சென்னை: தமிழகத்தில் தனியார் பால் நிறுவனமான ஆரோக்கியா பால் இன்று முதல் லிட்டருக்கு ரூ.2 உயர்த்தியுள்ளது. அதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மக்களின் அத்தியாவசிய பொருட்களுள் மிகவும் முக்கியமானதாக இருப்பது பால். இந்த பால் அரசு தயாரிக்கும் ஆவின் பால் மட்டுமின்றி பல தனியார் நிறுவனங்களும் பால் பாக்கெட்டுகளை விற்பனை செய்து வருகின்றன. தமிழகத்தில் மட்டும் ஆவின்பால் தினமும் 18 லட்சம் லிட்டர் பால் பாக்கெட்டில் அடைத்து விற்கப்பட்டு வருகிறது. தனியார் நிறுவனங்கள் மட்டும் சுமார் 1.50 கோடி லிட்டர் பால் பாக்கெட்டுகளை விற்பனை செய்து வருகிறது.

இருப்பினும், ஆவின் பாலை விட தனியார் நிறுவனங்களின் பால் விலை அதிமாகவே உள்ளது. இந்த நிலையில்தான் ஆரோக்கியா பால் நிறுவனம் லிட்டருக்கு ரூ.2 உயர்த்தியுள்ளது. ஆவின் பாலை அடுத்து மக்கள் அதிகமாக வாங்கும் பால் என்றால் அது ஆரோக்கியா தான். ஏற்கனவே ஒரு லிட்டர் 65 ரூபாய்க்கு விற்கப்பட்ட பால் இன்று முதல் 67 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் பால் மட்டும் இன்றி தயிர் உள்ளிட்ட மற்ற பொருட்களின் விலையும் உயர்த்தியுள்ளது.
இந்த விலை உயர்வால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த பால் விலை உயர்விற்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆரோக்கியா நிறுவனத்தின் பால் விலை உயர்வு தமிழகத்தில் மட்டுமின்றி ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா உள்ளிட்ட அண்டைய மாநிலங்களிலும் அமலுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
அத்தே.. அத்தே...!
காஞ்சிபுரம் மக்களை தவெக தலைவர் விஜய் நாளை சந்திக்கிறார்: புஸ்ஸி ஆனந்த்!
முட்டி நின்று பார்த்ததனால்... புத்தம் புதிதாய் பூத்த மலர் போல்...!
சற்று ஆறுதலடைந்த வாடிக்கையாளர்களை மீண்டும் அதிர்ச்சிஅடையச் செய்த தங்கம் விலை.. விலை என்ன தெரியுமா?
திமுகவுடன் பேச 5 பேர் குழு.. விஜய்யுடன் பேச்சு கிசுகிசுப்புக்கு.. முற்றுப்புள்ளி வைக்கிறது காங்!
ஆட்டுக்குட்டி ஆட்டுக்குட்டி இங்கே வா வா (மழலையர் பாடல்)
ஜனநாயகன் விஜய்.. ஓவர் டூ மலேசியா.. உற்சாகத்தில் ரசிகர்கள்.. டிசம்பர் 27ல் சரவெடி!
நான் விரும்பும் வகுப்பறை
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் நவம்பர் 22, 2025... இன்று பணவரவு அதிகரிக்கும்
{{comments.comment}}