சென்னை: கூத்தாடி என்ற சொல்லை சுக்கு நூறாக உடைத்து புரட்சி படைத்தவர் எம்ஜிஆர் என்று தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய் புகழாரம் சூட்டியுள்ளார்.
முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 108 வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இவரின் பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள், என திரளானோர் கலந்து கொண்டு எம்ஜிஆரின் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். மேலும் அக்கட்சி சார்பில் அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளும் செய்து வருகின்றனர்.
அதேபோல் எம்ஜிஆரின் பிறந்த நாளான ஜனவரி 17ஆம் தேதி ஆண்டுதோறும் தமிழக அரசின் சார்பில் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இன்று தமிழக அரசு சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மேயர் மற்றும் பலர் கலந்து கொண்டு எம்ஜிஆர் மருத்துவப் பல்கலை வளாகத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பிரதமர் நரேந்திர மோடி எம்ஜிஆர் பிறந்த நாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன் என தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு தி கிரேட் எம்ஜிஆர் என்ற வீடியோவை வெளியிட்டு புகழாரம் சூட்டியுள்ளார்.
இந்த நிலையில் நடிகரும் தமிழக வெற்றி கழக தலைவருமான விஜய் எம்ஜிஆருக்கு பிறந்தநாள் வணக்கம் செலுத்தினார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில்,
அளவற்ற வறுமையைத் தாண்டினார்.
கூத்தாடி என்ற கூற்றைச்
சுக்குநூறாக உடைத்து,
தமிழக அரசியல் வரலாற்றின்
மையம் ஆனார்.
அசைக்க முடியாத வெற்றியாளர் ஆனார்.
அவரே தமிழக அரசியலின்
அதிசயம் ஆனார்.
இறந்தும் வாழும், புரட்சித் தலைவருக்குப்
பிறந்தநாள் வணக்கம் என பதிவிட்டுள்ளார் விஜய்.
தவெகவின் முதல் மாநில மாநாட்டில் விஜய் பேசும்போது கூத்தாடி என்று சிலர் கேவலமாக பேசுகிறார்கள். கூத்தாடின்னா என்ன என்று ஆவேசமாக பேசியிருந்தார். சமீபத்தில் கூத்தாடி என்று சில கட்சித் தலைவர்கள் விஜய்யை கூத்தாடி என்று விமர்சித்துப் பேட்டி கொடுத்து வந்தனர். இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தான் தற்போது எம்ஜிஆர் பிறந்த நாளையொட்டி அவர் விடுத்த வாழ்த்துச் செய்தியில் கூத்தாடி என்ற கூற்றை உடைத்தவர் எம்ஜிஆர் என்று கூறி விமர்சகர்களுக்கும் ஒரு குத்து குத்தியுள்ளார் விஜய் என்று பேசப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
அணு ஆயுதங்களைக் காட்டி இந்தியாவை யாரும் மிரட்ட முடியாது.. பிரதமர் மோடி எச்சரிக்கை
தனியார் துறையில் முதல் வேலை பெறுவோருக்கு ரூ. 15,000.. புதிய திட்டத்தை அறிவித்தார் பிரதமர் மோடி
சிறந்த மாநகராட்சியாக ஆவடி, நாமக்கல் தேர்வு.. சென்னை சுதந்திர தின விழாவில் விருது
வருடாந்திர பாஸ்டாக் பாஸ்.. இன்று முதல் அமலுக்கு வந்தது.. யாருக்கெல்லாம் லாபம்?
50 ஆண்டு கால திரைப்பயணம்... வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!
பிரதமர் மோடி அறிவித்த டபுள் தீபாவளி.. ஜிஎஸ்டி வரி விதிப்பில் என்னெல்லாம் மாற்றம் இருக்கும்?
சுதந்திரம்.. ஆன்மீகம்.. இரண்டுக்கும் தொடர்பிருக்கு தெரியுமா?
சுகமாய் சுற்றித் திரிவோரே.. இன்று மட்டுமாயின்.. ஒர் நாழிகையேனும் நினைவுகூறுக!
சுதந்திரம் காப்போம்!
{{comments.comment}}