சென்னை: லோக்சபா தேர்தலுக்கான ஏற்பாடுகள் நல்லா நடந்துட்டிருக்கு.. 2 நாளில் உங்களுக்கு நல்ல செய்தி சொல்றேன் என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
லோக்சபா தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி திமுக கூட்டணியில் இணையப் போவதாக செய்திகள் பறந்து கொண்டுள்ளன. திமுக கூட்டணியில் முக்கியக் கட்சியாக உள்ள காங்கிரஸுக்கு ஒதுக்கப்படும் இடங்களிலிருந்து மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என்றும் பேசப்படுகிறது.
கமல்ஹாசன் கோவை அல்லது ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடக் கூடும் என்றும் பேச்சு அடிபடுகிறது. இதுவரை இது எதுவும் உறுதியாக கூறப்படவில்லை. வெறும் தகவலாகவே வலம் வருகிறது. ஆனால் கமல்ஹாசன், திமுக கூட்டணியில் இணைவார் என்று உறுதியாக நம்பப்படுகிறது.
இந்த நிலையில் அமெரிக்கா போயிருந்த கமல்ஹாசன் இன்று காலை சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், முன்னேற்பாடுகளுக்காக அமெரிக்கா போயிருந்தேன். என்னுடைய தக் லைப் படத்துக்காக. அதை முடித்து விட்டு வந்திருக்கிறேன்.
2 நாளில் உங்களை சந்திக்கவுள்ளேன். அப்போது நல்ல செய்திகளுடன் சந்திப்பேன். இப்ப வரைக்கும் அதான் செய்தி. நான் அங்கிருந்து கொண்டு வரலை எந்த செய்தியும். அது இங்கிருந்துதான் வர வேண்டும். பேசி விட்டு 2 நாளில் உங்களை சந்திக்கிறேன். ஏற்பாடுகள் நல்லா நடந்துட்டிருக்கு, 2 நாளில் சொல்றேன். இப்ப சொல்லக் கூடாது என்றார் கமல்ஹாசன்.
மறுபக்கம் திமுக கூட்டணியில் கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை முடிவடைந்து விட்டது. யாருக்கு எத்தனை, எந்தத் தொகுதி என்பது குறித்து இப்போது திமுக குழு தீவிர ஆலோசனையில் இறங்கியுள்ளது. அது முடிவடைந்தவுடன் கூட்டணிக் கட்சிகளுடன் மீண்டும் ஆலோசனை நடத்தி அதிகாரப்பூர்வமாக அவை அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.
புஷ்பா 3 நிச்சயம் உண்டு.. துபாயில் வைத்து ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன சுகுமார்!
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. தொடங்கியது வாக்குப் பதிவு.. முதல் ஓட்டைப் போட்ட பிரதமர் மோடி
கடலும் கடலின் ஒரு துளியும்!
இளையராஜா போட்ட வழக்கு.. குட் பேட் அக்லி-யை ஓடிடி தளத்திலிருந்து நீக்குமா நெட்பிளிக்ஸ்?
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 09, 2025... நல்ல காலம் பிறக்குது
ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
{{comments.comment}}