பெங்களூரு: தேசியக் கல்விக் கொள்கை சிறந்த முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனக்கெல்லாம் 8 மொழிகள் தெரியும் என்று கூறியுள்ளார் ராஜ்யசபா எம்பியான சுதா மூர்த்தி.
இன்போசிஸ் நாராயணமூர்த்தியின் மனைவிதான் சுதா மூர்த்தி. மும்மொழிக் கொள்கை தேசிய அளவில் பேசு பொருளாகியுள்ளது. இதற்குக் காரணம், இந்தத் திட்டத்தால் ஏற்படும் பாதகங்கள் குறித்து திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டு வரும் கருத்துக்களே.
இந்த நிலையில் தேசியக் கல்விக் கொள்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் சுதா மூர்த்தி. இதுகுறித்து அவர் கூறுகையில், பல மொழிகளை கற்றுக் கொள்ள வேண்டும். அதில் தவறு இல்லை. எனக்கெல்லாம் 7, 8 மொழிகள் தெரியும். இதனால் பல விஷயங்களை என்னால் அறிந்து கொள்ள முடிகிறது. எனது பிள்ளைகளுக்கும் இதையே நான் பரிந்துரைப்பேன். தேசியக் கல்விக் கொள்கை, குழந்தைகள் பல மொழிகளை கற்றுக் கொள்வதை ஊக்குவிக்கிறது, வாய்ப்பளிக்கிறது என்றார் சுதா மூர்த்தி.

மத்திய அரசின் தேசியக் கல்வி கொள்கைக்கு தமிழ்நாடு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்தக் கொள்கையை ஏற்க மாட்டோம் என்றும் தமிழ்நாடு அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. பாஜகவைத் தவிர மற்ற அரசியல் கட்சிகள் அனைத்தும் கூட இந்த்த திட்டத்தை ஏற்க முடியாது என்று கூறி விட்டன. திமுக தரப்பில் பல்வேறு கட்ட போராட்டங்களும் அறிவிக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}