டெல்லி: சமூக ஊடக நிறுவனமான மெட்டா, கன்னட மொழிபெயர்ப்பில் ஏற்பட்ட தவறுக்கு மன்னிப்பு கேட்டுள்ளது.
கர்நாடக முதல்வர் சித்தராமையா இறந்துவிட்டதாக தவறாக மொழிபெயர்த்திருந்தது மெட்டா. இதுகுறித்து கருத்து தெரிவித்திருந்த முதல்வர் சித்தராமையா, கன்னட மொழிபெயர்ப்பை நிறுத்தும்படி மெட்டாவுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற மெட்டா தளங்களில் கன்னட மொழிபெயர்ப்பு தவறாக இருப்பதால், உண்மை தகவல்கள் திரிக்கப்பட்டு, பயனர்கள் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள் என்றும் அவர் கூறியிருந்தார்.
தற்போது இந்த பிரச்சனை சரி செய்யப்பட்டுவிட்டதாகவும், இந்த தவறுக்கு மன்னிப்பு கேட்பதாகவும் மெட்டா செய்தி தொடர்பாளர் விளக்கியுள்ளார். சமீபத்தில் பழம்பெரும் நடிகை பி.சரோஜாதேவி காலமானார். அவரது மறைவுக்கு சித்தராமையா இரங்கல் செய்தி வெளியிட்டிருந்தார். அந்த பதிவின் மொழிபெயர்ப்பில்தான், முதல்வர் சித்தராமையா இறந்துவிட்டதாக தவறாக இடம் பெற்றிருந்தது.
இது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மெட்டாவின் இந்த தவறான மொழிபெயர்ப்புக்கு பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். முதல்வர் சித்தராமையாவும் தனது சமூக வலைதளத்தில் இதுகுறித்துக் குறிப்பிட்டிருந்தார். சமூக ஊடக தளங்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் குறிப்பாக அதிகாரப்பூர்வ தகவல்களை கையாளும் போது கவனமாக இருக்க வேண்டும் என்றும், இந்த தளங்களில் காட்டப்படும் மொழிபெயர்ப்புகள் பெரும்பாலும் தவறானவை என்பதை மக்கள் உணர வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார்.
இந்த மொழிபெயர்ப்பு வசதியெல்லாம் ஏஐ வந்த பிறகுதான் அதிகரித்துள்ளது. ஆனால் ஏஐ தொழில்நுட்பத்தை முழுமையாக நம்ப முடியாது என்பதை சமீப காலமாக உறுதியாகி வருகிறது. பல தவறுகள் அதில் இடம் பெறுகின்றன. ஏஐ தரும் தகவல்கள் அனைத்தும் சரி என்று யாரும் நம்பி விடக் கூடாது என்று அதை உருவாக்கியவர்களே கூறுகிறார்கள். குறிப்பாக சாட்ஜிபிடி, ஜெமினி போன்ற ஏஐ தளங்களில், எங்களது ஏஐ தவறு செய்யக் கூடும், மீண்டும் ஒரு முறை தகவல்களை பரிசோதித்துக் கொள்ளுங்கள் என்ற வாசகமும் கூடவே இடம் பெறுகிறது. அந்த அளவுக்கு ஏஐயில் இன்னும் குழப்பங்கள் நீடிக்கின்றன. அப்படிப்பட்ட ஒரு குழப்பம்தான் இந்த மெட்டா குழப்பமும்.
பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களில் பயோகிராபி மற்றும் குறிப்பிட்ட தகவல்களை மொழிபெயர்க்க AI தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கர்நாடக முதல்வர் சித்தராமையா குறித்த தவறான மொழிபெயர்ப்பு.. மன்னிப்பு கேட்டது மெட்டா!
திமுக அரசு தொழிலதிபர்களின் முகவராக மாறி மக்களுக்கு எதிராக செயல்படுவது நியாயமல்ல: டாக்டர் அன்புமணி
நீலகிரி, கோவைக்கு மிக கன மழைக்கான ஆரஞ்ச் அலர்ட்: சென்னை வானிலை மையம் தகவல்!
சென்னையில்.. பகுதி நேர ஆசிரியர்கள் கைதுக்கு பிரேமலதா விஜயகாந்த் கண்டனம்!
புதியதோர் உலகம் செய்வோம்! (கவிதை)
திமுக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்!
Coffee with love.. இந்தோனேசியாவின் காபி காமு.. இதைப் பார்த்து நாம நிறைய கத்துக்கணும்!
தவெக உறுப்பினர் சேர்க்கை செயலி தயார்..! நாளை மறுநாள் விஜய் அறிமுகம் செய்கிறார்!
தமிழ்நாடு நாள்.. தமிழன் என்று சொல்லடா... தலை நிமிர்ந்து நில்லடா... நம் தமிழ்நாடு!
{{comments.comment}}