பிரதமர் பதவி நிரந்தரமில்லை.. ஒரு தமிழர் அந்தப் பதவிக்கு வர வேண்டும்.. கமல் மனசுல யாரு??

Sep 22, 2024,09:27 AM IST

சென்னை :   ஒரே நாடு ஒரே தேர்தல் ஆபத்தானது. பிரதமர் பதவி நிரந்தரமானது கிடையாது. ஒரு தமிழரை பிரதமராக்க நாடு தயாராக வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக் குழு கூட்டத்தில் அக்கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் பேசி உள்ளார்.


மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக் குழு கூட்டம் சென்னை காமராஜர் அரங்கத்தில் இன்று காலை நடைபெற்றது. இதில் வாய்மொழியாக வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, கட்சியின் தலைவர் தேர்வு நடத்தப்பட்டது. இதில் கமல்ஹாசனை மீண்டும் தலைவராக தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றபப்பட்டது. இது தவிர முக்கியமான 20 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது.




கமல்ஹாசன் இந்த கூட்டத்தில் பேசும்போது வழக்கம் போல அழுத்தமான பாயின்ட்டுகளை வைத்துப் பேசினார். அவரது பேச்சிலிருந்து:  ஒரே நாடு ஒரே தேர்தல் மிகவும் ஆபத்தானது. தோல்வியும் நிரந்தரம் இல்லை, பிரதமர் பதவியும் நிரந்தரம் இல்லை. அந்த பீடம் மாறிக் கொண்டே இருக்க வேண்டும். நான் 4 வயதில் இருந்து மேடையை பார்த்துக் கொண்டிருக்கிறேன். அதன் காரணமாகவே தற்போது அரசியலுக்கு வந்துள்ளேன். 


இந்தியாவில் நேர்மையானவர்கள் தமிழகத்தில் இருக்கிறார்கள். தமிழர்கள் நேர்மையாக வரி செலுத்தக் கூடியவர்கள். நான் செலுத்தும் வரி பணத்தில் தான் அரசு நடக்கிறது. அது அனைவருக்கும் பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும். 


நான் அரசியலுக்கு வந்தது எனக்காகவோ, நமக்காகவோ கிடையாது, நாளைக்காக. இன்று நான் விதை போட்டுள்ளேன். நாளை அதை வேறு ஒருவன் சாப்பிடுவான். ஒரு தமிழன் நாட்டின் பிரதமராகக் கூடாதா? அதற்காக நாட்டை நாம் தயார்படுத்த வேண்டும் என கமல் பேசி உள்ளார்.


தமிழன் பிரதமராக வேண்டும் என்று கமல்ஹாசன் பேசியுள்ளது பேசு பொருளாகியுள்ளது. இன்றைய டிவி விவாதங்களுக்குரியதாகவும் இந்த தலைப்பு மாறியுள்ளது. யாரையாவது மனதில் வைத்து கமல்ஹாசன் இவ்வாறு பேசினாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. கமல்ஹாசன் தற்போது திமுக கூட்டணியில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!

news

தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?

news

பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!

news

பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!

news

ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!

news

குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு

news

டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க

news

11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்

news

ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்