வாஷிங்டன், சியாட்டில் அலுவலகங்களை காலி செய்த மெட்டா, பேஸ்புக்.. ஒர்க் ஃபிரம் ஹோம் அமல்!

Jan 16, 2023,01:06 PM IST
கலிபோர்னியா: பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனமும், அதேபோல மைக்ரோசாப்ட் நிறுவனமும் அமெரிக்காவின் சியாட்டில், வாஷிங்டன் நகர்களில் உள்ள தங்களது அலுவலகங்களை காலி செய்துள்ளன. அங்கு பணியாற்றும் ஊழியர்களில் பெரும்பாலானோரை வீட்டிலிருந்து வேலை பார்க்குமாறு இந்த நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளனர். பலர் வேலையை விட்டு அனுப்பப்பட்டுள்ளனர்.



பேஸ்புக் நிறுவனம், சியாட்டில் நகரில் உள்ள 6 மாடிக் கட்டடத்தையும், வாஷிங்டனின் பெல்லுவியில் உள்ள 11 மாடிக் கட்டடத்தையும் காலி செய்து விட்டு அதை சப் லீசுக்கு விட முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. சியாட்டிலில் உள்ள மேலும் சில அலுவலகங்களையும் காலிசெய்து விட்டு அவற்றை சப் லீசுக்கு விட அது தீர்மானித்துள்ளதாம். பொருளாதார நெருக்கடியைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாம்.

அதேபோல மைக்ரோசாப்ட் நிறுவனம் பெல்லுவியில் உள்ள 26 மாடிக் கட்டட அலுவலகத்தின் வாடகை ஒப்பந்தத்தை நீட்டிப்பதில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளதாம். அடுத்த ஆண்டு ஜூன் மாதத்துடன் இந்த ஒப்பந்தம் முடிவுக்கு வருகிறது. அதன் பின்னர் அலுவலகத்தை காலி செய்ய அது தீர்மானித்துள்ளது.

பெரும்பாலான தகவல் தொழில்நுட்ப் நிறுவனங்கள் பொருளாதார சிக்கன நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். பல நிறுவனங்கள் ஆட்குறைப்பில் ஈடுபட்டுள்ளன. பலர் வீட்டிலிருந்து வேலை பார்க்குமாறு ஊழியர்களைக் கேட்டுக் கொண்டு வருகின்றனர். இதனால் செலவுகள் குறைவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். பெரும்பாலான ஐடி நிறுவனங்களில் வீட்டிலிருந்து வேலை பார்க்கும் கலாச்சாரம் தொடர்கிறது அல்லது அதிகரித்துள்ளது.

கடந்த நவம்பர் மாதம் மெட்டா நிறுவனம் சியாட்டிலில் வேலை பார்த்து வந்த 726 ஊழியர்களை பணி நீக்கம் செய்தது. நிதி நிலைமை சரியில்லாத காரணத்தால் இதுபோன்ற நடவடிக்கைகள் அவசியமாவதாக மெட்டா விளக்கம் கொடுத்துள்ளது.

சியாட்டிலில் மட்டும் 29 கட்டடங்களில் மெட்டா அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. மொத்தமாக 8000 பணியாளர்கள் வேலை பார்க்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தலைமை அலுவலகமான மென்லோ பார்க் வளாகத்தை விட்டு அதிக அளவில் பணியாளர்கள் வேலை பார்க்கும் நகரம் சியாட்டில்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சியாட்டில் நகரில் ஏராளமான ஐடி நிறுவனங்கள் உள்ளன. அவற்றில் பாதி தற்போது காலியாகத்தான் இருக்கிறதாம்.

சமீபத்திய செய்திகள்

news

கரூர் சம்பவ வழக்கை சிபிஐ விசாரிக்கும்.. 3 பேர் கொண்ட கண்காணிப்புக் குழு.. .சுப்ரீம் கோர்ட் உத்தரவு

news

போலி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதா.. தனியாக விசாரிப்போம்.. உச்சநீதிமன்றம் அறிவிப்பு

news

கரூர் கூட்ட நெரிசல் வழக்கை... சிபிஐக்கு மாற்றியதில் மகிழ்ச்சி... அண்ணாமலை

news

கரூர் வழக்கை சிபிஐக்கு மாற்றியது ஏன்? : உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து சீமான் கேள்வி

news

கரூர் விவகாரத்திற்கு பின்னால்... ஏதோ அருவருப்பான அரசியல் காரணம் ஒளிந்துள்ளது: நயினார் நாகேந்திரன்!

news

வானிலை விடுத்த அலர்ட்.. 16 மாவட்டங்களுக்கு கனமழைக்கான வாய்ப்பு!

news

தமிழ்நாடு சட்டசபைத் தொடர் நாளை கூடுகிறது.. 3 நாட்கள் கூட்டம் நடைபெறும்

news

சுப்ரீம் கோர்ட் உத்தரவால் சாதகமான சூழல்.. மீண்டும் பிரச்சாரத்தை துவக்குவாரா விஜய்?

news

கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை உண்மைகளை வெளிக்கொண்டு வரும்: டாக்டர் அன்புமணி ராமதாஸ்

அதிகம் பார்க்கும் செய்திகள்