சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி சென்னையில் பாராட்டு விழா நடைபெறும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள், அரசாணைகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்காமல் காலம் தாழ்த்தி வந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக தமிழக அரசு உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கு கடந்த 8ம் தேதி விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பர்திவாலா மற்றும் மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காக 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் நிறுத்திவைத்த தமிழக ஆளுநரின் செயல் சட்ட விரோதமானது ஏன நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
இந்த தீர்ப்பு குறித்து சில நாட்களுக்கு முன்னர் சட்டமன்றத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பு தமிழகம் மட்டுமின்றி பிற மாநில அரசுகளுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி. மாநில சுயாட்சி, மத்திய கூட்டாட்சி தத்துவம் ஆகியவற்றை நிலைநாட்டிட தமிழ்நாடு போராடும். தமிழ்நாடு வெல்லும் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், இது தொடர்பாக சட்டப்பேரவையில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் பேசுகையில், உச்சநீதிமன்றத்தில் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை பெற்றுக் கொடுத்து தமிழ்நாட்டிற்கு மட்டுமின்றி எல்லா மாநிலங்களுக்குமான உரிமையை நிலைநாட்டியதற்காக முதலமைச்சருக்கு பாராட்டு விழா நடத்த தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகத் துணை வேந்தர்கள், கல்வியாளர்கள், பேராசிரியர்கள், கல்லூரி கூட்டமைப்பினர், கல்லூரி மாணவர்கள் விருப்பம் தெரிவித்திருந்தனர். இதை முதலமைச்சர் இடம் தெரிவித்த போது, கலந்து கொள்ள இசைவு தெரிவித்ததை அடுத்து, மாநில சுயாட்சியை சட்டப்போராட்டம் நடத்தி வெற்றி பெற்ற முதலமைச்சருக்கு உயர்கல்வித் துறை சார்பில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் மே 3ம் தேதி மாலை 5 மணிக்கு பாராட்டு விழா நடைபெரும் என பேரவையில், அமைச்சர் கோவி செழியன் அறிவித்துள்ளார்.
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
Tnpsc exam: 3935 பணிகளை நிரப்ப குரூப்-4 தேர்வு தேதி வெளியீடு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
{{comments.comment}}