சென்னை: கூத்தாடி என்ற சொல்லை சுக்கு நூறாக உடைத்து புரட்சி படைத்தவர் எம்ஜிஆர் என்று தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய் புகழாரம் சூட்டியுள்ளார்.
முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 108 வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இவரின் பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள், என திரளானோர் கலந்து கொண்டு எம்ஜிஆரின் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். மேலும் அக்கட்சி சார்பில் அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளும் செய்து வருகின்றனர்.

அதேபோல் எம்ஜிஆரின் பிறந்த நாளான ஜனவரி 17ஆம் தேதி ஆண்டுதோறும் தமிழக அரசின் சார்பில் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இன்று தமிழக அரசு சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மேயர் மற்றும் பலர் கலந்து கொண்டு எம்ஜிஆர் மருத்துவப் பல்கலை வளாகத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பிரதமர் நரேந்திர மோடி எம்ஜிஆர் பிறந்த நாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன் என தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு தி கிரேட் எம்ஜிஆர் என்ற வீடியோவை வெளியிட்டு புகழாரம் சூட்டியுள்ளார்.
இந்த நிலையில் நடிகரும் தமிழக வெற்றி கழக தலைவருமான விஜய் எம்ஜிஆருக்கு பிறந்தநாள் வணக்கம் செலுத்தினார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில்,
அளவற்ற வறுமையைத் தாண்டினார்.
கூத்தாடி என்ற கூற்றைச்
சுக்குநூறாக உடைத்து,
தமிழக அரசியல் வரலாற்றின்
மையம் ஆனார்.
அசைக்க முடியாத வெற்றியாளர் ஆனார்.
அவரே தமிழக அரசியலின்
அதிசயம் ஆனார்.
இறந்தும் வாழும், புரட்சித் தலைவருக்குப்
பிறந்தநாள் வணக்கம் என பதிவிட்டுள்ளார் விஜய்.
தவெகவின் முதல் மாநில மாநாட்டில் விஜய் பேசும்போது கூத்தாடி என்று சிலர் கேவலமாக பேசுகிறார்கள். கூத்தாடின்னா என்ன என்று ஆவேசமாக பேசியிருந்தார். சமீபத்தில் கூத்தாடி என்று சில கட்சித் தலைவர்கள் விஜய்யை கூத்தாடி என்று விமர்சித்துப் பேட்டி கொடுத்து வந்தனர். இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தான் தற்போது எம்ஜிஆர் பிறந்த நாளையொட்டி அவர் விடுத்த வாழ்த்துச் செய்தியில் கூத்தாடி என்ற கூற்றை உடைத்தவர் எம்ஜிஆர் என்று கூறி விமர்சகர்களுக்கும் ஒரு குத்து குத்தியுள்ளார் விஜய் என்று பேசப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
{{comments.comment}}