எந்தப் பதவிக்கு உயர்ந்தாலும்.. இந்த இடத்தை மறக்க மாட்டேன்.. உதயநிதி ஸ்டாலின் பரபர பேச்சு!

Jul 20, 2024,05:48 PM IST

சென்னை:   நான் மட்டுமல்ல, அனைத்து அமைச்சர்களுமே முதலமைச்சருக்கு துணையாக இருப்போம். எவ்வளவு பெரிய பதவிக்கு சென்றாலும் இளைஞரணி பதவிதான் என் மனதுக்கு மிகவும் நெருக்கமானது என்று திமுக இளைஞரணியின் 45வது ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.


சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக இளைஞரணி தலைமைச் செயலகத்தில், திமுக இளைஞரணியின் 45ம் ஆண்டு தொடக்க விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவிற்கு திமுக இளைஞரணி தலைமைச் செயலாளரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமை வகித்தார். இந்த விழாவில் இளைஞர் அணி மாநிலத் துணைச் செயலாளர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.




வருவாய் மாவட்ட வாரியாக சமூக வலைதளப் பக்கத்தையும், மாவட்ட, மண்டல அமைப்புச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கான சமூக வலைதளப் பயிற்சியை பக்கத்தையும் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். "உங்களுடன் உதயநிதி" என்ற சமூக வலைதள பக்கமும் தொடங்கப்பட்டது.


இவ்விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், மக்களவைத் தேர்தல், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஈடுபட்ட நிர்வாகிகள் அனைவருக்கும் எனது நன்றி.பொய் பேசி அரசியல் செய்யும் பிஜேபி. பிரதமர் மோடி ஆறுமுறை அல்ல, ஆயிரம் முறை தமிழகத்துக்கு வந்தாலும் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்று கூறினேன். அதேபோல தமிழக மக்கள் மக்களவைத் தேர்தலில் நிரூபித்தனர். தமிழ்நாட்டில் 100 சிறந்த பேச்சாளர்களை தேர்ந்தெடுக்கு பணியை செய்வோம். இல்லந்தோரும் இளைஞர் அணி மிக முக்கியமான பணி.


திமுகவில் பல அணிகள் இருந்தாலும் முதல் அணி இளைஞரணி தான். திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெற இளைஞரணியும் ஒரு முக்கிய காரணம். இதற்கு முக்கிய பங்காற்றிய இளைஞர் அணி நிர்வாகிகள் செயலாளர் அவர்களுக்கு எனது நன்றி. இன்றைய காலகட்டத்தில் சமூகம் வலைதளங்கள் மிகவும் முக்கியம்.எல்லா அமைச்சர்களும் முதல்வருக்கு துணையாக தான் இருப்போம். எந்த பொறுப்பு வந்தாலும் இளைஞர் அணியை மறக்க மாட்டேன் இளைஞர் அணி செயலாளர் பதவி எனது மனதுக்கு மிகவும் பொருத்தமானது என்று அவர் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

Middle East uncertainity: ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதலால் இந்தியப் பங்குச்சந்தைகளில் கடும் சரிவு

news

சென்னையில் அதிகரித்து வரும் இரவு நேர வெப்ப நிலை.. இதுதான் காரணம்.. விழிப்புணர்வு தேவை

news

விஜய் 51.. தவெக தொண்டர்கள், ரசிகர்கள் கோலாகல கொண்டாட்டம்.. தலைவர்கள் வாழ்த்து

news

ஈரானின் அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா குண்டுவீச்சு.. 3வது உலகப் போர் வெடிக்குமா?

news

Hot air balloon fire: பிரேசில் துயரம்.. ஹாட் ஏர் பலூன் தீப்பிடித்து எரிந்து விழுந்தது.. 8 பேர் பலி

news

போர்களும், மோதல்களும் சூழ்ந்த உலகம்.. யோகா அமைதியைக் கொண்டு வரும்.. பிரதமர் மோடி நம்பிக்கை

news

வால்பாறை அதிமுக எம்எல்ஏ அமுல் கந்தசாமி காலமானார்

news

இல்லத்தரசி.. உண்மையில் அப்படித்தான் நாம் பெண்களை மதிக்கிறோமா?

news

ஆபரேஷன் சிந்து தொடர்கிறது.. ஈரானிலிருந்து இதுவரை 517 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்

அதிகம் பார்க்கும் செய்திகள்