தீபாவளி திருநாளையொட்டி.. அயோத்தியில் 25 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றி.. புதிய உலக சாதனை!

Oct 31, 2024,10:49 AM IST

அயோத்தி: அயோத்தியில் தீபாவளித் திருநாளையொட்டி 25 லட்சத்திற்கும் மேற்பட்ட விளக்குகள் ஏற்றி புதிய உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது.  சரயு நதிக்கரையில் இந்த விளக்குகள் ஏற்றி வைக்கப்பட்டிருந்தன. 


முன்னதாக 28 லட்சம் விளக்குகளை ஏற்ற முதலில் திட்டமிடப்பட்டிருந்தது. இருப்பினும் 25 லட்சத்து 12 ஆயிரத்து 585 விளக்குகளே ஏற்ற முடிந்தது. இதுவே உலக சாதனைதான்.


இந்தியா தவிர மியான்மர், நேபாளம், தாய்லாந்து, மலேசியா, கம்போடியா, இந்தோனேசியா நாடுகளைச் சேர்ந்த பலரும் இந்த விளக்கேற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பல்வேறு கலை, கலாச்சார நிகழ்ச்சிகளுக்கும் இந்த விழாவின்போது ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  இதுதவிர ராம் லீலாவும் உத்தரகாண்ட் மாநிலக் கலைஞர்கள் சார்பில் நடத்தப்பட்டது. 




முன்னதாக  அலங்கார தேர் பவனியையும் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் தொடங்கி வைத்தார். விளக்கேற்றும் நிகழ்ச்சியை வருடா வருடம் தீபோத்சவ் என்ற பெயரில் உத்தரப் பிரதேச அரசு கொண்டாடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதையொட்டி அலங்கார ரதங்களும் பவனி வரும். இந்த முறை சுற்றுலாத்துறை மூலம் ராமாயானத்தை விளக்கும் அலங்கார ரதங்கள் வடிவமைக்கப்பட்டு பவனி வந்தன. 11க்கும் மேற்பட்ட தேர்கள் பவனி வந்தன.


அயோத்தியில் ராமர் கோவில் வந்த பிறகு நடைபெறும் முதல் தீபோத்சவ் விழா என்பதால் இந்த விழா இந்த முறை பிரமாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

வடதமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு இருக்காம் மக்களே: வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

அதிமுக கூட்டணியில் அமமுக.,விற்கு 6 சீட்டா?...உண்மையை உடைத்த டிடிவி தினகரன்

news

அதிமுக எத்தனை இடங்களில் போட்டி? பாஜக., கேட்பது என்ன?...வெளியான சுவாரஸ்ய தகவல்

news

தமிழ்நாட்டில் இருந்து ஒலிக்கும் இந்திய விவசாயிகளுக்கான குரல்: முதல்வர் முக ஸ்டாலின்!

news

அதி நவீன வசதிகளுடன் 20 வால்வோ பேருந்துகள்.. சொகுசாக இனி போகலாம்..!

news

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து.. புளூ பேர்ட் செயற்கைக்கோளுடன்.. விண்ணில் பாய்ந்த எல்.வி.எம்.3-எம்.6

news

ஆரவல்லி மலைத் தொடர்.. இமயமலைக்கே சீனியர்.. கணிமத் திருடர்களிடம் சிக்கி சிதையும் அவலம்!

news

2026 தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில்.. 30% வாக்குகள் கிடைக்கும்.. தவெக சொல்கிறது!

news

டிசம்பர் 28 முதல் 30 வரை...இபிஎஸ் தேர்தல் பிரசாரம்...புதிய விபரம் வெளியீடு

அதிகம் பார்க்கும் செய்திகள்