3 முறை ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி.. சோகத்தில் செந்தில் பாலாஜி.. சுப்ரீம் கோர்ட் நிவாரணம் தருமா?

Oct 19, 2023,03:27 PM IST

சென்னை: அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின்  ஜாமீன் மனு சென்னை உயர்நீதிமன்றத்திலும் நிராகரிக்கப்பட்டு விட்டது. இதையடுத்து அவர் சுப்ரீம் கோர்ட்டை அணுகியுள்ளார்.


அடுத்தடுத்து 3 முறை செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடியாகியுள்ளன. 8 முறை அவருக்கு சிறைக் காவலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டின் கதவைத் தட்டியுள்ளார் செந்தில் பாலாஜி. அங்கு அவருக்கு நிவாரணம் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.




அதிமுக  ஆட்சியின் போது போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்தவர் அமைச்சர் செந்தில்  பாலாஜி. அப்போது,  ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணிக்கான வேலை வாங்கித் தருவதாக கூறி லட்சக்கணக்கில் மோசடி செய்ததாக செந்தில்  பாலாஜி மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்தது. இந்த நிலையில் நீண்ட காலத்திற்குப் பிறகு, செந்தில் பாலாஜி திமுகவுக்கு மாறி, திமுக அமைச்சரவையில் அமைச்சராக நியமிக்கப்பட்டு செயல்பட்டு வரும் நிலையில், கடந்த ஜூன் 14ஆம் தேதி அமலாக்க துறையினரால் கைது செய்யப்பட்டார். 


கைது செய்யும் போதே செந்தில்பாலாஜிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால்  உடனடியாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு இருதய நாளங்களில் அடைப்புகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கோர்ட் உத்தரவுடன் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு பைபாஸ் அறுவைச் சிகிச்சை நடைபெற்றது. அதன் பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்டு உடல் நலம் கண்காணிக்கப்பட்டு வந்தது.


இதுவரை 8 முறை அவரது சிறைக்காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 2 முறை அவர் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு செய்து இரண்டும் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டன. இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் ஜாமீன் கோரி அணுகியிருந்தார். அது இன்று நிராகரிக்கப்பட்டு விட்டது. இந்த வழக்கில் தொடர்புடைய, செந்தில்பாலாஜியின் சகோதரர் ராஜா தலைமறைவாக இருக்கும் காரணத்தினால் அவருக்கு ஜாமீன் வழங்க முடியாது என நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.


இதையடுத்து தற்போது உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி சார்பில் அப்பீல் செய்யப்பட்டுள்ளது. உடல் நிலையைக் கருத்தில் கொண்டு ஜாமீன் அளிக்க வேண்டும், அவசர வழக்காக இதை விசாரிக்க வேண்டும் என்று அதில் கோரப்பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட்டாவது செந்தில் பாலாஜிக்கு நிவாரணம் தருமா.. பொறுத்திருந்து பார்ப்போம்.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்