- சிவ.ஆ.மலர்விழி ராஜா
கோடை முடிந்து மழைக்காலம் தொடங்கியது. மனதிற்குள் ஆனந்தமும் அலைமோதும்.
சின்னஞ்சிறு வயது சிட்டு போல் ஆடினோம். மழைக்காலம் மனதில் சுகம் தரும் நேரம். பெற்றவர்களின் கஷ்டம் தெரியாமல் இஷ்டம் போல் ஆடினோம் .
ஓடும் நீரில்
கால் பதித்து
சின்ன சின்ன கனவுகளை.......
அச்சமின்றி நனவாக்கி பட்டாம்பூச்சி போல் பறந்த காலம் அது.
அடுத்து வரும் வெள்ளத்தில் தெருவின் வாசலில் சட்டென தோன்றும் அழகான நீரோடை . ஆனந்த வெள்ளமோ நம்ம மனதில். காற்றும் மழையும் கடுமையாக வந்தாலும் சின்னஞ்சிறு கப்பல் செய்து ஒன்றன்பின் ஒன்றாக ஓடவிட்டு ரசித்து மகிழ்ந்த காலம் அது.
அது மட்டும் போதுமா...... ?

அம்மா செய்து தரும் சுவையான பலவிதமான சூடான உணவுகள்...... வெளியில் மழை உள்ளே வடை.... அடை.... பஜ்ஜி...... முறுக்கு .... எனபலவிதமான..... மழைக்கு இதமாக பலகார வகைகளை சுவைத்து மகிழ்ந்து ஆனந்தமாக மழைக்காலத்தை அனுபவித்த நாட்கள்.
அது மட்டுமா...... ?
மின்னல் என்றால் பயம். இடி என்றால் கேட்க வேண்டுமா...... ? உடன் பிறந்தவர்களின் கதகதப்பில் ஒரே படுக்கையில் கவலைகள் ஏதுமின்றி....... கதை பேசிய காலம் அது.
ஓடாதே..... ! ஆடாதே......!! பெரியவர்கள் சொல் கூட சலிப்புதான். பின்பு வரும் வலிப்பு தான் தாங்க முடியாது.
வழுூக்கி விடும் தரை கூட ஸ்கேட்டிங் செய்யும் பயிற்சி போல......! மகிழ்ச்சியாக ஓடி ....ஆடி..... கீழே விழும் போது மேலே..... மேலே ......விழும் அடி தான்.
அது மட்டுமா..... ?
பள்ளிக்கு செல்லும் நேரம் மழை வந்தால் பேரின்பம்...... மழையின் கடுமை தாங்காமல் அடுத்து வரும் அறிவிப்பு......
இன்று பள்ளி விடுமுறை......
ஆஹா.........
வென்று மகிழ்ச்சி
வெள்ளம் அடித்து வர
அடுத்த நாளும் விடுமுறை...... மழை என்றால் மகிழ்ந்து ஆடிய காலம்.
ஆனந்த வாழ்வே மழைக்காலம் என வாழ்ந்த நாட்கள் ....
மறக்க முடியாத மழைக்கால நாட்கள்...... !!
(சீர்காழியைச் சேர்ந்த மலர்விழி ராஜா, கதை, கவிதைகள், கட்டுரைகள், பக்திப் பாடல்கள் எழுதுவதில் வல்லவர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டுத் தமிழ்ச் சங்கத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்)
சென்னை வாக்குப்பதிவில் சுவாரஸ்யம்.. சதவீதம் உயர்வு.. ஆனால் ஓட்டுப் போட்டவர்கள் குறைவுதான்!
Chettinadu Kitchen: அடித்துத் தாக்கும் வெயிலுக்கு..அதிரடி தேங்காய் பால் கஞ்சியும்..பருப்பு துவையலும்
Siva Puranam: பிரபஞ்சத்தின் ஜோதிலிங்கமான.. சிவபெருமான்.. சிவபுராணம் (2)
தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளியின் நிறைவு நாளை எப்படி கொண்டாடலாம்?
மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்.. கோலாகல ஏற்பாடுகள் தீவிரம்
Cards Playing: சீட்டு விளையாடலாமா? விளையாடக்கூடாதா?
கூண்டுக்குள் வளர்க்காதீர்கள்: இன்றைய பெற்றோருக்கான புதிய சவால்!
குழந்தைகளும் கைபேசியும்: பொம்மலாட்டம் வழி ஒரு விழிப்புணர்வு!
அன்பும், கருணையும் கலந்து உருவான உலகம்!
{{comments.comment}}