மோடி மீண்டும் பிரதமாரானால் மொட்டை அடிச்சுக்கிறேன்.. ஆம்ஆத்மி தலைவரின் அதிரடி சவால்!

Jun 02, 2024,01:38 PM IST

டில்லி : பாஜக வெற்றி பெற்று, நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றால் நான் தலையை மொட்டை அடித்துக் கொள்கிறேன் என ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ சோம்நாத் பாரதி தெரிவித்துள்ளார்.


லோக்சபா தேர்தல் 2024 முடிவுகள் ஜூன் 04ம் தேதி வெளியிடப்பட உள்ளன. இந்நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் நேற்று மாலை வெளியாகின. அதில் பெரும்பாலான கருத்துக் கணிப்புகள், நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி 350 க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என கூறி உள்ளன. ஆனால் இந்த கருத்து கணிப்பு முடிவுகளை திட்டவட்டமாக மறுத்துள்ள  ஆம் ஆத்மி எம்எல்ஏ சோம்நாத், அப்படி நடக்க வாய்ப்பே இல்லை என அடித்துக் கூறி உள்ளார்.




இந்தியா கூட்டணி சார்பில் டில்லி லோக்சபா தொகுதி வேட்பாளராக போட்டியிட்டுள்ள சோம்நாத் பாரதி அளித்தள்ள பேட்டியில், அனைத்து கருத்துக் கணிப்பு முடிவுகளும் தவறானவை. ஓட்டுக்கள் எண்ணப்பட்டால் உண்மை என்ன என்பது தெரிந்து விடும். ஒருவேளை கருத்துக் கணிப்புகள் சொல்வது போல பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்று, நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமரானால் நான் தலையை மொட்டை அடித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.


மேலும் அவர் கூறுகையில், என்னுடைய வார்த்தைகளை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். ஜூன் 04ம் தேதி கருத்துக்கணிப்பு முடிவுகள் அனைத்தும் பொய்யாக போகின்றன. மோடி, மீண்டும் பிரதமராக மாட்டார். டில்லியில் உள்ள 7 இடங்களும் இந்தியா கூட்டணிக்கு தான் கிடைக்க போகிறது என்றார்.


பாஜகவுக்கு மாற்று உருவாகவில்லையா.. இந்தியா கூட்டணி வலுவடையவில்லையா?


டில்லியில் உள்ள 7 லோக்சபா தொகுதிகளில் குறைந்தது 6 தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும் என கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. ஆனால் சோம்நாத் பாரதி, டில்லியில் காங்கிரஸ் 4 இடங்களிலும், ஆம் ஆத்மி 3 இடங்களிலும் போட்டியிடுள்ளன. இந்த 7 இடங்களையும் இந்தியா கூட்டணி தான் கைப்பற்றும் என தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்