சென்னை: அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு சென்னை உயர்நீதிமன்றத்திலும் நிராகரிக்கப்பட்டு விட்டது. இதையடுத்து அவர் சுப்ரீம் கோர்ட்டை அணுகியுள்ளார்.
அடுத்தடுத்து 3 முறை செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடியாகியுள்ளன. 8 முறை அவருக்கு சிறைக் காவலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டின் கதவைத் தட்டியுள்ளார் செந்தில் பாலாஜி. அங்கு அவருக்கு நிவாரணம் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அதிமுக ஆட்சியின் போது போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்தவர் அமைச்சர் செந்தில் பாலாஜி. அப்போது, ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணிக்கான வேலை வாங்கித் தருவதாக கூறி லட்சக்கணக்கில் மோசடி செய்ததாக செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்தது. இந்த நிலையில் நீண்ட காலத்திற்குப் பிறகு, செந்தில் பாலாஜி திமுகவுக்கு மாறி, திமுக அமைச்சரவையில் அமைச்சராக நியமிக்கப்பட்டு செயல்பட்டு வரும் நிலையில், கடந்த ஜூன் 14ஆம் தேதி அமலாக்க துறையினரால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யும் போதே செந்தில்பாலாஜிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் உடனடியாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு இருதய நாளங்களில் அடைப்புகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கோர்ட் உத்தரவுடன் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு பைபாஸ் அறுவைச் சிகிச்சை நடைபெற்றது. அதன் பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்டு உடல் நலம் கண்காணிக்கப்பட்டு வந்தது.
இதுவரை 8 முறை அவரது சிறைக்காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 2 முறை அவர் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு செய்து இரண்டும் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டன. இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் ஜாமீன் கோரி அணுகியிருந்தார். அது இன்று நிராகரிக்கப்பட்டு விட்டது. இந்த வழக்கில் தொடர்புடைய, செந்தில்பாலாஜியின் சகோதரர் ராஜா தலைமறைவாக இருக்கும் காரணத்தினால் அவருக்கு ஜாமீன் வழங்க முடியாது என நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.
இதையடுத்து தற்போது உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி சார்பில் அப்பீல் செய்யப்பட்டுள்ளது. உடல் நிலையைக் கருத்தில் கொண்டு ஜாமீன் அளிக்க வேண்டும், அவசர வழக்காக இதை விசாரிக்க வேண்டும் என்று அதில் கோரப்பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட்டாவது செந்தில் பாலாஜிக்கு நிவாரணம் தருமா.. பொறுத்திருந்து பார்ப்போம்.
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}