சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி சென்னையில் பாராட்டு விழா நடைபெறும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள், அரசாணைகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்காமல் காலம் தாழ்த்தி வந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக தமிழக அரசு உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கு கடந்த 8ம் தேதி விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பர்திவாலா மற்றும் மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காக 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் நிறுத்திவைத்த தமிழக ஆளுநரின் செயல் சட்ட விரோதமானது ஏன நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
இந்த தீர்ப்பு குறித்து சில நாட்களுக்கு முன்னர் சட்டமன்றத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பு தமிழகம் மட்டுமின்றி பிற மாநில அரசுகளுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி. மாநில சுயாட்சி, மத்திய கூட்டாட்சி தத்துவம் ஆகியவற்றை நிலைநாட்டிட தமிழ்நாடு போராடும். தமிழ்நாடு வெல்லும் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், இது தொடர்பாக சட்டப்பேரவையில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் பேசுகையில், உச்சநீதிமன்றத்தில் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை பெற்றுக் கொடுத்து தமிழ்நாட்டிற்கு மட்டுமின்றி எல்லா மாநிலங்களுக்குமான உரிமையை நிலைநாட்டியதற்காக முதலமைச்சருக்கு பாராட்டு விழா நடத்த தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகத் துணை வேந்தர்கள், கல்வியாளர்கள், பேராசிரியர்கள், கல்லூரி கூட்டமைப்பினர், கல்லூரி மாணவர்கள் விருப்பம் தெரிவித்திருந்தனர். இதை முதலமைச்சர் இடம் தெரிவித்த போது, கலந்து கொள்ள இசைவு தெரிவித்ததை அடுத்து, மாநில சுயாட்சியை சட்டப்போராட்டம் நடத்தி வெற்றி பெற்ற முதலமைச்சருக்கு உயர்கல்வித் துறை சார்பில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் மே 3ம் தேதி மாலை 5 மணிக்கு பாராட்டு விழா நடைபெரும் என பேரவையில், அமைச்சர் கோவி செழியன் அறிவித்துள்ளார்.
திமுக - இந்திய யூனியன் முஸ்லீம் லீக்.. 60 ஆண்டு கால கூட்டணி முறிந்தது!
ஜூலை 1 முதல்.. புத்தெழுச்சி பெறப்போகும்.. 125 நாள் ஊரக வேலைவாய்ப்பு திட்டம்
வகுப்பறையில் ரீல்ஸ் பண்ணாதீங்கப்பா.. தவெகவினருக்கு அண்ணாமலை அட்வைஸ்!
சென்னை மாநகராட்சிப் பள்ளியில் .. சர்வதேச யோகா தினம்.. மாணவர்கள் அசத்தல்
மிஸ்.. நாடகம்.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்!
பூரிக்கும் புன்னகைக்கு பூக்களும் சிரிக்குமே
சிந்தனைச் சிதறல்.. வளமைக்கு ஒரு காலம் என்றால்.. மகிழ்ச்சிக்கு ஒரு காலம்!
Fathers Day 2026.. அப்பா என்பவர்.. நம் உயிர் மட்டுமல்ல!
When people come together as one... வெற்றி நமதே!
{{comments.comment}}