டில்லி : நடந்து முடிந்துள்ள லோக்சபா தேர்தல் 2024 ல் பாஜக கூட்டணி தனிப்பெரும்பான்மையுடன் அதிக இடங்களில் வெற்றி பெற்று, மூன்றாவது முறையாக மத்தியில் ஆட்சி அமைக்க உள்ளதாக நாடு முழுவதும் நடத்தப்பட்ட தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
ஏப்ரல் 19ம் தேதி துவங்கி, ஜூன் 01 ம் தேதி வரை நாடு முழுவதும் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் 2024 ஓட்டுப்பதிவு நடந்து முடிந்துள்ளது. இதில் பதிவான ஓட்டுக்கள் ஜூன் 04ம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்நிலையில் இன்று பல்வேறு மீடியாக்கள் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புக்களை வெளியிட்டுள்ளன.
இதில் பெரும்பாலான கணிப்புகளில் பாஜக கூட்டணி 350 க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ள நிறுவனங்கள் கூறியுள்ள முடிவுகள் முழு விபரம் :
இந்தியா நியூஸ் - டி டைனமிக்ஸ் :
பாஜக கூட்டணி - 371
இந்தியா கூட்டணி - 125
மற்றவை - 47
ஜன் கி பாத் :
பாஜக கூட்டணி - 362 முதல் 392
இந்தியா கூட்டணி - 141 முதல் 161 வரை
மற்றவை - 10 முதல் 20 வரை
ரிபப்ளிக் பாரத் - மேட்ரிஸ் :
பாஜக கூட்டணி - 353 முதல் 368 வரை
இந்தியா கூட்டணி - 118 முதல் 133 வரை
மற்றவை - 43 முதல் 48 வரை
ரிபப்ளிக் டிவி - பி மார்க் :
பாஜக கூட்டணி - 359
இந்தியா கூட்டணி - 154
மற்றவை - 30
டிவி 5 தெலுங்கு :
பாஜக கூட்டணி - 359
இந்தியா கூட்டணி - 154
மற்றவை - 30
என்டி டிவி (போல் ஆஃப் போல்ஸ்):
பாஜக கூட்டணி - 365
இந்தியா கூட்டணி - 142
மற்றவை - 36
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}