சென்னை: கூத்தாடி என்ற சொல்லை சுக்கு நூறாக உடைத்து புரட்சி படைத்தவர் எம்ஜிஆர் என்று தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய் புகழாரம் சூட்டியுள்ளார்.
முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 108 வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இவரின் பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள், என திரளானோர் கலந்து கொண்டு எம்ஜிஆரின் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். மேலும் அக்கட்சி சார்பில் அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளும் செய்து வருகின்றனர்.

அதேபோல் எம்ஜிஆரின் பிறந்த நாளான ஜனவரி 17ஆம் தேதி ஆண்டுதோறும் தமிழக அரசின் சார்பில் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இன்று தமிழக அரசு சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மேயர் மற்றும் பலர் கலந்து கொண்டு எம்ஜிஆர் மருத்துவப் பல்கலை வளாகத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பிரதமர் நரேந்திர மோடி எம்ஜிஆர் பிறந்த நாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன் என தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு தி கிரேட் எம்ஜிஆர் என்ற வீடியோவை வெளியிட்டு புகழாரம் சூட்டியுள்ளார்.
இந்த நிலையில் நடிகரும் தமிழக வெற்றி கழக தலைவருமான விஜய் எம்ஜிஆருக்கு பிறந்தநாள் வணக்கம் செலுத்தினார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில்,
அளவற்ற வறுமையைத் தாண்டினார்.
கூத்தாடி என்ற கூற்றைச்
சுக்குநூறாக உடைத்து,
தமிழக அரசியல் வரலாற்றின்
மையம் ஆனார்.
அசைக்க முடியாத வெற்றியாளர் ஆனார்.
அவரே தமிழக அரசியலின்
அதிசயம் ஆனார்.
இறந்தும் வாழும், புரட்சித் தலைவருக்குப்
பிறந்தநாள் வணக்கம் என பதிவிட்டுள்ளார் விஜய்.
தவெகவின் முதல் மாநில மாநாட்டில் விஜய் பேசும்போது கூத்தாடி என்று சிலர் கேவலமாக பேசுகிறார்கள். கூத்தாடின்னா என்ன என்று ஆவேசமாக பேசியிருந்தார். சமீபத்தில் கூத்தாடி என்று சில கட்சித் தலைவர்கள் விஜய்யை கூத்தாடி என்று விமர்சித்துப் பேட்டி கொடுத்து வந்தனர். இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தான் தற்போது எம்ஜிஆர் பிறந்த நாளையொட்டி அவர் விடுத்த வாழ்த்துச் செய்தியில் கூத்தாடி என்ற கூற்றை உடைத்தவர் எம்ஜிஆர் என்று கூறி விமர்சகர்களுக்கும் ஒரு குத்து குத்தியுள்ளார் விஜய் என்று பேசப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Cauvery River water Issue: காவிரி நீர் பிரச்சனை எப்போது துவங்கியது? .. இதற்கு என்ன தான் தீர்வு?
முதல்வர் விஜய் கர்நாடகா வர வேண்டாம் : கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார்
டாஸ்மாக் ஊழல் வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமீன்...கைது செய்யவும் தடை
மின்சார கட்டணம் உயர்வு உண்மையா? - அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!
வருமான வரி தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்...தவறவிட்டால் அபராதம்
காவல் நிலையத்தில் ஆஜராவதில் இருந்து 6 நாட்கள் விலக்கு கோரி செந்தில் பாலாஜி மனு
2027 ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட்: 3 நாடுகளின் 12 மைதானங்களில் போட்டிகள் நடைபெறும்
ஜெர்மனியில் கடும் வெப்ப அலை: பலியானோர் எண்ணிக்கை 10,000 ஆக உயர்வு!
மேகதாது அணை விவகாரம்: தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் தீவிர ஆலோசனை!
{{comments.comment}}