அயோத்தி: அயோத்தியில் தீபாவளித் திருநாளையொட்டி 25 லட்சத்திற்கும் மேற்பட்ட விளக்குகள் ஏற்றி புதிய உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது. சரயு நதிக்கரையில் இந்த விளக்குகள் ஏற்றி வைக்கப்பட்டிருந்தன.
முன்னதாக 28 லட்சம் விளக்குகளை ஏற்ற முதலில் திட்டமிடப்பட்டிருந்தது. இருப்பினும் 25 லட்சத்து 12 ஆயிரத்து 585 விளக்குகளே ஏற்ற முடிந்தது. இதுவே உலக சாதனைதான்.
இந்தியா தவிர மியான்மர், நேபாளம், தாய்லாந்து, மலேசியா, கம்போடியா, இந்தோனேசியா நாடுகளைச் சேர்ந்த பலரும் இந்த விளக்கேற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பல்வேறு கலை, கலாச்சார நிகழ்ச்சிகளுக்கும் இந்த விழாவின்போது ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதுதவிர ராம் லீலாவும் உத்தரகாண்ட் மாநிலக் கலைஞர்கள் சார்பில் நடத்தப்பட்டது.

முன்னதாக அலங்கார தேர் பவனியையும் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் தொடங்கி வைத்தார். விளக்கேற்றும் நிகழ்ச்சியை வருடா வருடம் தீபோத்சவ் என்ற பெயரில் உத்தரப் பிரதேச அரசு கொண்டாடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதையொட்டி அலங்கார ரதங்களும் பவனி வரும். இந்த முறை சுற்றுலாத்துறை மூலம் ராமாயானத்தை விளக்கும் அலங்கார ரதங்கள் வடிவமைக்கப்பட்டு பவனி வந்தன. 11க்கும் மேற்பட்ட தேர்கள் பவனி வந்தன.
அயோத்தியில் ராமர் கோவில் வந்த பிறகு நடைபெறும் முதல் தீபோத்சவ் விழா என்பதால் இந்த விழா இந்த முறை பிரமாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
நவம்பர் 22ல் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி...எங்கெல்லாம் மழை பெய்யும் தெரியுமா?... இதோ முழு விபரம்!
மதுரை - கோவைக்கு மெட்ரோ ரயில் சேவை வரும் : முதல்வர் மு.க.ஸ்டாலின்
சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்விற்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு!
துருப்பிடித்துப் போய்விட்ட திமுக ஆட்சிக்கு நேற்று நடந்த குற்றங்களே சாட்சி: நயினார் நாகேந்திரன்
கொரியன்களுக்கு ஏன் தொப்பை இல்லை தெரியுமா.. கவிஞர் சொல்கிறார் கேளுங்கள்!
சபரிமலையில் குவியும் ஐயப்ப பக்தர்கள்.. தேசிய பேரிடர் மீட்புக் குழுவும் வருகை!
மதுரை, கோவை மெட்ரோ திட்டம் வராதா.. கவலையில் மக்கள்.. கேள்விக் கனை தொடுக்கும் எம்.பிக்கள்
மீண்டும் பீகார் முதல்வராகிறார் நிதீஷ் குமார்.. இன்று தேஜகூ சட்டமன்ற தலைவராக தேர்வாகிறார்
TET தேர்வு.. சோசியல் சயின்ஸுக்கு மட்டும் ஏன் இந்த சலுகை.. முரண்களைக் களையுங்களேன்!
{{comments.comment}}