புதுடில்லி: Crowd strike அப்டேட்டில் ஏற்பட்ட மாறுதல்களால் மைக்ரோசாப்ட் இயங்குதளம், செயலிகள் மற்றும் சேவைகள் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது.
பிரபல மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸில் ஏற்பட்ட திடீர் பாதிப்பு காரணமாக பல்வேறு சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. சாப்ட்வேர் அப்டேட்டில் ஏற்பட்ட மாறுதல் தான் இந்த பாதிப்பு ஏற்படுவதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. உலகம் முழுவதும் Microsoft பயனாளர்களின் பலரது கணினிகளில் 'Blue Screen of Death' Error ஏற்பட்டுள்ளது. இந்தியா மட்டும் இன்றி பல்வேறு நாடுகளிலும் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் விமான சேவைகள் பாதிப்பு:

இதன் காரணமாக தொழில்நுட்பம், மீடியா, ஏர்லைன்ஸ், வங்கி சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. சென்னை, டெல்லி, மும்பை போன்ற விமான நிலையங்களில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. வின்டோஸ் சாப்வேர் குளறுபடியால் பயணிகளுக்கு போர்டிங் பாஸ் கையால் எழுதி கொடுத்து வருவதால் விமானங்கள் புறப்பட தாமதமாகி வருகிறது. விரைவில் சேவையில் ஏற்பட்டுள்ள பாதிப்பு சரிசெய்யப்பட்டு இயல்பு நிலை திரும்பும் எனவும், வியாழன் மாலை கிளவுட் சேவைகளில் பாதிப்பு உருவானது என்றும், சிக்கல்களை கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளதாக Microsoft நிறுவனம் தெரிவித்துள்ளது.
மைக்ராசாஃப்ட் வின்டோஸ் பயன்படுத்தும் பல ஆயிரம் கம்யூட்டர்கள் மற்றும் பேப்டாப்கள் செயல் இழப்பால் உலகளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் விண்டோஸ் சேவைகள் முடங்கியுள்ளன. லண்டனைச் சேர்ந்த ஸ்கை நியூஸ் ஒளிபரப்பை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. இதனை ஸ்கை நியூஸ் ஸ்போர்ட்ஸ் தொகுப்பாளர் ஜாக்கி பெல்ட்ராவ் தனது இணையதள பதிவில், "ஒளிபரப்பை தொடர முயற்சித்து வருகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
மைக்ரோசாப்ட் நிறுவனம் மாதம் தோறும் சாப்வேர் அப்டேட் செய்து வருவதாகவும், இந்த முறை தான் இது போன்ற தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டு விட்டதாகவும் வல்லுனர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஜக, திமுக, அதிமுக.. அடுத்தடுத்து ஆளுநரை சந்தித்த தலைவர்கள்.. தவெக அரசுக்கு நெருக்கடியா?
ஜூலை 20 முதல் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர்: மத்திய அரசு அறிவிப்பு
Lookout Notice: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு லுக் அவுட் நோட்டீஸ்
குதிரை பேர விவகாரம் : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, தம்பி அசோக் ஆஜராக சம்மன்
Lokbhavan announcement: மக்கள் இனி ஆளுநர் மாளிகையில் புகார் அளிக்கலாம் : ஆளுநர் மாளிகை தகவல்
சி.விஜயபாஸ்கர் மீதான குட்கா வழக்கு: 12 வாரங்களுக்குள் விசாரித்து முடிக்க உத்தரவு
ADMK: அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை
"நான் வெளிநாட்டில் இருந்தாலும் என் மனம் அறிவாலயத்தில் தான் இருக்கும்" – மு.க.ஸ்டாலின் உருக்கம்!
சகோதரரை வீடு புகுந்து தாக்கிய வழக்கு: அமைச்சர் மரியவில்சன் ஆஜராகவில்லை
{{comments.comment}}