சென்னை: மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட 2023-24 பஸ் பாஸை வருகிற 31ம் தேதி வரை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
மாற்றுத் திறனாளிகளுக்கான பஸ் பாஸ் ஆன்லைன் மூலமாக வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான பஸ் பாஸ் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் முழுமையாக வழங்கி முடிக்கவில்லை. இதையடுத்து தற்போது முக்கிய அறிவிப்பு ஒன்றை மாநகர போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ளது.
அதில், மாற்றுத்திறனாளிகள் 2024 -2025ம் ஆண்டுக்குரிய Online Travel Concessional Pass இணையதளம் வாயிலாக பெரும் வரை 2023-24 ஆண்டிற்கு மாநகர போக்குவரத்து கழகத்தால் வழங்கப்பட்ட பேருந்து பயண அட்டை வைத்திருப்பவர்களை, ஜூன் 31ம் தேதி வரை பயணம் செய்ய அனுமதிக்கப்படுகிறது.
மாற்றுத்திறனாளிகள் 2024-25க்குரிய ஆன்லைன் டிராவல் கன்செசன் பாஸ் இணையதளம் வாயிலாக பெற்றுக் கொண்டு வருகிறார்கள். இருப்பினும் மாற்றுத்திறனாளிகள் நலச் சங்கங்கள், அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து பேருந்து பயண அட்டை பெற்றுக் கொள்ளும் வரை ஆகஸ்டு 2024 வரை கால அவகாசம் கொடுக்கக் கோரியுள்ளனர்.
அதன் அடிப்படையில் அனைத்து மாற்றுத் திறனாளிகளும் பாஸ் பெற்றுக் கொள்வதற்காக 2023-24 ஆண்டுக்கு மாநகரப் போக்குவரத்து கழகத்தால் வழங்கப்பட்ட பேருந்து பயண அட்டையை பயன்படுத்தி ஜூன் மாதம் 31ம் தேதி வரை பயணம் செய்ய அனுமதிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்
வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!
ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
Sunday Special Veg dish.. மீன் குழம்புக்கு டஃப் தரும் கத்திரிக்காய் பலாக்கொட்டை புளிக்குழம்பு!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
தனுஷின் இட்லி கடை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
{{comments.comment}}