சென்னை : ஒரே நாடு ஒரே தேர்தல் ஆபத்தானது. பிரதமர் பதவி நிரந்தரமானது கிடையாது. ஒரு தமிழரை பிரதமராக்க நாடு தயாராக வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக் குழு கூட்டத்தில் அக்கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் பேசி உள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக் குழு கூட்டம் சென்னை காமராஜர் அரங்கத்தில் இன்று காலை நடைபெற்றது. இதில் வாய்மொழியாக வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, கட்சியின் தலைவர் தேர்வு நடத்தப்பட்டது. இதில் கமல்ஹாசனை மீண்டும் தலைவராக தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றபப்பட்டது. இது தவிர முக்கியமான 20 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது.
கமல்ஹாசன் இந்த கூட்டத்தில் பேசும்போது வழக்கம் போல அழுத்தமான பாயின்ட்டுகளை வைத்துப் பேசினார். அவரது பேச்சிலிருந்து: ஒரே நாடு ஒரே தேர்தல் மிகவும் ஆபத்தானது. தோல்வியும் நிரந்தரம் இல்லை, பிரதமர் பதவியும் நிரந்தரம் இல்லை. அந்த பீடம் மாறிக் கொண்டே இருக்க வேண்டும். நான் 4 வயதில் இருந்து மேடையை பார்த்துக் கொண்டிருக்கிறேன். அதன் காரணமாகவே தற்போது அரசியலுக்கு வந்துள்ளேன்.
இந்தியாவில் நேர்மையானவர்கள் தமிழகத்தில் இருக்கிறார்கள். தமிழர்கள் நேர்மையாக வரி செலுத்தக் கூடியவர்கள். நான் செலுத்தும் வரி பணத்தில் தான் அரசு நடக்கிறது. அது அனைவருக்கும் பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும்.
நான் அரசியலுக்கு வந்தது எனக்காகவோ, நமக்காகவோ கிடையாது, நாளைக்காக. இன்று நான் விதை போட்டுள்ளேன். நாளை அதை வேறு ஒருவன் சாப்பிடுவான். ஒரு தமிழன் நாட்டின் பிரதமராகக் கூடாதா? அதற்காக நாட்டை நாம் தயார்படுத்த வேண்டும் என கமல் பேசி உள்ளார்.
தமிழன் பிரதமராக வேண்டும் என்று கமல்ஹாசன் பேசியுள்ளது பேசு பொருளாகியுள்ளது. இன்றைய டிவி விவாதங்களுக்குரியதாகவும் இந்த தலைப்பு மாறியுள்ளது. யாரையாவது மனதில் வைத்து கமல்ஹாசன் இவ்வாறு பேசினாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. கமல்ஹாசன் தற்போது திமுக கூட்டணியில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}