சென்னை: காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை தொடரும் என தமிழ்நாடு வெதர்மேன் அறிவித்துள்ள நிலையில், மேட்டூர் அணைக்கு தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்து வருகிறது. தற்போது விநாடிக்கு 53,098 கன அடி என்ற அளவில் நீர் வந்து கொண்டுள்ளது.
கர்நாடக மாவட்டம் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் காவிரி அணைக்கு நீரின் வரத்து அதிகரித்து, அணைகளின் நீர் மட்டமும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. குறிப்பாக தல காவிரியில் கடந்த 12 மணி நேரத்தில் 23 செமீ மழை பதிவாகியுள்ளது. அதேபோல் கே ஆர் எஸ், ஹாரங்கி மற்றும் ஹேமாவதி அணை பகுதிகளில் தலா 7 சென்டிமீட்டர் மழையும், கபினி அணை பகுதிகளில் 5 சென்டிமீட்டர் மழையும், பெய்துள்ளது.
கேஆர்எஸ் எனப்படும் கிருஷ்ண சாகர் அணையின் நீர்மட்டம் 114 அடி ஆகும். தற்போது இந்த அணையில் விநாடிக்கு 40000 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. அணையிலிருந்து விநாடிக்கு 5000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. கபினி அணையின் நீர்மட்டம் 63 அடி ஆகும். தற்போது அணைக்கு விநாடிக்கு 43 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. அணையிலிருந்து விநாடிக்கு 47 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது அதேபோல் ஹாரங்கி அணையிலிருந்து விநாடிக்கு 20000 கன அடி நீரும், ஹேமாவதி அணையிலிருந்து 26,500 கன அடி நீரும் வெளியேற்றப்படுகிறது
கன மழை தொடரும்
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் அடுத்த 10 முதல் 14 நாட்களுக்கு கனமழை தொடரும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இதன்படி கிருஷ்ணர் சாகர் அணையின் நீர்மட்டம் நிரம்பும் தருவாயில் உள்ள நிலையில், இந்த அணையிலிருந்து அதிகபட்சம் தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளது. இதனை அடுத்து மேட்டூர் அணைக்கு மிக விரைவிலேயே விநாடிக்கு ஒரு லட்சம் கன அடி தண்ணீர் வர வாய்ப்புள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தொடர் மழை காரணமாக காவிரி அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டு வரும் நிலையில் மேட்டூர் அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. அணையின் நீர்மட்டம் நேற்று 61.81 அடியாக இருந்த நிலையில், மேலும் நீர்வரத்து அதிகரித்து இன்று காலை மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 53,098 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து விநாடிக்கு ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 62 அடியை நெருங்கி வருகிறது.
காவிரியில் தொடர்ந்து நீர் வரத்து அபரிமிதமாக இருக்கும் பட்சத்தில் அணை நிரம்புவதற்கான வாய்ப்புகளை எதிர்பார்க்கலாம். மேட்டூர் அணையின் மொத்த நீர் மட்டம் 120 அடியாகும்.
இன்னும் எத்தனை காலந்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே சொந்த நாட்டிலே நம் நாட்டிலே?: டாக்டர் அன்புமணி
எப்போது வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போது அஜித்தை வைத்து படம் இயக்குவேன்: லோகேஷ் கனகராஜ்
சென்னையில் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு திட்டம் தொடக்கம்: அமைச்சர் தங்கம் தென்னரசு
அவதூறு பரப்புகிறார்கள்..போற்றுவோர் போற்றட்டும்..புழுதி வாரி தூற்றுவோர் தூற்றட்டும்..டாக்டர் ராமதாஸ்
மலையாள நடிகை மினு முனீர் கைது.. சிறுமியை தவறாகப் பயன்படுத்தியதாக சென்னையில் புகார்
பணி நிரந்தரம் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் கைதுக்கு ஈபிஎஸ் கண்டனம்
Coolie Movie Review: ரஜினியின் "கூலி" படம் எப்படி இருக்கு.. தியேட்டர் அதிருதா.. இல்லை..?
ஆபரணத் தங்கத்தின் விலை இன்று எவ்வளவு தெரியுமா?
79வது சுதந்திர தினம்.. தாய்த் திருநாட்டின் தியாகிகளுக்கு சல்யூட்.. பாரத அன்னைக்கு வணக்கம்!
{{comments.comment}}