சென்னை:தமிழ்நாட்டில் இன்று ஆறு மாவட்டங்களில் மதியம் ஒரு மணிக்குள் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாத முதல் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பொதுவாக மே மாதத்தில்தான் அக்னி வெயிலின் தாக்கம் உச்சமாக இருக்கும். ஆனால் தற்போது ஏப்ரல் மாதத்திலேயே வெப்ப அலையுடன் வெயிலின் தாக்கம் கடுமையாக நிலவி வருகிறது. இதனால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். இருப்பினும் பருவநிலை மாற்றத்தின் காரணமாக தமிழ்நாட்டில் அவ்வப்போது ஒரு சில பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
இதற்கிடையே தென் தமிழக கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நீடித்து வருகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் வரும் 25ஆம் தேதி வரை ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
அதன்படி, நேற்று கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், பரமக்குடி, திருநெல்வேலி, சிவகங்கை, உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்தது. அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் மாம்பழத் துறையாறு மற்றும் அணைக்கெடங்கு பகுதியில் தலா 8 சென்டிமீட்டர் மழை பதிவானது. இதனால் அப்பகுதிகளில் வெக்கை தணிந்து இதமான சூழல் நிலவியது.
இந்த நிலையில் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி தென்காசி, நெல்லை, ஆகிய 6 மாவட்டங்களில் இன்று மதியம் ஒரு மணிக்குள் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தர்மம் வெல்ல வேண்டும்... அதிமுக பொறுப்புகளில் இருந்து நீக்கியதில் மகிழ்ச்சியே: செங்கோட்டையன்!
செங்கோட்டையன் நீக்கம்.. எடப்பாடி பழனிச்சாமியின் அதிரடியால் பரபரப்பு.. அடுத்து என்ன நடக்கும்?
செங்கோட்டையன் அதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம்: எடப்பாடி பழனிச்சாமி
திருச்சியில் இருந்து... தளபதி 2026... விஜய் அரசியல் பிரச்சார சுற்றுப்பயணம் தொடக்கம்!
Chennai Metro.. மெட்ரோ ரயில் பயணிகளே.. இந்த முக்கியமான மாற்றத்தை நோட் பண்ணிக்கங்க!
பாஜக உட்கட்சி பூசல் தான் அதிமுக.,வில் ஏற்படும் குழப்பத்திற்கு காரணமா?
கோபியில் கொதித்த செங்கோட்டையன்.. திண்டுக்கல்லில் கொந்தளித்த இபிஎஸ்... பரபரப்பில் அதிமுக
பாஜக கூட்டணியிலிருந்து வெளியேற நயினார் நாகேந்திரனே காரணம்.. டிடிவி தினகரன் ஆவேசம்
மலைக்கோட்டை, பாண்டியன், ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில்கள்.. தாம்பரத்துடன் நிறுத்தப்படும்.. நவ. 10 வரை
{{comments.comment}}