சேலம்: 99 வயதாகும் மேட்டூர் அணையானது, 43வது முறையாக தனது முழுக் கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது. காவிரிப் பாசனப் பகுதி விவசாயிகளுக்கு காதில் தேன் பாய்ந்தது போல வந்து சேர்ந்துள்ளது இந்த செய்தி. நேற்றே 120 அடியை எட்டியிருக்க வேண்டிய நிலையில் நீர் வரத்து குறைந்ததால் சற்று தாமதமாகி இன்று மாலை காவிரி அன்னை, மேட்டூர் அணையை நிரப்பி அனைவரது வயிற்றிலும் பால் வார்த்துள்ளாள்.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை எதிரொலியாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வந்தது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் எப்போது வேண்டுமானாலும் முழு கொள்ளளவை எட்டும் என்ற நிலை இருந்தது. தற்போது மாலை 6 மணி அளவில் அணை தனது முழுக் கொள்ளளவை எட்டியது.
தற்போது அணைக்கு வரும் உபரி நீரை அப்படியே திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக விநாடிக்கு 46,000 கன அடி நீர் திறக்கப்படுகிறது. இது படிப்படியாக 80,000 கன அடி வரை அதிகரிக்கப்படும் என்று தெரிகிறது. நீர் வரத்தைப் பொறுத்து இது மேலும் அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக அதிகப்படியான உபரி நீர் திறக்க வாய்ப்பு உள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையை தமிழக அரசு ஏற்கனவே விடுத்திருந்தது. இதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. மேலும், 1.25 லட்சம் கன அடி வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக நீர்வள துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கை:
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று (30.7.2024) காலை 8 மணி அளவில் 118.840 அடியை எட்டியுள்ளது. அணையில் நீர்வரத்து அதிகப்படியாக உள்ளதால் அணையின் நீர்மட்டம் விரைவில் அதிகபட்ச கொள்ளளவான 120 அடியை எட்டும் என்றும், அணையில் இருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் 75 ஆயிரம் கன அடி முதல் ஒரு லட்சத்து 25 ஆயிரம் கன அடி வரை எந்த நேரத்திலும் திறந்து விடலாம் என்றும், திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்படும் என்றும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
எனவே காவிரி கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் அவர்களின் உயிர் மற்றும் உடைமைகளின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வால்பாறையில் இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பு இல்லை: தேர்தல் ஆணையம்
தொண்டர் உயிரிழந்த சம்பவம்... ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மீது வழக்குப்பதிவு!
பாஜகவிற்கு அடிமை சாசனம் எழுதிக் கொடுத்துவிட்டது அதிமுக: அமைச்சர் சேகர்பாபு
ஆந்திராவும், கர்நாடகாவும் உழவர்களைக் காக்கின்றன: தமிழக அரசு துரோகம் செய்கிறது: டாக்டர் அன்புமணி!
சோமவார பிரதோஷம்.. மனதினில் நிறைந்திடும் பசுபதியே போற்றி போற்றி!
சற்று குறைந்தது தங்கம் விலை... இதோ இன்றைய விலை நிலவரம்!
Middle East uncertainity: ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதலால் இந்தியப் பங்குச்சந்தைகளில் கடும் சரிவு
சென்னையில் அதிகரித்து வரும் இரவு நேர வெப்ப நிலை.. இதுதான் காரணம்.. விழிப்புணர்வு தேவை
விஜய் 51.. தவெக தொண்டர்கள், ரசிகர்கள் கோலாகல கொண்டாட்டம்.. தலைவர்கள் வாழ்த்து
{{comments.comment}}