சென்னை : ஒரே நாடு ஒரே தேர்தல் ஆபத்தானது. பிரதமர் பதவி நிரந்தரமானது கிடையாது. ஒரு தமிழரை பிரதமராக்க நாடு தயாராக வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக் குழு கூட்டத்தில் அக்கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் பேசி உள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக் குழு கூட்டம் சென்னை காமராஜர் அரங்கத்தில் இன்று காலை நடைபெற்றது. இதில் வாய்மொழியாக வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, கட்சியின் தலைவர் தேர்வு நடத்தப்பட்டது. இதில் கமல்ஹாசனை மீண்டும் தலைவராக தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றபப்பட்டது. இது தவிர முக்கியமான 20 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது.
.jpg)
கமல்ஹாசன் இந்த கூட்டத்தில் பேசும்போது வழக்கம் போல அழுத்தமான பாயின்ட்டுகளை வைத்துப் பேசினார். அவரது பேச்சிலிருந்து: ஒரே நாடு ஒரே தேர்தல் மிகவும் ஆபத்தானது. தோல்வியும் நிரந்தரம் இல்லை, பிரதமர் பதவியும் நிரந்தரம் இல்லை. அந்த பீடம் மாறிக் கொண்டே இருக்க வேண்டும். நான் 4 வயதில் இருந்து மேடையை பார்த்துக் கொண்டிருக்கிறேன். அதன் காரணமாகவே தற்போது அரசியலுக்கு வந்துள்ளேன்.
இந்தியாவில் நேர்மையானவர்கள் தமிழகத்தில் இருக்கிறார்கள். தமிழர்கள் நேர்மையாக வரி செலுத்தக் கூடியவர்கள். நான் செலுத்தும் வரி பணத்தில் தான் அரசு நடக்கிறது. அது அனைவருக்கும் பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும்.
நான் அரசியலுக்கு வந்தது எனக்காகவோ, நமக்காகவோ கிடையாது, நாளைக்காக. இன்று நான் விதை போட்டுள்ளேன். நாளை அதை வேறு ஒருவன் சாப்பிடுவான். ஒரு தமிழன் நாட்டின் பிரதமராகக் கூடாதா? அதற்காக நாட்டை நாம் தயார்படுத்த வேண்டும் என கமல் பேசி உள்ளார்.
தமிழன் பிரதமராக வேண்டும் என்று கமல்ஹாசன் பேசியுள்ளது பேசு பொருளாகியுள்ளது. இன்றைய டிவி விவாதங்களுக்குரியதாகவும் இந்த தலைப்பு மாறியுள்ளது. யாரையாவது மனதில் வைத்து கமல்ஹாசன் இவ்வாறு பேசினாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. கமல்ஹாசன் தற்போது திமுக கூட்டணியில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}