குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு

Jun 10, 2025,03:34 PM IST

சென்னை: தமிழ்நாட்டின் மீது குற்றச்சாட்டுகளை வைப்பதற்கு முன்னர் பாஜக தங்கள் முதுகைப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.


சென்னை  திமுக கொரட்டூரில் திமுக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக துணை பொது செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா, அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினர். அதன்பின்னர் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் பேசுகையில், 




தமிழ்நாடு அரசின் மீது குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும். மணிப்பூரில் இன்னும் கலவரம் ஓயவில்லை. உத்திரபிரதேசத்திலும் இன்னும் இயல்புநிலைக்கு அந்த மாநிலம் திரும்பவில்லை. மணிப்பூர் கலவரத்தை மறைக்கவே கொங்கு மண்டலம் கொலைகள் குறித்து பாஜக குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறது.


ஆனால், தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் களத்தில் இருக்கிறார். எந்தவித குற்றச்சாட்டுகள் புகார்கள் என்றாலும் அவர் நேரடியாக முன் நின்று தீர்த்து வைக்கிறார். அதனால் தமிழ்நாட்டின் மீது குற்றச்சாட்டுகளை வைப்பதற்கு முன்னர் பாஜக தங்கள் முதுகை பார்த்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நேரத்தில் உருவான இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதிகள் – சென்னை வானிலை தகவல்!

news

தனது கண்ணியத்தை இழக்கும் வகையில் பேசுகிறார் பிரதமர் மோடி.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

பீகாரில் பிரதமர் மோடி பொய் பிரச்சாரம் செய்து வாக்குகளை பெற முயற்சிக்கிறார்: ஆர்.எஸ்.பாரதி

news

பிரதமர் குற்றம் சாட்டியது திமுகவை தான்... தமிழர்களை அல்ல: தமிழிசை சவுந்தர் ராஜன் பேட்டி!

news

தமிழர்களை எதிரியாகச் சித்தரித்து வெறுப்புவாத அரசியல் செய்வது பாஜகவின் வாடிக்கை: கனிமொழி

news

SIR திட்டத்தை எதிர்த்து.. திமுக கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டம்.. விஜய் செல்வாரா?

news

குப்பைமேடாக மாறும் சின்னக்காளி பாளையம்.. திமுக அரசு திட்டத்தை கைவிட வேண்டும்: அண்ணாமலை

news

ரூ.3,250 கோடி ஒப்பந்தம்... தமிழ்நாட்டில் மீண்டும் உற்பத்தியை தொடங்குகிறது ஃபோர்டு!

news

இரும்புப் பெண் இந்திரா காந்தி.. இன்னும் சில பத்தாண்டுகள் இருந்திருந்தால்.. இந்தியா எப்போதோ வல்லரசு!

அதிகம் பார்க்கும் செய்திகள்