களத்திற்கு வராத தற்குறி.. 200 இல்லை, 234 தொகுதிகளையும் அள்ளுவோம் .. அமைச்சர் சேகர்பாபு ஆவேசம்!

Dec 07, 2024,05:09 PM IST

சென்னை: தமிழகத்தின் அரசியல் தெரியாமல் அறியாமையில் சிலர் கருத்து கூறி வருகிறார்கள். தமிழகத்தில் திமுக ஆட்சி தொடர வேண்டும் என்பதே மக்களின் எண்ணமாக உள்ளது. 200 தொகுதிகளில் திமுக வெல்ல முடியாது என தற்குறிகளாக சிலர் பேசிக் கொண்டிருக்கின்றனர். இப்போது சொல்கிறேன், எங்களது இலக்கு 200 அல்ல, 234 தொகுதிகளும்தான் என்று அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் தவெக தலைவர் விஜய் பேசியதற்கு அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆவேசமாக பதில் தெரிவித்துள்ளார்.


விகடன் பிரசுரம் சார்பில் எல்லோருக்குமான அம்பேத்கர் புத்தகம் நேற்று சென்னையில் வெளியிடப்பட்டது. வாய்ஸ் ஆப் காமன்ஸ் அமைப்பின் தலைவர் ஆதவ் அர்ஜூனாவால் தொகுக்கப்பட்ட இந்த நூலை விஜய் வெளியிட முதல் பிரதியை முன்னாள் நீதிபதி சந்துரு பெற்றுக் கொண்டார். அதன்பின்னர் விஜய் பேசுகையில், மக்கள் உணர்வுகளை மதிக்கத் தெரியாத அடிப்படை சமூக நீதியான பாதுகாப்பைக் கூட உறுதி செய்ய முடியாத கூட்டணிக் கணக்குகளை மட்டுமே நம்பி இறுமாப்புடன் 200ம் வெல்வோம் என்று எகத்தாளமாக முழக்கமிடும் மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு என் மக்களோடு இணைந்து நான் விடுக்கும் எச்சரிக்கை..  நீங்க உங்களோட சுயநலத்துக்காக எல்லா வழிகளிலும் பாதுகாத்து வரும் உங்களது கூட்டணி கணக்குகள் அனைத்தையும் 2026ல் மக்களே மைனஸாக்கி விடுவார்கள் என்று பேசியிருந்தார்.




இந்நிலையில், சென்னை கொளத்தூரில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது இதுகுறித்து  இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு பதிலளித்தார். அவர் கூறுகையில், வருகின்ற சட்டமன்ற தேர்தலில் 200 என்கிற திமுகவின் நம்பிக்கை வீணாகும் என்று ஒரு சிலர் அதிமேதாவிகளாக, தற்குறிகளாக களத்திற்கே வராமல் பேசிக்கொண்டு உள்ளனர். எங்களுடைய நிலைப்பாடு 200 அல்ல, 234 தொகுதிகளையும் திராவிட முன்னேற்ற கழகம் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் கைப்பற்றும்,கைப்பற்றும், கைப்பற்றும். 


வில்லில் இருந்து புறப்பட்ட அம்பாக திமுக மீது எப்படி எல்லாம் அவதூறுகள் பரப்பப்படுகிறேதா, அப்போதெல்லாம் 80 கிமீ வேகத்தில் பயணிக்கும் திமுக தொண்டன் 100 கிமீட்டர் வேகத்தில் பயணிப்பார்கள். மீண்டும் முதலமைச்சர் ஸ்டாலின் அரியணை ஏற்றும் வரை எங்களுடைய வேகம் குறையாது என்று கூறினார்.


விக்கிரவாண்டியில் விஜய் பேசிய பேச்சு ஒரு மாதத்தையும் தாண்டி அனல் பரப்பியது. நேற்று விஜய் பேசியதை வைத்து இது எத்தனை நாட்கள் சூடாக ஓடும் என்பது தெரியவில்லை. ஆனால் படு சூடாக கிளம்பி விட்டதாகவே தெரிகிறது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Gold price:அதிரடியாக குறைந்தது தங்கம் விலை...இன்று மட்டும் சவரனுக்கு ரூ.1,520 குறைவு!

news

தூய்மையின் வடிவம் மற்றும் புத்திசாலித்தனத்தின் அற்புதம் (குழந்தைப் பருவம்)

news

கல்வி கற்பதின் நோக்கம் பணம் சம்பாதிக்க மட்டுமல்ல.. விட்டுக்கொடுத்தும், பற்றி வாழ்தலுமே!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் நவம்பர் 15, 2025... இன்று நினைத்தது கைகூடும் நாள்

news

பீகார் தேர்தல்.. கருத்துக் கணிப்புகளை பொய்ப்பித்த Results.. வியத்தகு வெற்றி - ஒரு பார்வை!

news

தொடர்ந்து கை கொடுக்கும் பாஜக.,வின் வெற்றி பார்முலா... பீகாரிலும் பலித்தது எப்படி?

news

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மணிமகுடத்தில் மற்றுமொரு மாணிக்கம்: நயினார் நாகேந்திரன்

news

ராகுல் காந்தி அரசியலை விட்டு விலகுவதற்கு மேலுமொரு வாய்ப்பு கிடைத்துள்ளது: குஷ்பு

news

அதிமுக எதிர்க்கட்சியாக மட்டுமல்ல,உதிரி கட்சியாக கூட இருக்க முடியாது:முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்

அதிகம் பார்க்கும் செய்திகள்