சென்னை: தமிழ்நாட்டில் நாளை லோக்சபா தேர்தல் நடந்தால் திமுக கூட்டணி மொத்தமாக 39 இடங்களிலும் வெல்லும். அதிமுக, பாஜக கூட்டணிகளுக்கு ஒரு சீட் கூட கிடைக்காது என்று இந்தியா டுடே - சிவோட்டர் - மூட் ஆப் தி நேஷன் சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா டுடோ - சிவோட்டர் இணைந்து மூட் ஆப தி நேஷன் கருத்துக் கணிப்பை நடத்தி முடிவுகளை வெளியிட்டுள்ளன. அதில் தமிழ்நாடு குறித்த முக்கிய கணிப்புகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக கூட்டணி தொடர்ந்து பலமாக உள்ளது. முன்பை விட பலம் வாய்ந்ததாக அது மாறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளையே தேர்தல் நடந்தால் திமுக கூட்டணிக்கு 39 இடங்களும் கிடைக்க வாய்ப்புள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், அதிமுக கூட்டணி மற்றும் பாஜக கூட்டணிகளுக்கு ஒரு சீட் கூட கிடைக்க வாய்ப்பில்லையாம்.

வாக்கு சதவீதத்தைப் பொறுத்தவரை திமுக கூட்டணிக்கு 52 சதவீத வாக்குகள் கிடைக்கலாம். இது கடந்த தேர்தலை விட 5 சதவீத வாக்குகள் அதிகம். கடந்த லோக்சபா தேர்தலில் 47 சதவீத வாக்குகளை திமுக கூட்டணி பெற்றது. அதிமுக கூட்டணிக்கு 20 சதவீத வாக்குகள் கிடைக்கலாம். கடந்த தேர்தலில் 23 சதவீத வாக்குகளை அதிமுக கூட்டணி பெற்றது. அதில் 3 சதவீதம் தற்போத குறைந்துள்ளது. பாஜக கூட்டணிக்கு 21 சதவீத வாக்குகள் கிடைக்க வாய்ப்புண்டு. கடந்த தேர்தலில் 18 சதவீத வாக்குகளை பாஜக கூட்டணி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
பாஜகவின் பலம் தமிழ்நாட்டில் கணிசமாக அதிகரித்துள்ளதாக இந்த கருத்துக் கணிப்பு கூறுகிறது. அதிமுக வாக்குகளை திமுகவும், பாஜகவும் பங்கு போட்டுக் கொண்டிருப்பதையே இந்த சர்வே முடிவுகள் காட்டுகின்றன.
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் குறித்து இந்தக் கருத்துக் கணிப்பில் எதுவும் கூறப்படவில்லை. அதுகுறித்து கருத்துக் கணிப்பு நடத்தப்படவில்லை என்று தெரிகிறது. ஒரு வேளை தவெகவையும் இந்த சீனுக்குள் கொண்டு வந்தால் இதே முடிவுகள் வருமா அல்லது மாற்றம் இருக்குமா என்று தெரியவில்லை.
கேரளாவில் கரையும் இடதுசாரி கூட்டணி

கேரளாவைப் பொறுத்தவரை அங்கு இடதுசாரி கூட்டணிக்கு தொடர்ந்து சரிவு காணப்படுகிறது. கடந்த லோக்சபா தேர்தலைப் போலவே இந்த முறையும் காங்கிரஸ் கூட்டணிக்கே பெரும் வெற்றி கிடைக்குமாம்.
கடந்த லோக்சபா தேர்தலின்போது காங்கிரஸ் கூட்டணி 18 இடங்களில் வென்றது. இடதுசாரிக் கூட்டணிக்கு ஒரு இடமும், பாஜகவுக்கு ஒரு இடமும் கிடைத்தன. தற்போது எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பில் பாஜகவுக்கு ஒன்று முதல் 2 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்பிருப்பதாகவும், இடதுசாரிக்கு அதிகபட்சம் ஒரு இடம் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும், காங்கிரஸ் கூட்டணி 16 முதல் 18 இடங்களை வெல்ல வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆளுநர் உரை எப்படி இருந்தது? உதயநிதி ஸ்டாலின் சொன்ன பதில்
சாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும்.. ஆளுநர் உரையில் இடம் பெற்ற அதிரடி அறிவிப்பு
ஆடலரசன் நடராஜ பெருமாநுக்கு உகந்த.. ஆனித் திருமஞ்சனம்
Power Of ‘எனக்குத் தெரியவில்லை’.. ‘I don't know’
நீண்ட இடைவெளிக்குப் பிறகு.. ஆளுநர் உரையை முழுமையாக படித்தார் ஆளுநர் ஆர்லேகர்!
Tamil Poem: மாயவலை
"யாரைக் காப்பாற்ற இந்த அறிக்கை?" - வெள்ளை அறிக்கை பற்றி தங்கம் தென்னரசு சரமாரி கேள்வி
சட்டமன்றக் கூட்டத்தொடரில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
"கட்சியாக மாறினால் வேற மாதிரி இருப்போம்".. 'We The Leaders' இயக்கம் குறித்து அண்ணாமலை
{{comments.comment}}