கலாஷேத்திரா மாணவிகள் பாலியல் தொல்லை வழக்கில்.. பேராசிரியர் ஹரிபத்மன் கைது

Apr 03, 2023,09:38 AM IST
சென்னை: சென்னை திருவான்மியூர் கலாஷேத்திரா மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்பட்ட புகாரில் தேடப்பட்டு வந்த உதவிப் பேராசிரியர் ஹரிபத்மன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கலாஷேத்திரா பவுண்டேஷன் சார்பில் நடத்தப்பட்டு வரும் கல்லூரி ருக்மணி தேவி நுண் கலைக் கல்லூரி. இந்தக் கல்லூரியில் படித்து வரும் மாணவிகள் பாலியல் சீண்டலுக்கு ஆட்படுவதாக புகார்கள் எழுந்தன. இதை எதிர்த்து மாணவிகள் மொத்தமாக உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதால் இது தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.



சில ஆசிரியர்கள் மீது மாணவிகள் புகார் கூறினர். அவர்கள் என்னவெல்லாம் செய்தார்கள் என்பதையும் அவர்கள் குமுறலுடன் கூறியிருந்தனர். இந்த விவகாரம் பெரிதானதைத் தொடர்ந்து தேசிய மகளிர் ஆணையத் தலைவர் நேரடியாக சென்னை வந்து விசாரணை நடத்தினார். ஆனால் விவகாரத்தை அவர் மூடி மறைக்க முயல்வதாக சர்ச்சை கிளம்பியது.

இந்த நிலையில் மாநில மகளிர் ஆணையத் தலைவி குமாரி நேரில் வந்து விசாரணை நடத்தினார். அதன் பின்னர் முன்னாள் மாணவி ஒருவர் எழுத்துப் பூர்வமாக காவல் நிலையத்திற்கு நேரில் வந்து புகார் கொடுத்தார். இந்தப் புகாரின் போலீஸார் ஹரிபத்மன் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.  354ஏ, 506, மற்றும் பெண்கள் வன்கொடுமை சட்டம் ஆகிய பிரிவுகளின் ஹரிபத்மன் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

வழக்குப் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஹரிபத்மன் தலைமறைவானார். அவரை போலீஸார் தேடி வந்த நிலையில்,  தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.நண்பரின் வீட்டில் பதுங்கியிருந்ததைக் கண்டுபிடித்து போலீஸார் அவரைக் கைது செய்ததாக கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

India win Women's world cup: அபார பீல்டிங்.. அட்டகாச பவுலிங்.. இந்திய மகளிருக்கு முதல் உலகக் கோப்பை!

news

SIR பணிகளை நிறுத்த வேண்டும்.. இல்லாவிட்டால் வழக்குத் தொடர்வோம்.. அனைத்துக் கட்சிக் கூட்டம் தீர்மானம்

news

தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலை சீர்குலைக்கும் முயற்சியே SIR.. விசிக தலைவர் திருமாவளவன் பேச்சு

news

அடிப்படை ஜனநாயக உரிமையைக் கேள்விக்கு உள்ளாக்கும் சிறப்புத் தீவிரத் திருத்தம்.. தவெக

news

SIR-க்கு எதிராக ஒருங்கிணைந்து குரல் கொடுக்க வேண்டியது நமது கடமை.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

தமிழகத்தில் இன்று முதல் நவம்பர் 7ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்!

news

ஸ்ரீகாகுளம் கோவில் நிர்வாகம் அனுமதி வாங்கவில்லை...விசாரணைக்கு ஆந்திர முதல்வர் உத்தரவு

news

அரசின் தோல்விக்காக.. ஆசிரியர்கள் மற்றும் கல்வி அதிகாரிகளை கையேந்த வைப்பது கண்டிக்கத்தக்கது: அன்புமணி

news

மத்திய அரசு பள்ளிகளில் இந்தியை திணிக்கிறது...சித்தராமைய்யா காட்டம்

அதிகம் பார்க்கும் செய்திகள்