நிறைய மொழிகள் கத்துக்கலாம்.. தப்பில்லை.. எனக்கு 8 மொழிகள் பேசத் தெரியும்.. சொல்கிறார் சுதா மூர்த்தி

Mar 12, 2025,06:44 PM IST

பெங்களூரு: தேசியக் கல்விக் கொள்கை சிறந்த முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனக்கெல்லாம் 8 மொழிகள் தெரியும் என்று கூறியுள்ளார் ராஜ்யசபா எம்பியான சுதா மூர்த்தி.


இன்போசிஸ்  நாராயணமூர்த்தியின் மனைவிதான் சுதா மூர்த்தி. மும்மொழிக் கொள்கை தேசிய அளவில் பேசு பொருளாகியுள்ளது. இதற்குக் காரணம், இந்தத் திட்டத்தால் ஏற்படும் பாதகங்கள் குறித்து திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டு வரும் கருத்துக்களே. 


இந்த நிலையில் தேசியக் கல்விக் கொள்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் சுதா மூர்த்தி. இதுகுறித்து அவர் கூறுகையில், பல மொழிகளை கற்றுக் கொள்ள வேண்டும். அதில் தவறு இல்லை. எனக்கெல்லாம் 7, 8 மொழிகள் தெரியும். இதனால் பல விஷயங்களை என்னால் அறிந்து கொள்ள முடிகிறது. எனது பிள்ளைகளுக்கும் இதையே நான் பரிந்துரைப்பேன். தேசியக் கல்விக் கொள்கை, குழந்தைகள் பல மொழிகளை கற்றுக் கொள்வதை ஊக்குவிக்கிறது, வாய்ப்பளிக்கிறது என்றார் சுதா மூர்த்தி.




மத்திய அரசின் தேசியக் கல்வி கொள்கைக்கு தமிழ்நாடு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்தக் கொள்கையை ஏற்க மாட்டோம் என்றும் தமிழ்நாடு அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. பாஜகவைத் தவிர மற்ற அரசியல் கட்சிகள் அனைத்தும் கூட இந்த்த திட்டத்தை ஏற்க முடியாது என்று கூறி விட்டன. திமுக தரப்பில் பல்வேறு கட்ட போராட்டங்களும் அறிவிக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்