மெக்சிகோ சிட்டி: மெர்சிகோவில் ஒரு காமெடியான சம்பவம் நடந்துள்ளது. பொதுமக்களை மிரட்டியதாக கூறி ஒரு பொம்மையைக் கைது செய்துள்ளது அந்த நாட்டு போலீஸ்.
சிரித்த முகத்துடன் இருக்கும் அந்த குட்டி பாப்பா பொம்மைக்கு கை விலங்கு மாட்டியதோடு, வழக்கமாக கைது செய்யப்பட்டவர்களை போட்டோ எடுப்பது போல இதையும் போட்டோ எடுத்து பலரின் கேலிக்குள்ளாகியுள்ளது மெக்சிகோ போலீஸ்.

இந்தக் கைதுக்கான பின்னணி சுவாரஸ்யமானது...!
செப்டம்பர் 11ம் தேதி வடக்கு மெக்சிகோவின் மான்க்ளோவா நகரில் ஒரு நபர் மீது போலீஸுக்குப் புகார் வந்தது. அவர் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும், இடையூறு செய்யும் வகையிலும் நடந்து கொள்வதாக புகார் வந்தது. இதையடுத்து போலீஸார் அவரைக் கைது செய்தனர். அவரது பெயர் கார்லோஸ். இவர் தனது கையில் வைத்திருந்த பெரிய சைஸ் பொம்மையைக் காட்டி மக்களை மிரட்டியதாக போலீஸார் கூறுகின்றனர். எனவே கார்லோஸைக் கைது செய்தபோது இந்த பொம்மையையும் சேர்த்துக் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில் இந்த பொம்மையின் கையில் கத்தி இருந்தது. அதை வைத்து பொதுமக்களை அச்சுறுத்தியுள்ளனர். மக்களின் முகத்தில் அடித்துள்ளனர். இது குற்றச் செயலாகும். எனவேதான் பொம்மையும் பறிமுதல் செய்யப்பட்டது என்று கூறியுள்ளது போலீஸ்.
காவல் நிலையத்தில் அந்த பொம்மையின் தலையைத் தூக்கிப் பிடித்து போட்டோ எடுத்தபோது அங்கிருந்த போலீஸார் சிரித்து ரசித்துள்ளனர். இந்த சம்பவம் மெக்சிகோவில் கேலிக்கூத்தான நிலையில் உயர் போலீஸ் அதிகாரிகள், சம்பந்தப்பட்ட போலீஸாரைக் கண்டித்துள்ளனர். அந்த பொம்மையையும் விட்டு விடுமாறு உத்தரவிட்டனர். கைது செய்யப்பட்ட நபரும் விடுவிக்கப்பட்டார்.
இந்த பொம்மைக்கு மெக்சிகோவில் சக்கி பொம்மை என்று பெயர். இது 1988ம் ஆண்டு வெளியான சைல்ட்ஸ் பிளே என்ற படத்தில் இடம் பெற்று பிரபலமான பொம்மையாகும். அது ஒரு ஹாரர் படம். ஒரு பையனின் ஆத்மா இந்த பொம்மைக்குள் வருவது போல கதை அமைக்கப்பட்டிருக்கும். அன்று முதல் மெக்சிகோவில் இந்த சக்கி பொம்மை பிரபலமாகி விட்டது.
RIP Bharathiraja: பாசத்திற்குரிய பாரதிராஜா.. காலமானார் இயக்குநர் இமயம்.. கண்ணீரில் தமிழ் சினிமா
RIP Bharathiraja: இயக்குனர் பாரதிராஜாவின் இறுதிச்சடங்கு.. நாளை அரசு மரியாதையுடன் நல்லடக்கம்!
தவெக எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் அவசரக் கூட்டம்.. நாளை கூடுகிறது
இந்தியாவின் மிக நீண்ட கால பிரதமர்.. நரேந்திர மோடி சாதனை.. உலகத் தலைவர்கள் வாழ்த்து!
இயக்குனர் இமயம் பாரதிராஜா.. அந்த முட்டத்து கடல் அலைகள் கடற்கரை மணல்கள் கண்ணீர் விடுகிறது!
பாஜகவிலிருந்து விலகினார் அமர் பிரசாத் ரெட்டி...தலைமை மீது பகீர் குற்றச்சாட்டு
சிந்தனைச் சிதறல்.. நின்ற இடத்திலேயே வெல்வது எப்படி?
பரம ஏகாதசி.. 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் ஏகாதசி.. பாவங்கள் நீங்கும்
Kalaiyarasi Muthuvel Poem: அமிலம் கொட்டினாலும் ஆழ்துளையிட்டாலும்!
{{comments.comment}}