- சிவ .ஆ.மலர்விழி ராஜா
பெண்ணின் மென்மையான மனம்
அதுவே அவளின் அழகான குணம்.
ஆடலும் பாடலும் சில தினம்.
ஆண்டுகள் கடந்து செல்லும் போது வாழ்க்கையே அவளுக்கு ஒரு தவம்.
என்னம்மா ஏன் காலேஜ்
போகல... அப்பாவின் குரல் கேட்டு சற்று தயங்கிய நிலையில் இல்லப்பா உடல் நலம் கொஞ்சம் சரியில்லைப்பா என்றாள் பூவிதா.
ஏன்மா என்னாச்சுடா
அப்பாவின் பரிவான அன்பு ஓவென அழத் தோன்றியது அவளுக்கு.
ஒன்றுமில்லை பா
சற்று காய்ச்சல் போல் உள்ளது.
பதறிபோன அவர் சட்டென நெற்றியில் கை
வைத்தார்.
விலகிய அவள் இப்போது பரவாயில்லை பா என்றாள்.

அப்பாவிடம் எப்படி சொல்வது என யோசித்தாள் பூவிதா.
அழகான குடும்பம் அன்பான அம்மா.
பாசத்தை கொட்டும் அப்பா.
உலகத்தில் உன்னை விட எதுவும் பெரியதில்லை என அன்பின் அடைக்கலமான தங்கை தீபிகா.
இவர்களின் மிகச்சிறந்த
உறவாக வாழ்வதில்
மகிழ்ந்தவள்....
இன்று சொல்வதற்கு தயங்கி மனம் வருந்தி
நிற்கும் போது அவளது
கண்களில் திரளும் நீரை மறைக்க முடியாமல் திணறினாள்
பூவிதா.
மேகம் திரள் வது போல் கண்ணீர் திரள அப்பாவை நிமிர்ந்து பார்க்க தைரியமின்றி தலை கவிழ்ந்தாள்.
என்னம்மா...?
ஏன் ஏதோ சிந்தனையிலேயே இருப்பது போலவே உள்ளது.
நேரமாகி விட்டது. சீக்கிரம் ரெடியாகி வா.....
அப்பாவின் சற்று அதட்டலான குரல்
கேட்டு சட்டென நகர்ந்து
சென்றாள்.
இன்று என்ன பிரச்சனை செய்வானோ
என்கிற சிந்தனையில்
அவசர அவசரமாக
பின்னலிட்டு
வெளிர் நீலநிற சுடிதாரில்
ஒரு தேவதையாக
வாசல் வந்தவள் வீதியில் சற்று தூரத்தில் யாரோ தன்னை எதிர்பார்த்து காத்திருப்பது போன்ற உணர்வினால் திகைத்து நின்றாள் பூவிதா.
(தொடரும்)
(சீர்காழியைச் சேர்ந்த மலர்விழி ராஜா, கதை, கவிதைகள், கட்டுரைகள், பக்திப் பாடல்கள் எழுதுவதில் வல்லவர்)
நான் என்னுடைய சுய கணக்கெடுப்பை முடித்து விட்டேன்.. வீடியோ வெளியிட்ட முதல்வர் விஜய்
Census: தமிழகத்தில் ஆகஸ்ட் 1 முதல் முதற்கட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு.. ஆன்லைனிலும் சமர்ப்பிக்கலாம்!
ரோஹித் சர்மா ஓய்வு பெற நிர்ப்பந்தமா.. உண்மையில் என்னதான் நடக்கிறது?
ஜோர்டானில் இருந்த அமெரிக்க போர் விமானங்களை அழித்ததாக ஈரான் அதிரடி தகவல்
ரயில் டிக்கெட் முன்பதிவை எளிதாக்க ஐஆர்சிடிசி (IRCTC) புதிய பீட்டா பதிப்பு அறிமுகம்
சிந்தனைச் சிதறல்.. தனித்துவமும் தன் மதிப்பும் மிகுந்த தனிமையே உயர்வானது!
ரஷ்ய எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா மீது 100% வரி? அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதிய மசோதா
ஓய்வறியா தமிழ்ச் சூரியன்.. தளராமல் தமிழ் வளர்க்கும் பாரதிச்சுடர் நா.வே.நீலகண்டத் தமிழன்!
மிஸ்..இந்த வாட்டியும் வந்ததா!.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்
{{comments.comment}}