தீபாவளி திருநாளையொட்டி.. அயோத்தியில் 25 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றி.. புதிய உலக சாதனை!

Oct 31, 2024,10:49 AM IST

அயோத்தி: அயோத்தியில் தீபாவளித் திருநாளையொட்டி 25 லட்சத்திற்கும் மேற்பட்ட விளக்குகள் ஏற்றி புதிய உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது.  சரயு நதிக்கரையில் இந்த விளக்குகள் ஏற்றி வைக்கப்பட்டிருந்தன. 


முன்னதாக 28 லட்சம் விளக்குகளை ஏற்ற முதலில் திட்டமிடப்பட்டிருந்தது. இருப்பினும் 25 லட்சத்து 12 ஆயிரத்து 585 விளக்குகளே ஏற்ற முடிந்தது. இதுவே உலக சாதனைதான்.


இந்தியா தவிர மியான்மர், நேபாளம், தாய்லாந்து, மலேசியா, கம்போடியா, இந்தோனேசியா நாடுகளைச் சேர்ந்த பலரும் இந்த விளக்கேற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பல்வேறு கலை, கலாச்சார நிகழ்ச்சிகளுக்கும் இந்த விழாவின்போது ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  இதுதவிர ராம் லீலாவும் உத்தரகாண்ட் மாநிலக் கலைஞர்கள் சார்பில் நடத்தப்பட்டது. 




முன்னதாக  அலங்கார தேர் பவனியையும் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் தொடங்கி வைத்தார். விளக்கேற்றும் நிகழ்ச்சியை வருடா வருடம் தீபோத்சவ் என்ற பெயரில் உத்தரப் பிரதேச அரசு கொண்டாடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதையொட்டி அலங்கார ரதங்களும் பவனி வரும். இந்த முறை சுற்றுலாத்துறை மூலம் ராமாயானத்தை விளக்கும் அலங்கார ரதங்கள் வடிவமைக்கப்பட்டு பவனி வந்தன. 11க்கும் மேற்பட்ட தேர்கள் பவனி வந்தன.


அயோத்தியில் ராமர் கோவில் வந்த பிறகு நடைபெறும் முதல் தீபோத்சவ் விழா என்பதால் இந்த விழா இந்த முறை பிரமாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்