மொராக்கோவை உலுக்கிய பயங்கர பூகம்பம்... 300க்கும் மேற்பட்டோர் பலி

Sep 09, 2023,09:26 AM IST
மரகேஷ், மொராக்கோ: மொராக்கோ நாட்டில்  இன்று அதிகாலையில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் சிக்கி 300க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மிகப் பெரிய பொருட் சேதமும் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

மரகேஷ் என்ற நகரம் பூகம்பத்தில் பெரும் சேதத்தை சந்தித்துள்ளது. அங்கு வீடுகள் இடிந்து நொறுங்கி விட்டன. கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் சேதமடைந்துள்ளன. நகரமே அலங்கோலமாகியுள்ளது.

மொராக்கோவை தாக்கிய பூகம்பத்தின் அளவு 6.8 ரிக்டர் என்று அமெரிக்க பூகம்பவியல் கழகம் தெரிவித்துள்ளது. இதுவரை 300 பேர் வரை இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. 



பூகம்பத்தின் பாதிப்பு அதிகம் இருப்பதால் உயிர்ப்பலி உயரும் என்று அஞ்சப்படுகிறது. மரகேஷ் மட்டுமல்லாமல், ஓகாய் மெடன் என்ற நகரிலும் கூட பூகம்ப பாதிப்புகள் உள்ளன. பூமிக்கு அடியில் 18.5 கிலோமீட்டர் அளவில் பூகம்பத்தின் மையப் பகுதி இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி இரவு 11 மணிக்கு இந்த பூகம்பம் ஏற்பட்டுள்ளது. 

மரகேஷ் என்பது வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த பழமையான நகராகும். பூகம்பத்தில் சிக்கி ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளன. அடுத்தடுத்து நில அதிர்வுகள் ஏற்படலாம் என்பதால் மக்கள் முன்னெச்சரிக்கையாக வீடுகளை விட்டு தெருவில் குழுமியுள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

கரூர் சம்பவ வழக்கில் நாளை விசாரணை : ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோருக்கு தடை விதிக்க திமுக கோரிக்கை

news

ஜூலை 21ம் தேதி சென்னை வருகிறார் ராகுல்காந்தி: முதல்வர் விஜய்யை சந்திப்பாரா?

news

தவெக அரசுக்கு ஓராண்டு அவகாசம் தர வேண்டும்: அண்ணாமலை பரபரப்பு பேச்சு!

news

மதிமுக.,விடம் திமுக குதிரை பேரம் நடத்தியது: வைகோ பகீர் குற்றச்சாட்டு

news

செந்தில் பாலாஜி, அசோக்குமாரின் முன்ஜாமீன் வழக்கு வேறு நீதிபதிக்கு மாற்றம்!

news

ரேஸ் வேண்டாம்...நடிக்க வாங்க அஜித் - மன்சூர் அலிகான் வேண்டுகோள்

news

அமைச்சர் ஆனந்துடன் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் திடீர் சந்திப்பு

news

அயோத்தி ராமர் கோயில் நன்கொடையில் தினசரி ரூ.6-8 லட்சம் திருட்டா?

news

சம்மன் அனுப்பிய போலீஸ்...ஆஜராகாத செந்தில் பாலாஜி...அடுத்து என்ன?

அதிகம் பார்க்கும் செய்திகள்