மொராக்கோவை உலுக்கிய பயங்கர பூகம்பம்... 300க்கும் மேற்பட்டோர் பலி

Sep 09, 2023,09:26 AM IST
மரகேஷ், மொராக்கோ: மொராக்கோ நாட்டில்  இன்று அதிகாலையில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் சிக்கி 300க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மிகப் பெரிய பொருட் சேதமும் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

மரகேஷ் என்ற நகரம் பூகம்பத்தில் பெரும் சேதத்தை சந்தித்துள்ளது. அங்கு வீடுகள் இடிந்து நொறுங்கி விட்டன. கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் சேதமடைந்துள்ளன. நகரமே அலங்கோலமாகியுள்ளது.

மொராக்கோவை தாக்கிய பூகம்பத்தின் அளவு 6.8 ரிக்டர் என்று அமெரிக்க பூகம்பவியல் கழகம் தெரிவித்துள்ளது. இதுவரை 300 பேர் வரை இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. 



பூகம்பத்தின் பாதிப்பு அதிகம் இருப்பதால் உயிர்ப்பலி உயரும் என்று அஞ்சப்படுகிறது. மரகேஷ் மட்டுமல்லாமல், ஓகாய் மெடன் என்ற நகரிலும் கூட பூகம்ப பாதிப்புகள் உள்ளன. பூமிக்கு அடியில் 18.5 கிலோமீட்டர் அளவில் பூகம்பத்தின் மையப் பகுதி இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி இரவு 11 மணிக்கு இந்த பூகம்பம் ஏற்பட்டுள்ளது. 

மரகேஷ் என்பது வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த பழமையான நகராகும். பூகம்பத்தில் சிக்கி ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளன. அடுத்தடுத்து நில அதிர்வுகள் ஏற்படலாம் என்பதால் மக்கள் முன்னெச்சரிக்கையாக வீடுகளை விட்டு தெருவில் குழுமியுள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

மீண்டும் வரலாறு .. ஜூன் 18ல் ராஜ்யசபா இடைத் தேர்தல்.. தவெகவுக்கு முதல் எம்.பி. கிடைக்க வாய்ப்பு!

news

திமுகவிடம் கண்ணியம் இல்லை; ஆ.ராசா மன்னிப்பு கேட்கணும்: ஆதவ் அர்ஜூனா ஆவேசம்

news

ஒரு புதிய வரலாறு.. முதல் முறையாக அமைச்சர் பதவியில் அமர்ந்த விசிக, முஸ்லீம் லீக்!

news

சாதாரணத்தில் இருந்து அ(மிக)சாதாரணத்திற்கு… (Ordinary to Extraordinary..)

news

ஆஹா, உன்னைக் காண இதோ வந்து கொண்டே இருக்கிறேன்.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்- 8)

news

கோடை வெயில் ஆபத்தாகாமல் இருக்க வீட்டில் இந்த 10 தவறுகளை செய்துடாதீங்க

news

வைகாசி விசாகம் 2026.. முருகப் பெருமானுக்குரிய முக்கிய தினம்.. மிக மிக சிறப்பு!

news

தாயன்பு !

news

All Is Well.. சவால்களை நம்பிக்கையுடன் சந்திப்போம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்