சென்னை: திமுக கூடி கலைகின்ற மேகக் கூட்டம் இல்லை; கொள்கை சார்ந்த கூட்டம்; எந்த சக்தியாலும் திராவிட முன்னேற்ற கழகத்தை அசைத்துப் பார்க்க முடியாது என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நேற்று விக்கிரவாண்டி வி.சாலையில் 85 ஏக்கர் பரப்பளவில் மிக பிரம்மாண்ட அளவில் நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு கூட்டம் வரும் என்று தெரியும் ஆனால் இவ்வளவு கூட்டம் வரும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது. சரி இது தான் இப்படி மாநாடு என்றால் குறைந்தது 4,5 மணி நேரமாவது மாறி மாறி பேசுவார்கள் என்றால் அதுவும் இல்லை.

சட்டுபுட்டுனு வந்த விஜய் கொடிய ஏத்தினாரு, உறுதிமொழி எடுத்தாரு, கொள்கையை அறிவிச்சாரு. 45 நிமிடங்கள் மட்டுமே பேசினாரு என்ன பெருசா பேசியிருக்க முடியும்னு யாரும் கேட்காத அளவிற்கு சொல்ல வேண்டியத அழுத்தம் திருத்தமா சொல்லிட்டு போயிட்டாரு. இவரு பேசினது என்னமோ 45 நிமிடம் .. ஆனால் அந்த பேச்சை பற்றி தான் பல மணி நேரமா எல்லோரும் பேசிக்கொண்டு இருக்கிறாங்க.
தற்போதைய அரசியல் களத்தின் மிகப் பெரிய பேசுபொருளாக மாறியுள்ளார் தவெக கட்சித் தலைவர் விஜய். அவர் பேசிய பேச்சிற்கு அனைத்து தரப்பினர்களும் தற்பொழுது அவரவர் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். தவெக தலைவர் விஜய் சூசகமாக திமுகவை தாக்கிய நிலையில், தற்போது திமுகவை சேர்ந்த கட்சி நிர்வாகிகள் பதிலடி கொடுக்க ஆரம்பித்துள்ளனர். பாஜகவின் சி டீம் போல செயல்படுவதாக அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.உதயசூரியனை நட்சத்திரங்கள் எதுவும் செய்ய முடியாது என்று தமிழச்சி தங்க பாண்டியன் கூறியுள்ளார்.
இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு பேசுகையில், திமுக என்பது ஓடி கலைகின்ற மேகக் கூட்டங்கள் கிடையாது. கொள்கை சார்ந்த கூட்டம் திமுக. எப்படிப்பட்ட புயல் மழை, வெள்ளம் வந்தாலும் அனைத்தினையும் எதிர்கொண்டு கடல் அலை முரணாக இருக்கும் போது கூட நேர்த்தியாக கரைக்கு செலுத்தும் மாலுமியாக எங்கள் தலைவர் முதல்வர் இருக்கும் வரை எந்த சக்தியாலும் திமுகவை அசைத்து கூட பார்க்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!
தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!
வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை
முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!
சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு? - வதந்தி என.. மத்திய அரசு விளக்கம்!
விதைக்குள் காடு விரும்பி அதை நாடு!
நெருங்குதலும் விலகலும்
Dr Latha poems: அமைதியே என் ஆயுதம்.. நான் என உறுதி கொள்!
English Language Day: வில்லியம் ஷேக்ஸ்பியரை நினைவு கூர்ந்து Thanks சொல்வோம்!
{{comments.comment}}