அம்பேத்கரைப் பின்பற்றுகிறவர்களைப் புண்படுத்தக் கூடாது.. ம.நீ.ம. தலைவர் கமலஹாசன்

Dec 19, 2024,05:21 PM IST

சென்னை: அம்பேத்கர் குறித்த விவாதங்கள் முன்னேற்றத்தை நோக்கியதாக இருக்க வேண்டுமே தவிர, எங்களைப் போல அம்பேத்கரைப் பெருமிதத்துடன் பின்பற்றுகிறவர்களைப் புண்படுத்துவதாக இருக்கக்கூடாது என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹசான் தெரிவித்துள்ளார்.


எதற்கெடுத்தாலும் அம்பேத்கர் அம்பேத்கர் என்று சொல்கிறார்கள். அவர் பெயருக்கு பதில் கடவுளின் பெயரை சொல்லி இருந்தால் ஏழு ஜென்மம் சொர்க்கம் கிடைத்திருக்கும் என்று மத்திய உள்துறை  அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் பேசியது இந்திய அளவில் பெரும் சர்ச்சையாகியுள்ளது. 




இதற்கு  மக்களவை எதர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள் கண்டங்களை தெரிவித்து வருகின்றனர். நாடாளுமன்றத்திலும், நாடாளுமன்றத்திற்கு வெளியிலும் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன.  இந்நிலையில், இது குறித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசன் பதிவு ஒன்றை தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், நவீன இந்தியாவின் கட்டுமானத்துக்கு பாபா சாகேப் அம்பேத்கரின் சிந்தனையே அடித்தளம். அன்னியர்களின் அடக்குமுறையில் இருந்து இந்தியாவை காந்திஜி விடுவித்த தருணத்தில், இந்தியா தனக்குத்தானே சுமத்திக் கொண்டிருந்த சமூக அநீதிகளில் இருந்து டாக்டர் அம்பேத்கர் தான் இந்தியாவை விடுவித்தார்.


அனைவருக்கும் சுதந்திரம், அனைவருக்கும் சமநீதி, பிறப்பால் அனைவரும் சமம் என்னும் பாபா சாகேப் அம்பேத்கரின் கொள்கையை நம்பி அதற்காக போராடும் எந்த இந்தியரும், அப்பெருமகனின் மாண்பு சீர்குலைக்கப்படுவதை சகித்துக் கொள்ள மாட்டார்.


நவீனத்துவமும் தார்மீகமும் கொண்ட சர்வதேச சக்தியான நாம் அரசியல் சாசனம் உருக் கொண்டதன் 75ஆம் ஆண்டை அர்த்தமுள்ள உரையாடல்கள், விவாதங்கள், அம்பேத்கரின் சிந்தனைகளை பற்றி ஆய்வுகள் என்று நாடாளுமன்றத்தின் மரியாதை மிக்க அரங்குகளை நடத்திச் செல்ல வேண்டும். இந்த விவாதங்கள் முன்னேற்றத்தை நோக்கியதாக இருக்க வேண்டுமே தவிர, எங்களைப் போல அம்பேத்கரை பெருமிதத்துடன் பின்பற்றுகிறவர்களைப் புண்படுத்துவதாக இருக்கக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

வாயில் வடை சுடும் அரசு இது அல்ல... சாதனை திட்டங்களை செயல்படுத்தி வரும் அரசு: முதல்வர் முக ஸ்டாலின்!

news

கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு தமிழக அரசின் 8 திட்டங்கள் குறித்து அறிவிப்பு: முதல்வர் முக ஸ்டாலின்

news

பாமக.,வில் இருந்து ஜி.கே.மணி நீக்கம்...அன்புமணி அறிவிப்பு...என்ன செய்ய போகிறார் ராமதாஸ்?

news

ராஜ்ய சபா சீட் கொடுத்தால் மட்டுமே பேச்சுவார்த்தை: பிரேமலதா விஜயகாந்த் அதிரடி!

news

சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' பட கதை திருட்டு புகாரில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

news

சம வேலைக்கு சம ஊதியம்: போராடிய ஆசிரியர்கள் மீது அடக்குமுறை: அண்ணாமலை கண்டனம்!

news

ஜனநாயகன் இசை வெளியீட்டுக்காக மலேசியா புறப்பட்டார் விஜய்

news

போராட்டத்தில் திடீர் பரபரப்பு... மயங்கி விழுந்த ஆசிரியை... பதற்றத்தில் போராட்டக் களம்!

news

கரை தேடி வந்து உயிர்களை உள்வாங்கிய தினம்...!

அதிகம் பார்க்கும் செய்திகள்