யூடியூபர் சவுக்கு சங்கர் மீது.. சென்னை, திருச்சி, சேலத்தில்.. வழக்குகள் பதிவு!

May 08, 2024,03:17 PM IST

சென்னை: பிரபல யுடியூபர் சவுக்கு சங்கர் மீது  மேலும் பல வழக்குகள் பதிவாகியுள்ளன. கோவை சைபர் கிரைம் போலீஸார் போட்ட வழக்கில் கைதாகி, ஏகற்கனவே சிறையில் உள்ள நிலையில், இன்று மீண்டும் சென்னை, தேனி, சேலம் ஆகிய மாவட்டங்களிலும் பெண்களை அவதூறாக பேசிய வழக்கில் சைபர் கிரைம் போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர். 


யூடியூபர் சவுக்கு சங்கர் பெண்கள் மற்றும் பெண் போலீசாரை பற்றி அவதூறாக பேசிய வழக்கில் கோவை சைபர் க்ரைம் போலீசார் அவர் மீது ஏற்கனவே வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதைத் தொடர்ந்து தேனி போலீசாரும் இரண்டாவது முறையாக சவுக்கு சங்கர் விடுதியில் தங்கியிருக்கும் போது காரில் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்ததாக வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டார்.


இந்த நிலையில் கோவை மற்றும் தேனியில் ஏற்கனவே சவுக்கு சங்கரின் பெயரில் வழக்கு பதிவாகியுள்ள நிலையில் தற்போது சேலம், திருச்சி மற்றும் சென்னையிலும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன.




சென்னையில் தனியார் தொலைக்காட்சியில் பணிபுரியும் பெண் ஒருவர் தற்போது சவுக்கு சங்கர் மீது புகார் கொடுத்துள்ளார். அதன்படி சென்னை சைபர் கிரைம் போலீசார் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு போடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழர் முன்னேற்ற படைத்தலைவர் வீரலட்சுமியும் சவுக்கு சங்கர் மீது புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் அவர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் சென்னை சைபர் கிரைம் போலீசார் மேலும் ஒரு வழக்கை பதிவு செய்துள்ளனர்.


அதேபோல் திருச்சியை சேர்ந்த பெண் ஒருவர் சவுக்கு சங்கர் மீது புகார் அளித்துள்ளார்.இதன் அடிப்படையில் திருச்சி மாநகர சைபர் கிரைம் போலீசார் சவுக்கு சங்கர் மீது ஆபாசமாக பேசுதல், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல், பெண்களை இழிவுபடுத்துதல், தகவல் தொழில்நுட்பம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை ஆகிய ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு போடப்பட்டுள்ளது.


இதனைத் தொடர்ந்து சேலத்திலும் சவுக்கு சங்கர் மீது ஒரு புகார் எழுந்துள்ளது. அதில் சப் இன்ஸ்பெக்டர் கீதா சவுக்கு சங்கர் பேசிய வார்த்தைகள் தன்னை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கி உள்ளதாகவும், அதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகார் அளித்திருந்தார். அதன் பேரில் தகாத வார்த்தையில் பேசுதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் , துன்புறுத்துதல், உள்ளிட்ட ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் சவுக்கு சங்கர் மீது புகார்கள் குவிந்து வருவதால் வழக்குகளும் பதிவாகி வருகின்றன. அனைத்து வழக்கிலும் அவர் கைது செய்யப்பட்டால்,  ஜாமீனில் வருவது பெரும் சிரமமாகும் என்று கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்