தமிழ்நாட்டில் இன்று 6 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம்!

Apr 24, 2025,06:35 PM IST

சென்னை:தமிழ்நாட்டில்  இன்று ஆறு மாவட்டங்களில் மதியம் ஒரு மணிக்குள் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


தமிழ்நாட்டில்  கடந்த மார்ச் மாத முதல் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பொதுவாக மே மாதத்தில்தான் அக்னி வெயிலின் தாக்கம் உச்சமாக இருக்கும். ஆனால் தற்போது ஏப்ரல் மாதத்திலேயே வெப்ப அலையுடன் வெயிலின் தாக்கம் கடுமையாக நிலவி வருகிறது. இதனால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். இருப்பினும் பருவநிலை மாற்றத்தின் காரணமாக தமிழ்நாட்டில் அவ்வப்போது ஒரு சில பகுதிகளில் மழை பெய்து வருகிறது. 




இதற்கிடையே தென் தமிழக கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நீடித்து வருகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் வரும் 25ஆம் தேதி வரை ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.


அதன்படி, நேற்று கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், பரமக்குடி, திருநெல்வேலி, சிவகங்கை, உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்தது. அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் மாம்பழத் துறையாறு மற்றும் அணைக்கெடங்கு பகுதியில் தலா 8 சென்டிமீட்டர் மழை பதிவானது. இதனால் அப்பகுதிகளில் வெக்கை தணிந்து இதமான சூழல் நிலவியது.


இந்த நிலையில் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி தென்காசி, நெல்லை, ஆகிய 6 மாவட்டங்களில் இன்று மதியம் ஒரு மணிக்குள் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு தயார் நிலையில் உள்ளது : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

news

விஷாலை திருமணம் செய்யப் போகிறேன்.. ஆகஸ்ட் 29ல் கல்யாணம்.. அறிவித்தார் சாய் தன்ஷிகா

news

தமிழகத்தில் இயல்பை விட 90 % அதிக மழை பெய்துள்ளது: சென்னை வானிலை ஆய்வு மையம்!

news

அதிமுக - பாஜக கூட்டணி தொடருமா என்பது தெரியவில்லை: விசிக தலைவர் திருமாவளவன்!

news

கர்னல் சோஃபியா குறித்த சர்ச்சை கருத்து... அமைச்சரின் மன்னிப்பை ஏற்க முடியாது... உச்சநீதிமன்றம்!

news

Operation Sindoor: பொற்கோவிலை தாக்கும் பாகிஸ்தான் திட்டத்தை.. இந்தியா முறியத்தது எப்படி?

news

வயதான தம்பதி கொலை வழக்கில் குற்றவாளிகள் கைது... போராட்டம் கைவிடப்படுகிறது... அண்ணாமலை அறிவிப்பு!

news

மீண்டும் மீண்டுமா.. சிங்கப்பூரில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு!

news

வேளாண்துறை வீழ்ச்சி தான் திமுக ஆட்சியின் சாதனையா?... டாக்டர் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்