டில்லி : பாஜக வெற்றி பெற்று, நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றால் நான் தலையை மொட்டை அடித்துக் கொள்கிறேன் என ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ சோம்நாத் பாரதி தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தல் 2024 முடிவுகள் ஜூன் 04ம் தேதி வெளியிடப்பட உள்ளன. இந்நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் நேற்று மாலை வெளியாகின. அதில் பெரும்பாலான கருத்துக் கணிப்புகள், நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி 350 க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என கூறி உள்ளன. ஆனால் இந்த கருத்து கணிப்பு முடிவுகளை திட்டவட்டமாக மறுத்துள்ள ஆம் ஆத்மி எம்எல்ஏ சோம்நாத், அப்படி நடக்க வாய்ப்பே இல்லை என அடித்துக் கூறி உள்ளார்.

இந்தியா கூட்டணி சார்பில் டில்லி லோக்சபா தொகுதி வேட்பாளராக போட்டியிட்டுள்ள சோம்நாத் பாரதி அளித்தள்ள பேட்டியில், அனைத்து கருத்துக் கணிப்பு முடிவுகளும் தவறானவை. ஓட்டுக்கள் எண்ணப்பட்டால் உண்மை என்ன என்பது தெரிந்து விடும். ஒருவேளை கருத்துக் கணிப்புகள் சொல்வது போல பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்று, நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமரானால் நான் தலையை மொட்டை அடித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், என்னுடைய வார்த்தைகளை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். ஜூன் 04ம் தேதி கருத்துக்கணிப்பு முடிவுகள் அனைத்தும் பொய்யாக போகின்றன. மோடி, மீண்டும் பிரதமராக மாட்டார். டில்லியில் உள்ள 7 இடங்களும் இந்தியா கூட்டணிக்கு தான் கிடைக்க போகிறது என்றார்.
பாஜகவுக்கு மாற்று உருவாகவில்லையா.. இந்தியா கூட்டணி வலுவடையவில்லையா?
டில்லியில் உள்ள 7 லோக்சபா தொகுதிகளில் குறைந்தது 6 தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும் என கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. ஆனால் சோம்நாத் பாரதி, டில்லியில் காங்கிரஸ் 4 இடங்களிலும், ஆம் ஆத்மி 3 இடங்களிலும் போட்டியிடுள்ளன. இந்த 7 இடங்களையும் இந்தியா கூட்டணி தான் கைப்பற்றும் என தெரிவித்துள்ளார்.
2027 ஜனவரி முதல் மதுரை எய்ம்ஸ் வெளிப்புற நோயாளிகள் பிரிவு இயங்கும்: மத்திய அரசு தகவல்
தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சந்தி சிரிக்கிறது...எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்
பள்ளி அங்கீகார மோசடி வழக்கு: முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷிடம் நாளை விசாரணை
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம் 2026: லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!
அரசிதழில் பெயரை மாற்றி திமுக எம்.பி., கனிமொழி...இனி இது தான் இவர் பெயர்
ஓங்கி ஒலித்த நிர்மலா சீதாராமன்.. ஓர் அற்புதமான நினைவுச் சுவடு!
ஆண்டுகள் பதினேழு ஆன பின்பு மீண்டுமொரு புனிதக் குளியல்.. மாமதுரை குடமுழுக்கு!
புரட்டாசி மாதத்தில் அசைவம் தவிர்க்க வேண்டும்.. காரணம் அறிவியலா.. ஆன்மீகமா?
Madurai Sourashtra recipe: சத்தான சுவையான.. கறுப்பு முழு உளுந்து சுண்டல்!
{{comments.comment}}