சென்னை: தமிழகத்தில் தனியார் பால் நிறுவனமான ஆரோக்கியா பால் இன்று முதல் லிட்டருக்கு ரூ.2 உயர்த்தியுள்ளது. அதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மக்களின் அத்தியாவசிய பொருட்களுள் மிகவும் முக்கியமானதாக இருப்பது பால். இந்த பால் அரசு தயாரிக்கும் ஆவின் பால் மட்டுமின்றி பல தனியார் நிறுவனங்களும் பால் பாக்கெட்டுகளை விற்பனை செய்து வருகின்றன. தமிழகத்தில் மட்டும் ஆவின்பால் தினமும் 18 லட்சம் லிட்டர் பால் பாக்கெட்டில் அடைத்து விற்கப்பட்டு வருகிறது. தனியார் நிறுவனங்கள் மட்டும் சுமார் 1.50 கோடி லிட்டர் பால் பாக்கெட்டுகளை விற்பனை செய்து வருகிறது.
இருப்பினும், ஆவின் பாலை விட தனியார் நிறுவனங்களின் பால் விலை அதிமாகவே உள்ளது. இந்த நிலையில்தான் ஆரோக்கியா பால் நிறுவனம் லிட்டருக்கு ரூ.2 உயர்த்தியுள்ளது. ஆவின் பாலை அடுத்து மக்கள் அதிகமாக வாங்கும் பால் என்றால் அது ஆரோக்கியா தான். ஏற்கனவே ஒரு லிட்டர் 65 ரூபாய்க்கு விற்கப்பட்ட பால் இன்று முதல் 67 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் பால் மட்டும் இன்றி தயிர் உள்ளிட்ட மற்ற பொருட்களின் விலையும் உயர்த்தியுள்ளது.
இந்த விலை உயர்வால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த பால் விலை உயர்விற்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆரோக்கியா நிறுவனத்தின் பால் விலை உயர்வு தமிழகத்தில் மட்டுமின்றி ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா உள்ளிட்ட அண்டைய மாநிலங்களிலும் அமலுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
குஜராத் முதல்வராகப் பதவியேற்று 25 வருடங்கள்.. அரசியல் தலைவர்களுக்கு நன்றி கூறிய பிரதமர் மோடி
2025 ஆம் ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசு.. 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது
கரண்டி பிடிக்கவும்.. கார் ஓட்டவும்.. பெண்ணென்னும் சக்தி!
பீகார் சட்டசபைத் தேர்தலில் யார் யாருக்கு சீட்.. காங்கிரஸ் நாளை முக்கிய முடிவு!
பீகார் சட்டசபை தேர்தல்: பாஜக, ஐக்கிய ஜனதா தளம் சமபங்கு.. சிறிய கட்சிகளுக்கு ராஜ்யசபா சீட்?
Coldrif இருமல் மருந்துக்கு பஞ்சாபிலும் தடை.. ம.பியில் 16 குழந்தைகள் பலியானதன் எதிரொலி
உங்களுடன் நான் இருக்கிறேன்...கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுடன் வீடியோ காலில் பேசும் விஜய்
கடவுளும், எங்க மாமாவும்தான் காரணம்.. கெத்தாக காலரைத் தூக்கி விடும் ஹரிஸ்.. தம்பி செஸ்ஸில் புலிங்க!
கரூர் சம்பவத்திற்கு சிபிஐ விசாரணை வேண்டும்... சுப்ரீம் கோர்ட்டில் பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன் மனு
{{comments.comment}}