சேலம்: நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக காவிரியில் நீர்வரத்து அதிகரித்து வரும் நிலையில், தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 75 அடியை தாண்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்குப் பருவ மழை அதி தீவிரம் அடைந்ததை அடுத்து கர்நாடகா காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. அதே போல் கேரளா வயநாடு நீர் பிடிப்பு பகுதிகளிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ண சாகர் அணைகளுக்கு நாளுக்கு நாள் நீர்வரத்து அதிகரித்து கொண்டே வருகிறது.
குறிப்பாக கபினி மற்றும் கிருஷ்ண சாகர் அணை முழுவதுமாக நிரம்பியதால் கரையோரம் வசிக்கும் மக்களின் பாதுகாப்பை கருதி காவிரியில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் ஒகேனக்கலில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. ஒகேனக்கலில் நேற்று இரவு வரை வினாடிக்கு 60 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில், இன்று காலை 74 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது.
மேலும் ஒகேனக்கலில் நீர்வரத்து அதிகரித்துக் கொண்டே வருவதால் ஆற்றியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஏழாவது நாளாக ஒக்கேனக்கலில் படகு சவாரி நிறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் சுற்றுலா பயணிகள் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 64, 033 கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேட்டூர் அணைக்கு நேற்று இரவு 58,934 கன அடியாக நீர் வரத்து வந்து கொண்டிருந்த நிலையில், தற்போது 64,033 கன அடியாக அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம் 120 அடி ஆகும். தற்போது காவிரியில் உபரி நீர் திறக்கப்பட்டு நீர்வரத்து அதிகரிப்பதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 75 அடியை தாண்டி உள்ளது. அணையின் நீர்மட்டம் கடந்த 24 மணி நேரத்தில் 7 அடி வரை உயர்ந்துள்ளது. இதனால் நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து நீர் வரத்தை கண்காணிக்கவும் சேலம் மாவட்ட ஆட்சியாளர் உத்தரவிட்டுள்ளார்.
அகமதாபாத் விமான விபத்து.. குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
அகமதாபாத்தில் விமான விபத்து...133 பேர் பலி... பயணிகளில் 169 பேர் இந்தியர்கள்.. ஏர் இந்தியா தகவல்!
அகமதாபாத்தில் விமான விபத்து... விடுதியில் சாப்பிட்டு கொண்டிருந்த மருத்துவ மாணவர்கள் 5 பேர் பலி?
ராஜ்யசபா எம்.பி ஆனார் ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன்.. அதிமுக, திமுக வேட்பாளர்களும் வெற்றி!
விமான விபத்தில் சிக்கிய.. முன்னாள் குஜராத் முதல்வர் விஜய் ரூபானி எப்படி இருக்கிறார்?
அகமதாபாத்தில் பரபரப்பு.. ஏர்இந்தியா விமானம் விழுந்து நொறுங்கியது.. 200 பயணிகளின் நிலை என்ன?
காவல்துறை தரம்தாழ்ந்துவிட்டது... இதுதான் திராவிட மாடல் திமுக அரசு தமிழை வளர்க்கும் முறையா?: சீமான்!
6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு… 2 நாட்களுக்கு ரெட் அலர்ட்... வானிலை ஆய்வு மையம்
என்னை குலசாமி என சொல்லிக்கொண்டே நெஞ்சில் குத்துகிறார்கள்: டாக்டர் ராமதாஸ் வேதனை பேச்சு!
{{comments.comment}}