந்தது.
அவள் கையால் அவற்றுக்குப் பூ மாலை போட,
ஒவ்வொரு மல்லிகையும் அவள் இதயத்தின் இதழ்கள் போல மலர்ந்தது.

அப்போது வீட்டின் வாசலில் வந்தவர் அருண்
மங்கலா ஒரு நொடி தலை தூக்கி பார்த்தாள்.
அவரின் கண்களில் ஒரு மரியாதை, ஒரு துக்கம், ஒரு கருணை, எல்லாம் கலந்த ஒளி.
“நீங்கள் மங்கலா அம்மா தானே?” என்றார் மெதுவாக.
அவள் சிரித்தாள்.
“அம்மா என்று அழைத்தவுடன் எனக்கு உலகமே புதிதாய் தெரிகிறது,” என்றாள் அவள்.
அந்த இரவு நீண்டது.
சந்திரன் ஜன்னலில் வந்து அவளது முகத்தைத் தொட்டான்.
அந்த ஒளியில் அவள் மௌனமாக இருந்தாள் — ஆனால் மனம் பேசிக் கொண்டிருந்தது.
அவள் உள் உலகம் சொன்னது:
“அன்பு இறந்துவிடாது. அது ஒரு நாள் மலரும்.
மனம் திறந்த இடத்தில், கருணை முளைத்த இடத்தில் அது உயிர் பெறும்.”
அவளது கையால் அவனுக்குப் பூ மாலை அளித்த அந்த நொடி,
அவள் இதயத்தில் உறைந்திருந்த வருடங்கள் உருகி ஓடின.
அருண் சொன்னார், “நீங்கள் சிரிக்கும் போது, இரவெல்லாம் புனிதமாய் தெரிகிறது.”
மங்கலா சிரித்தாள் — வெட்கம் கலந்த ஒரு மங்கலச் சிரிப்பு.
வெள்ளை புடவையின் மீது மஞ்சள் ஒளி விழுந்தது.
அந்த இரவு, மங்கலா ஒரு பெண்ணாக மட்டும் அல்ல;
மனிதனின் அன்பை மீண்டும் நம்பிய ஒரு தேவதையாக மலர்ந்தாள்.
அந்த இரவின் முடிவில், அவள் தன்னிடமே சொன்னாள் —
“இனி நான் விதவை அல்ல,
அன்பின் விதை வைக்கும் பெண்.
எனது இதயத்தில் மலர்ந்த இன்பம் தான்
என் வாழ்வின் மங்களம்.”
(தொடரும்)
(எழுத்தாளர் சுகுணா கார்த்திகேயன் குறித்து.. இல்லத்தரசி, எழுத்தாளர், இறைவழி மருத்துவர். இரத்தினா செல்வகுமார் தலைமையிலான திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு தமிழ்ச் சங்கத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றவர்)
Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!
தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!
வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை
முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!
சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு? - வதந்தி என.. மத்திய அரசு விளக்கம்!
விதைக்குள் காடு விரும்பி அதை நாடு!
நெருங்குதலும் விலகலும்
Dr Latha poems: அமைதியே என் ஆயுதம்.. நான் என உறுதி கொள்!
English Language Day: வில்லியம் ஷேக்ஸ்பியரை நினைவு கூர்ந்து Thanks சொல்வோம்!
{{comments.comment}}