சென்னை: மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட 2023-24 பஸ் பாஸை வருகிற 31ம் தேதி வரை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
மாற்றுத் திறனாளிகளுக்கான பஸ் பாஸ் ஆன்லைன் மூலமாக வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான பஸ் பாஸ் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் முழுமையாக வழங்கி முடிக்கவில்லை. இதையடுத்து தற்போது முக்கிய அறிவிப்பு ஒன்றை மாநகர போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ளது.
அதில், மாற்றுத்திறனாளிகள் 2024 -2025ம் ஆண்டுக்குரிய Online Travel Concessional Pass இணையதளம் வாயிலாக பெரும் வரை 2023-24 ஆண்டிற்கு மாநகர போக்குவரத்து கழகத்தால் வழங்கப்பட்ட பேருந்து பயண அட்டை வைத்திருப்பவர்களை, ஜூன் 31ம் தேதி வரை பயணம் செய்ய அனுமதிக்கப்படுகிறது.

மாற்றுத்திறனாளிகள் 2024-25க்குரிய ஆன்லைன் டிராவல் கன்செசன் பாஸ் இணையதளம் வாயிலாக பெற்றுக் கொண்டு வருகிறார்கள். இருப்பினும் மாற்றுத்திறனாளிகள் நலச் சங்கங்கள், அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து பேருந்து பயண அட்டை பெற்றுக் கொள்ளும் வரை ஆகஸ்டு 2024 வரை கால அவகாசம் கொடுக்கக் கோரியுள்ளனர்.
அதன் அடிப்படையில் அனைத்து மாற்றுத் திறனாளிகளும் பாஸ் பெற்றுக் கொள்வதற்காக 2023-24 ஆண்டுக்கு மாநகரப் போக்குவரத்து கழகத்தால் வழங்கப்பட்ட பேருந்து பயண அட்டையை பயன்படுத்தி ஜூன் மாதம் 31ம் தேதி வரை பயணம் செய்ய அனுமதிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Cauvery River water Issue: காவிரி நீர் பிரச்சனை எப்போது துவங்கியது? .. இதற்கு என்ன தான் தீர்வு?
முதல்வர் விஜய் கர்நாடகா வர வேண்டாம் : கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார்
டாஸ்மாக் ஊழல் வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமீன்...கைது செய்யவும் தடை
மின்சார கட்டணம் உயர்வு உண்மையா? - அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!
வருமான வரி தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்...தவறவிட்டால் அபராதம்
காவல் நிலையத்தில் ஆஜராவதில் இருந்து 6 நாட்கள் விலக்கு கோரி செந்தில் பாலாஜி மனு
2027 ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட்: 3 நாடுகளின் 12 மைதானங்களில் போட்டிகள் நடைபெறும்
ஜெர்மனியில் கடும் வெப்ப அலை: பலியானோர் எண்ணிக்கை 10,000 ஆக உயர்வு!
மேகதாது அணை விவகாரம்: தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் தீவிர ஆலோசனை!
{{comments.comment}}