Mood of the Nation Poll: திமுக கூட்டணி செல்வாக்கு கிடுகிடு உயர்வு.. 39 சீட்டுகளையும் அள்ளுமாம்!

Feb 13, 2025,06:40 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் நாளை லோக்சபா தேர்தல் நடந்தால் திமுக கூட்டணி மொத்தமாக 39 இடங்களிலும் வெல்லும். அதிமுக, பாஜக கூட்டணிகளுக்கு ஒரு சீட் கூட கிடைக்காது என்று இந்தியா டுடே - சிவோட்டர் - மூட் ஆப் தி நேஷன் சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்தியா டுடோ - சிவோட்டர் இணைந்து மூட் ஆப தி நேஷன் கருத்துக் கணிப்பை நடத்தி முடிவுகளை வெளியிட்டுள்ளன. அதில் தமிழ்நாடு குறித்த முக்கிய கணிப்புகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.


தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக கூட்டணி தொடர்ந்து பலமாக உள்ளது. முன்பை விட பலம் வாய்ந்ததாக அது மாறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளையே தேர்தல் நடந்தால் திமுக கூட்டணிக்கு 39 இடங்களும் கிடைக்க வாய்ப்புள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், அதிமுக கூட்டணி மற்றும் பாஜக கூட்டணிகளுக்கு ஒரு சீட் கூட கிடைக்க வாய்ப்பில்லையாம்.




வாக்கு சதவீதத்தைப் பொறுத்தவரை திமுக கூட்டணிக்கு 52 சதவீத வாக்குகள் கிடைக்கலாம். இது கடந்த தேர்தலை விட 5 சதவீத வாக்குகள் அதிகம்.  கடந்த லோக்சபா தேர்தலில் 47 சதவீத வாக்குகளை திமுக கூட்டணி பெற்றது. அதிமுக கூட்டணிக்கு 20 சதவீத வாக்குகள் கிடைக்கலாம். கடந்த தேர்தலில் 23 சதவீத வாக்குகளை அதிமுக கூட்டணி பெற்றது. அதில் 3 சதவீதம் தற்போத குறைந்துள்ளது. பாஜக கூட்டணிக்கு 21 சதவீத வாக்குகள் கிடைக்க வாய்ப்புண்டு. கடந்த தேர்தலில் 18 சதவீத வாக்குகளை பாஜக கூட்டணி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.


பாஜகவின் பலம் தமிழ்நாட்டில் கணிசமாக அதிகரித்துள்ளதாக இந்த கருத்துக் கணிப்பு கூறுகிறது. அதிமுக வாக்குகளை திமுகவும், பாஜகவும் பங்கு போட்டுக் கொண்டிருப்பதையே இந்த சர்வே முடிவுகள் காட்டுகின்றன.


நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் குறித்து இந்தக் கருத்துக் கணிப்பில் எதுவும் கூறப்படவில்லை. அதுகுறித்து கருத்துக் கணிப்பு நடத்தப்படவில்லை என்று தெரிகிறது. ஒரு வேளை தவெகவையும் இந்த சீனுக்குள் கொண்டு வந்தால் இதே முடிவுகள் வருமா அல்லது மாற்றம் இருக்குமா என்று தெரியவில்லை.


கேரளாவில் கரையும் இடதுசாரி கூட்டணி




கேரளாவைப் பொறுத்தவரை அங்கு இடதுசாரி கூட்டணிக்கு தொடர்ந்து சரிவு காணப்படுகிறது. கடந்த லோக்சபா தேர்தலைப் போலவே இந்த முறையும் காங்கிரஸ் கூட்டணிக்கே பெரும் வெற்றி கிடைக்குமாம்.


கடந்த லோக்சபா தேர்தலின்போது காங்கிரஸ் கூட்டணி 18 இடங்களில் வென்றது. இடதுசாரிக் கூட்டணிக்கு ஒரு இடமும், பாஜகவுக்கு ஒரு இடமும் கிடைத்தன. தற்போது எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பில் பாஜகவுக்கு ஒன்று முதல் 2 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்பிருப்பதாகவும், இடதுசாரிக்கு அதிகபட்சம் ஒரு இடம் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும், காங்கிரஸ் கூட்டணி 16 முதல் 18 இடங்களை வெல்ல வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

குதிரைவாலி அரிசி-பாசி பருப்பு பொங்கல் .. மா இஞ்சி மல்லித்தழை சட்னி சேர்த்து சாப்பிட்டால் சூப்பரப்பு!

news

திமுகவில் இருப்பவர்கள் சிறைக்கு அஞ்சாத சிங்கங்கள் : அமைச்சர் சேகர்பாபு

news

தொகுதி மறுசீரமைப்பு விழிப்புணர்வு தேசிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

பிரபல இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ், சைந்தவி தம்பதி.. ஓரே காரில் வந்து பரஸ்பர விவாகரத்து மனு தாக்கல்

news

பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள..துணைவேந்தர் பணியிடங்களை நிரப்புக.. டாக்டர் ராமதாஸ் கோரிக்கை!

news

கோயம்பேட்டில் காய்களின் வரத்து அதிகரிப்பு..முருங்கைக்காய் விலை 10 மடங்கு வீழ்ச்சி.. விவசாயிகள் கவலை!

news

Today gold rate:தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை... என்ன காரணம் தெரியுமா?

news

Mumbai Indians.. என்ன கொடுமை சார் இது.. 13 வருஷமா இப்படியே நடந்திட்டிருந்தா எப்படி சார்!

news

தல, தல தான்... இளம் வீரர்களை மனம் திறந்து பாராட்டும் தோனி... ரசிகர்களிடம் குவியும் வாழ்த்து

அதிகம் பார்க்கும் செய்திகள்