குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப்பெறும் பேச்சுக்கே இடமில்லை.. அமித் ஷா திட்டவட்டம்

Mar 14, 2024,06:10 PM IST

புதுடில்லி: குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப்பெறும் பேச்சுக்கே இடமில்லை என  மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டவட்டமாக கூறியுள்ளார்.


சி.ஏ.ஏ எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கான விதிகளை மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்டது. சட்டம் நிறைவேறி நான்கு ஆண்டுகள் கடந்த நிலையில் இது உடனடியாக அமலுக்கு வருகிறது. இச்சட்டத்தின் மூலம் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசத்தில் இருந்து நம் நாட்டுக்குள் அகதிகளாக வந்த குறிப்பிட்ட சில பிரிவினருக்கு குடியுரிமை வழங்கும் வகையில் குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா 2019 அறிமுகம் செய்யப்பட்டது. 


இதன்படி இந்த நாடுகளில் சிறுபான்மையினராக இருக்கும் இந்து, சீக்கியர்கள், ஜெயின், புத்த, பார்சி மற்றும் கிறிஸ்தவ மதத்தினருக்கு குடியுரிமை வழங்கப்படும். கடந்த 2014ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதிக்கு முன் அங்கு சித்திரவதைகளை சந்தித்து அகதிகளாக வந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 




இதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.  இந்த சட்டம் தற்போது அமலுக்கு வந்திருப்பது விமர்சனங்களைக் கிளப்பியுள்ளது. இது தேர்தலை மனதில் கொண்டு அமல்படுத்தப்படுகிறது. 

குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல் பல்வேறு தமிழ்நாட்டுத் தலைவர்களும் வலியுறுத்தியுள்ளனர்.  தமிழ்நாட்டிலும், கேரளாவிலும் இந்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று அந்த மாநில முதல்வர்கள் அறிவித்துள்ளனர்.


இந்த நிலையில், இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா  கருத்து தெரிவிக்கையில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப்பெறும் பேச்சுக்கே இடமில்லை.  இந்த சட்ட திருத்தம் பற்றி நாட்டு மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இது நாட்டின் இறையாண்மை சம்பந்தப்பட்டது. அதில் சமரசம் செய்து கொள்ள மாட்டோம். இந்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று மாநிலங்கள் சொல்ல முடியாது என்று கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாட்டில் 2026ல் ஆட்சி மாற்றம் வரும்.. பாஜக கூட்டணி குறித்து சொல்ல முடியாது: டாக்டர் ராமதாஸ்!

news

35 புதிய கல்லூரிகள் புதிதாக திறந்தும் ஒரு ஆசிரியர் கூட புதிதாக நியமிக்கவில்லை: அன்புமணி ராமதாஸ்

news

ஜூன் 13,14 மற்றும் 15ம் தேதிகளில் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்: வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

தவெக.,வில் இணைந்த அதிமுக, திமுக முன்னாள் எம்எல்ஏ.,க்கள்.. விஜய் தரும் மெசேஜ் என்ன?

news

IRS அதிகாரி அருண்ராஜூக்கு தவெகவில் கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் பதவி: தவெக தலைவர் விஜய் அறிவிப்பு

news

Out Of Controlலில் இருக்கும் பாலியல் SIRகளை Control செய்யவது எப்போது?: எடப்பாடி பழனிச்சாமி கேள்வி

news

தவெகவுடன் கூட்டணி குறித்து விஜய்யிடம் தான் கேட்க வேண்டும்... கூட்டணி ஆட்சி வந்தால் நல்லது; பிரேமலதா

news

இன்று வைகாசி விசாகம் 2025 : முருகனுக்கு இந்த நைவேத்தியம் படைத்தால் வாழ்க்கையே மாறும்

news

ராஜமெளலி படத்தில் இணைந்த மாதவன்.. என்ன ரோல் தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்