சென்னை:தமிழ்நாட்டில் இன்று ஆறு மாவட்டங்களில் மதியம் ஒரு மணிக்குள் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாத முதல் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பொதுவாக மே மாதத்தில்தான் அக்னி வெயிலின் தாக்கம் உச்சமாக இருக்கும். ஆனால் தற்போது ஏப்ரல் மாதத்திலேயே வெப்ப அலையுடன் வெயிலின் தாக்கம் கடுமையாக நிலவி வருகிறது. இதனால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். இருப்பினும் பருவநிலை மாற்றத்தின் காரணமாக தமிழ்நாட்டில் அவ்வப்போது ஒரு சில பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

இதற்கிடையே தென் தமிழக கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நீடித்து வருகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் வரும் 25ஆம் தேதி வரை ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
அதன்படி, நேற்று கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், பரமக்குடி, திருநெல்வேலி, சிவகங்கை, உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்தது. அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் மாம்பழத் துறையாறு மற்றும் அணைக்கெடங்கு பகுதியில் தலா 8 சென்டிமீட்டர் மழை பதிவானது. இதனால் அப்பகுதிகளில் வெக்கை தணிந்து இதமான சூழல் நிலவியது.
இந்த நிலையில் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி தென்காசி, நெல்லை, ஆகிய 6 மாவட்டங்களில் இன்று மதியம் ஒரு மணிக்குள் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
என்னது பிரியாணி இல்லையா?...தேர்தல் விலைப்பட்டியலில் பிரியாணி 'மிஸ்சிங்': அரசியல் கட்சிகள் அதிர்ச்சி
பாமக ராமதாஸின் அன்புமணிக்கு எதிரான வழக்கு: தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு
த்ரிஷா பிரச்சனையே தீரல...அதுக்குள்ள நயன்தாராவா? தொடரும் நடிகர்,நடிகைகள் மீதான விமர்சனம்
காலம் காத்திருந்து பதில் சொல்லும்...ஆதவ் அர்ஜூன் கருத்திற்கு ரஜினிகாந்த் பதில்
புதுச்சேரி திமுக கூட்டணியிலும் சலசலப்பு...தொகுதி பங்கீடு உறுதி செய்ய முடியாத நிலை
தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல்: 1,111 தேர்தல் பார்வையாளர்களை நியமினம்
சி.வி.சண்முகம் மன்னிப்பு கேட்க வேண்டும்... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்
கேஸ் சிலிண்டர் பெற இனி biometric கட்டாயம்...மத்திய அரசு அதிரடி
திமுக அரசுக்கு எதிராக என்டிஏ கண்டன ஆர்ப்பாட்டம்: சென்னையில் எடப்பாடி பழனிசாமி ஆவேச உரை
{{comments.comment}}