சென்னை: தமிழகத்தில் தனியார் பால் நிறுவனமான ஆரோக்கியா பால் இன்று முதல் லிட்டருக்கு ரூ.2 உயர்த்தியுள்ளது. அதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மக்களின் அத்தியாவசிய பொருட்களுள் மிகவும் முக்கியமானதாக இருப்பது பால். இந்த பால் அரசு தயாரிக்கும் ஆவின் பால் மட்டுமின்றி பல தனியார் நிறுவனங்களும் பால் பாக்கெட்டுகளை விற்பனை செய்து வருகின்றன. தமிழகத்தில் மட்டும் ஆவின்பால் தினமும் 18 லட்சம் லிட்டர் பால் பாக்கெட்டில் அடைத்து விற்கப்பட்டு வருகிறது. தனியார் நிறுவனங்கள் மட்டும் சுமார் 1.50 கோடி லிட்டர் பால் பாக்கெட்டுகளை விற்பனை செய்து வருகிறது.

இருப்பினும், ஆவின் பாலை விட தனியார் நிறுவனங்களின் பால் விலை அதிமாகவே உள்ளது. இந்த நிலையில்தான் ஆரோக்கியா பால் நிறுவனம் லிட்டருக்கு ரூ.2 உயர்த்தியுள்ளது. ஆவின் பாலை அடுத்து மக்கள் அதிகமாக வாங்கும் பால் என்றால் அது ஆரோக்கியா தான். ஏற்கனவே ஒரு லிட்டர் 65 ரூபாய்க்கு விற்கப்பட்ட பால் இன்று முதல் 67 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் பால் மட்டும் இன்றி தயிர் உள்ளிட்ட மற்ற பொருட்களின் விலையும் உயர்த்தியுள்ளது.
இந்த விலை உயர்வால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த பால் விலை உயர்விற்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆரோக்கியா நிறுவனத்தின் பால் விலை உயர்வு தமிழகத்தில் மட்டுமின்றி ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா உள்ளிட்ட அண்டைய மாநிலங்களிலும் அமலுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மீண்டும் வரலாறு .. ஜூன் 18ல் ராஜ்யசபா இடைத் தேர்தல்.. தவெகவுக்கு முதல் எம்.பி. கிடைக்க வாய்ப்பு!
திமுகவிடம் கண்ணியம் இல்லை; ஆ.ராசா மன்னிப்பு கேட்கணும்: ஆதவ் அர்ஜூனா ஆவேசம்
ஒரு புதிய வரலாறு.. முதல் முறையாக அமைச்சர் பதவியில் அமர்ந்த விசிக, முஸ்லீம் லீக்!
சாதாரணத்தில் இருந்து அ(மிக)சாதாரணத்திற்கு… (Ordinary to Extraordinary..)
ஆஹா, உன்னைக் காண இதோ வந்து கொண்டே இருக்கிறேன்.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்- 8)
கோடை வெயில் ஆபத்தாகாமல் இருக்க வீட்டில் இந்த 10 தவறுகளை செய்துடாதீங்க
வைகாசி விசாகம் 2026.. முருகப் பெருமானுக்குரிய முக்கிய தினம்.. மிக மிக சிறப்பு!
தாயன்பு !
All Is Well.. சவால்களை நம்பிக்கையுடன் சந்திப்போம்!
{{comments.comment}}