- மஞ்சுளா தேவி
தஞ்சாவூர்: டெல்டா மாவட்டமான தஞ்சையில் விரைவில் விமான சேவை தொடங்கப் போவதாக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அறிவித்துள்ளார்.
உலக பிரசித்தி பெற்ற கோயில் தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில். இக் கோவில் வரலாற்று சிறப்பு வாய்ந்தது. இத்தகு பெருமை மிக்க கோவில் அமைந்துள்ள நகரம்தான் தஞ்சாவூர். தஞ்சை சோழ அரசின் தலைநகரமாக விளங்கியது. தஞ்சைப் பெரிய கோயில் கட்டடக் கலைக்குப் பெயர் போனது. ஆயிரம் ஆண்டு பழமையான கோவில். இங்கு வரலாற்று சிறப்பு வாய்ந்த தஞ்சை ஓவியங்களும் மிகவும் புகழ் பெற்று விளங்குகின்றன. தஞ்சை மாவட்டம் பாசனத்திற்கு செழுமையான பூமி.இப்படி தஞ்சை மாநகரத்தை பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்.
இப்படிப்பட்ட வரலாற்று சிறப்புகளை காண வெளிநாட்டிலிருந்தும், வெளியூர்களிலிருந்தும் தினசரி லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இங்கு மக்கள் வந்து செல்வதற்கு ஏதுவாக பேருந்து போக்குவரத்து மற்றம் ரயில் போக்குவரத்து மட்டுமே உள்ளது. ஆனால் விமான சேவை இங்கு இல்லை. தஞ்சையில் பயணிகள் விமான சேவை தொடங்க நீண்ட காலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

தஞ்சை -புதுக்கோட்டை செல்லும் சாலையில் விமானப்படைத்தளம் உள்ளது. இந்த தளங்களில் போர் விமானங்களை மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். தற்போது இந்த விமானப் படை தளத்தின் ஒரு பகுதியில் பயணிகள் விமான போக்குவரத்து தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே தஞ்சையில் புதிய பேருந்து நிலையம் அருகே ரூபாய் 27.14 கோடி மதிப்பில் டைட்டல் பார்க் கட்டுமானம் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த உடன் மிகப்பெரிய நிறுவனங்கள் வர உள்ளது. விமான சேவையும் வந்தால், டெல்டா மாவட்டங்களான நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் வசிக்கும் மக்களுக்கு பயன் கிடைக்கும்.
இந்த நிலையில், பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று தஞ்சை மற்றும் ஓசூரில் விரைவில் விமான பயணிகள் போக்குவரத்து சேவை தொடங்கப்படும் என வர்த்தகத்துறை அமைச்சர் டி. ஆர் .பி ராஜா கூறியுள்ளார்.
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}