சென்னை: கூத்தாடி என்ற சொல்லை சுக்கு நூறாக உடைத்து புரட்சி படைத்தவர் எம்ஜிஆர் என்று தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய் புகழாரம் சூட்டியுள்ளார்.
முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 108 வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இவரின் பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள், என திரளானோர் கலந்து கொண்டு எம்ஜிஆரின் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். மேலும் அக்கட்சி சார்பில் அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளும் செய்து வருகின்றனர்.

அதேபோல் எம்ஜிஆரின் பிறந்த நாளான ஜனவரி 17ஆம் தேதி ஆண்டுதோறும் தமிழக அரசின் சார்பில் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இன்று தமிழக அரசு சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மேயர் மற்றும் பலர் கலந்து கொண்டு எம்ஜிஆர் மருத்துவப் பல்கலை வளாகத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பிரதமர் நரேந்திர மோடி எம்ஜிஆர் பிறந்த நாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன் என தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு தி கிரேட் எம்ஜிஆர் என்ற வீடியோவை வெளியிட்டு புகழாரம் சூட்டியுள்ளார்.
இந்த நிலையில் நடிகரும் தமிழக வெற்றி கழக தலைவருமான விஜய் எம்ஜிஆருக்கு பிறந்தநாள் வணக்கம் செலுத்தினார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில்,
அளவற்ற வறுமையைத் தாண்டினார்.
கூத்தாடி என்ற கூற்றைச்
சுக்குநூறாக உடைத்து,
தமிழக அரசியல் வரலாற்றின்
மையம் ஆனார்.
அசைக்க முடியாத வெற்றியாளர் ஆனார்.
அவரே தமிழக அரசியலின்
அதிசயம் ஆனார்.
இறந்தும் வாழும், புரட்சித் தலைவருக்குப்
பிறந்தநாள் வணக்கம் என பதிவிட்டுள்ளார் விஜய்.
தவெகவின் முதல் மாநில மாநாட்டில் விஜய் பேசும்போது கூத்தாடி என்று சிலர் கேவலமாக பேசுகிறார்கள். கூத்தாடின்னா என்ன என்று ஆவேசமாக பேசியிருந்தார். சமீபத்தில் கூத்தாடி என்று சில கட்சித் தலைவர்கள் விஜய்யை கூத்தாடி என்று விமர்சித்துப் பேட்டி கொடுத்து வந்தனர். இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தான் தற்போது எம்ஜிஆர் பிறந்த நாளையொட்டி அவர் விடுத்த வாழ்த்துச் செய்தியில் கூத்தாடி என்ற கூற்றை உடைத்தவர் எம்ஜிஆர் என்று கூறி விமர்சகர்களுக்கும் ஒரு குத்து குத்தியுள்ளார் விஜய் என்று பேசப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மதுரை குலுங்கக் குலுங்க.. பச்சைப் பட்டுடுத்தி.. வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்
மே 1.. ரத்தத்தால் எழுதப்பட்ட தியாக வரலாற்றின் நினைவுச்சின்னம்!
May 1: 'ஒவ்வொரு வேர்வைக்கும் வெற்றி வேர் வைக்கும்!'
உலகத் தொழிலாளர்களே.. சிகாகோவில் ஒலித்து உலகெங்கும் பிரதிபலித்த உரிமைக் குரல்!
ஆற்றில் இறங்கிய அழகனைப் பார்!
RS Kumar Poem: தூரத்து வானத்தில்.. மங்கிய வெளிச்சத்தில்.. ஒன்றல்ல ஓராயிரம்
ஏப்பா.. பிள்ளைகளுக்கு வலிக்காம காது குத்துப்பா.. (கோடாங்கி 11)
Workers’ Day – A Note of Gratitude.. தொழிலாளர்களின் அர்ப்பணிப்பும் உழைப்பின் மதிப்பும்!
Dr Thangalakshmi Poem on May day: உழைப்பின் உன்னத தினம்!
{{comments.comment}}