புதுடில்லி: Crowd strike அப்டேட்டில் ஏற்பட்ட மாறுதல்களால் மைக்ரோசாப்ட் இயங்குதளம், செயலிகள் மற்றும் சேவைகள் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது.
பிரபல மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸில் ஏற்பட்ட திடீர் பாதிப்பு காரணமாக பல்வேறு சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. சாப்ட்வேர் அப்டேட்டில் ஏற்பட்ட மாறுதல் தான் இந்த பாதிப்பு ஏற்படுவதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. உலகம் முழுவதும் Microsoft பயனாளர்களின் பலரது கணினிகளில் 'Blue Screen of Death' Error ஏற்பட்டுள்ளது. இந்தியா மட்டும் இன்றி பல்வேறு நாடுகளிலும் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் விமான சேவைகள் பாதிப்பு:

இதன் காரணமாக தொழில்நுட்பம், மீடியா, ஏர்லைன்ஸ், வங்கி சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. சென்னை, டெல்லி, மும்பை போன்ற விமான நிலையங்களில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. வின்டோஸ் சாப்வேர் குளறுபடியால் பயணிகளுக்கு போர்டிங் பாஸ் கையால் எழுதி கொடுத்து வருவதால் விமானங்கள் புறப்பட தாமதமாகி வருகிறது. விரைவில் சேவையில் ஏற்பட்டுள்ள பாதிப்பு சரிசெய்யப்பட்டு இயல்பு நிலை திரும்பும் எனவும், வியாழன் மாலை கிளவுட் சேவைகளில் பாதிப்பு உருவானது என்றும், சிக்கல்களை கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளதாக Microsoft நிறுவனம் தெரிவித்துள்ளது.
மைக்ராசாஃப்ட் வின்டோஸ் பயன்படுத்தும் பல ஆயிரம் கம்யூட்டர்கள் மற்றும் பேப்டாப்கள் செயல் இழப்பால் உலகளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் விண்டோஸ் சேவைகள் முடங்கியுள்ளன. லண்டனைச் சேர்ந்த ஸ்கை நியூஸ் ஒளிபரப்பை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. இதனை ஸ்கை நியூஸ் ஸ்போர்ட்ஸ் தொகுப்பாளர் ஜாக்கி பெல்ட்ராவ் தனது இணையதள பதிவில், "ஒளிபரப்பை தொடர முயற்சித்து வருகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
மைக்ரோசாப்ட் நிறுவனம் மாதம் தோறும் சாப்வேர் அப்டேட் செய்து வருவதாகவும், இந்த முறை தான் இது போன்ற தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டு விட்டதாகவும் வல்லுனர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று முதல் நவம்பர் 7ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்!
ஸ்ரீகாகுளம் கோவில் நிர்வாகம் அனுமதி வாங்கவில்லை...விசாரணைக்கு ஆந்திர முதல்வர் உத்தரவு
அரசின் தோல்விக்காக.. ஆசிரியர்கள் மற்றும் கல்வி அதிகாரிகளை கையேந்த வைப்பது கண்டிக்கத்தக்கது: அன்புமணி
மத்திய அரசு பள்ளிகளில் இந்தியை திணிக்கிறது...சித்தராமைய்யா காட்டம்
திமுகவிடம் இருந்து தமிழ்நாட்டை மீட்போம்.. 2026ல் உண்மையான மக்களாட்சியை அமைப்போம்: தவெக தலைவர் விஜய்
Aadhar update ஆதாரில் இன்று முதல் புதிதாக நடைமுறைக்கு வரும் மாற்றங்கள் பற்றி தெரியுமா?
டென்னிஸ் விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோஹன் போபண்ணா அறிவிப்பு
ஸ்ரேயாஸ் ஐயர் சிட்னி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்
தமிழ்நாடு என்றால் தமிழ் என்ற அடையாளத்தை தமிழகம் இழந்து வருகிறது: அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}