சென்னை:தமிழ்நாட்டில் இன்று ஆறு மாவட்டங்களில் மதியம் ஒரு மணிக்குள் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாத முதல் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பொதுவாக மே மாதத்தில்தான் அக்னி வெயிலின் தாக்கம் உச்சமாக இருக்கும். ஆனால் தற்போது ஏப்ரல் மாதத்திலேயே வெப்ப அலையுடன் வெயிலின் தாக்கம் கடுமையாக நிலவி வருகிறது. இதனால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். இருப்பினும் பருவநிலை மாற்றத்தின் காரணமாக தமிழ்நாட்டில் அவ்வப்போது ஒரு சில பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

இதற்கிடையே தென் தமிழக கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நீடித்து வருகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் வரும் 25ஆம் தேதி வரை ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
அதன்படி, நேற்று கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், பரமக்குடி, திருநெல்வேலி, சிவகங்கை, உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்தது. அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் மாம்பழத் துறையாறு மற்றும் அணைக்கெடங்கு பகுதியில் தலா 8 சென்டிமீட்டர் மழை பதிவானது. இதனால் அப்பகுதிகளில் வெக்கை தணிந்து இதமான சூழல் நிலவியது.
இந்த நிலையில் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி தென்காசி, நெல்லை, ஆகிய 6 மாவட்டங்களில் இன்று மதியம் ஒரு மணிக்குள் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சாதனை என்பது...!
12 வயதில் 2 புத்தகங்கள்.. குவியும் பாராட்டுகள்.. அசத்தும் எழுத்துலக இளவரசி ப்ரீத்தா!
பீகார் தேர்தல் அனைவருக்குமான பாடம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு!
நயினார் நாகேந்திரனுக்கு பாஜக தலைமை கொடுத்த 'அசைன்மென்ட்' இது தானாமே!
புதிய காற்றழுத்த தாழ்வு.. நவம்பர் 17ம் தேதி 6 மாவட்டங்களில் மிக கனமழைக்கான வாய்ப்பு - வானிலை மையம்
10 ஆண்டுகளில் பாஜக.வின் அசுரத்தனமான வளர்ச்சி... யாருக்கெல்லாம் ஆபத்து?
அத்துணை அழகா புன்னகை.... ?
எங்களை அழைக்காமல் கூட்டம் போட்டால் எப்படி.. தேர்தல் ஆணையத்திற்கு விஜய் கேள்வி
குழந்தைகளைக் கொண்டாடுவோம்.. வெறும் பேச்சளவில் இருந்தால் எப்படி...??
{{comments.comment}}