நிறைய மொழிகள் கத்துக்கலாம்.. தப்பில்லை.. எனக்கு 8 மொழிகள் பேசத் தெரியும்.. சொல்கிறார் சுதா மூர்த்தி

Mar 12, 2025,06:44 PM IST

பெங்களூரு: தேசியக் கல்விக் கொள்கை சிறந்த முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனக்கெல்லாம் 8 மொழிகள் தெரியும் என்று கூறியுள்ளார் ராஜ்யசபா எம்பியான சுதா மூர்த்தி.


இன்போசிஸ்  நாராயணமூர்த்தியின் மனைவிதான் சுதா மூர்த்தி. மும்மொழிக் கொள்கை தேசிய அளவில் பேசு பொருளாகியுள்ளது. இதற்குக் காரணம், இந்தத் திட்டத்தால் ஏற்படும் பாதகங்கள் குறித்து திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டு வரும் கருத்துக்களே. 


இந்த நிலையில் தேசியக் கல்விக் கொள்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் சுதா மூர்த்தி. இதுகுறித்து அவர் கூறுகையில், பல மொழிகளை கற்றுக் கொள்ள வேண்டும். அதில் தவறு இல்லை. எனக்கெல்லாம் 7, 8 மொழிகள் தெரியும். இதனால் பல விஷயங்களை என்னால் அறிந்து கொள்ள முடிகிறது. எனது பிள்ளைகளுக்கும் இதையே நான் பரிந்துரைப்பேன். தேசியக் கல்விக் கொள்கை, குழந்தைகள் பல மொழிகளை கற்றுக் கொள்வதை ஊக்குவிக்கிறது, வாய்ப்பளிக்கிறது என்றார் சுதா மூர்த்தி.




மத்திய அரசின் தேசியக் கல்வி கொள்கைக்கு தமிழ்நாடு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்தக் கொள்கையை ஏற்க மாட்டோம் என்றும் தமிழ்நாடு அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. பாஜகவைத் தவிர மற்ற அரசியல் கட்சிகள் அனைத்தும் கூட இந்த்த திட்டத்தை ஏற்க முடியாது என்று கூறி விட்டன. திமுக தரப்பில் பல்வேறு கட்ட போராட்டங்களும் அறிவிக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பீகார் சட்டசபைத் தேர்தல் முடிவுகள்.. அனைவருக்குமான பாடம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

பீகார் தேர்தல் முடிஞ்சாச்சு.. பாஜக.,வின் அடுத்த கவனம் எங்கு தெரியுமா.. இங்கு தான்!

news

நயினார் நாகேந்திரனுக்கு பாஜக தலைமை கொடுத்த 'அசைன்மென்ட்' இது தானாமே!

news

புதிய காற்றழுத்த தாழ்வு.. நவம்பர் 17ம் தேதி 6 மாவட்டங்களில் மிக கனமழைக்கான வாய்ப்பு - வானிலை மையம்

news

10 ஆண்டுகளில் பாஜக.வின் அசுரத்தனமான வளர்ச்சி... யாருக்கெல்லாம் ஆபத்து?

news

எங்களை அழைக்காமல் கூட்டம் போட்டால் எப்படி.. தேர்தல் ஆணையத்திற்கு விஜய் கேள்வி

news

74 வயதிலும் டப் கொடுக்கும் நிதீஷ் குமார்.. தேஜஸ்வி, காங்கிரஸ் கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு!

news

தூய்மையின் வடிவம் மற்றும் புத்திசாலித்தனத்தின் அற்புதம் (குழந்தைப் பருவம்)

news

கல்வி கற்பதின் நோக்கம் பணம் சம்பாதிக்க மட்டுமல்ல.. விட்டுக்கொடுத்தும், பற்றி வாழ்தலுமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்