மொராக்கோவை உலுக்கிய பயங்கர பூகம்பம்... 300க்கும் மேற்பட்டோர் பலி

Sep 09, 2023,09:26 AM IST
மரகேஷ், மொராக்கோ: மொராக்கோ நாட்டில்  இன்று அதிகாலையில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் சிக்கி 300க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மிகப் பெரிய பொருட் சேதமும் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

மரகேஷ் என்ற நகரம் பூகம்பத்தில் பெரும் சேதத்தை சந்தித்துள்ளது. அங்கு வீடுகள் இடிந்து நொறுங்கி விட்டன. கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் சேதமடைந்துள்ளன. நகரமே அலங்கோலமாகியுள்ளது.

மொராக்கோவை தாக்கிய பூகம்பத்தின் அளவு 6.8 ரிக்டர் என்று அமெரிக்க பூகம்பவியல் கழகம் தெரிவித்துள்ளது. இதுவரை 300 பேர் வரை இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. 



பூகம்பத்தின் பாதிப்பு அதிகம் இருப்பதால் உயிர்ப்பலி உயரும் என்று அஞ்சப்படுகிறது. மரகேஷ் மட்டுமல்லாமல், ஓகாய் மெடன் என்ற நகரிலும் கூட பூகம்ப பாதிப்புகள் உள்ளன. பூமிக்கு அடியில் 18.5 கிலோமீட்டர் அளவில் பூகம்பத்தின் மையப் பகுதி இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி இரவு 11 மணிக்கு இந்த பூகம்பம் ஏற்பட்டுள்ளது. 

மரகேஷ் என்பது வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த பழமையான நகராகும். பூகம்பத்தில் சிக்கி ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளன. அடுத்தடுத்து நில அதிர்வுகள் ஏற்படலாம் என்பதால் மக்கள் முன்னெச்சரிக்கையாக வீடுகளை விட்டு தெருவில் குழுமியுள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

அடுத்தாத்து அம்புஜத்தை பார்த்தேளா.. மறக்க முடியாத செளகார் ஜானகி.. பின்னி எடுத்த வேடங்கள்..!

news

"திமுக எம்எல்ஏ.,க்களுக்கு கார் வேண்டாம்!" – சட்டமன்றத்தில் உதயநிதி ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!

news

ஃபைலை திறக்க ஜோசியக்காரர் சொல்லணுமா? உதயநிதி காரசார பேச்சு

news

எம்எல்ஏ.,க்களுக்கு கார் கொடுப்பது ஏன்? அமைச்சர் ஆதவ் அர்ஜூனா விளக்கம்

news

பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்

news

ஏ டி எம் கார்டு இல்லாமல் பணம் எடுப்பது எப்படி? நேரில் செயல் விளக்கம் பெற்ற மாணவர்கள்!

news

டெல்லியில் டிஜிபி அலுவலகம் முன்பு ராகுல் காந்தி திடீர் தர்ணா போராட்டம்

news

Varalakshmi Nonbu: வரலட்சுமி பூஜை ஏன் செய்யப்படுகிறது?

news

சிந்தனைச் சிதறல்: எந்த ஒன்றையும் உதாசீனப்படுத்தி விடாதீர்கள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்