சென்னை: மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட 2023-24 பஸ் பாஸை வருகிற 31ம் தேதி வரை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
மாற்றுத் திறனாளிகளுக்கான பஸ் பாஸ் ஆன்லைன் மூலமாக வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான பஸ் பாஸ் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் முழுமையாக வழங்கி முடிக்கவில்லை. இதையடுத்து தற்போது முக்கிய அறிவிப்பு ஒன்றை மாநகர போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ளது.
அதில், மாற்றுத்திறனாளிகள் 2024 -2025ம் ஆண்டுக்குரிய Online Travel Concessional Pass இணையதளம் வாயிலாக பெரும் வரை 2023-24 ஆண்டிற்கு மாநகர போக்குவரத்து கழகத்தால் வழங்கப்பட்ட பேருந்து பயண அட்டை வைத்திருப்பவர்களை, ஜூன் 31ம் தேதி வரை பயணம் செய்ய அனுமதிக்கப்படுகிறது.

மாற்றுத்திறனாளிகள் 2024-25க்குரிய ஆன்லைன் டிராவல் கன்செசன் பாஸ் இணையதளம் வாயிலாக பெற்றுக் கொண்டு வருகிறார்கள். இருப்பினும் மாற்றுத்திறனாளிகள் நலச் சங்கங்கள், அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து பேருந்து பயண அட்டை பெற்றுக் கொள்ளும் வரை ஆகஸ்டு 2024 வரை கால அவகாசம் கொடுக்கக் கோரியுள்ளனர்.
அதன் அடிப்படையில் அனைத்து மாற்றுத் திறனாளிகளும் பாஸ் பெற்றுக் கொள்வதற்காக 2023-24 ஆண்டுக்கு மாநகரப் போக்குவரத்து கழகத்தால் வழங்கப்பட்ட பேருந்து பயண அட்டையை பயன்படுத்தி ஜூன் மாதம் 31ம் தேதி வரை பயணம் செய்ய அனுமதிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அம்பிகையும், சொக்கரும் கை கோர்த்து அரசாண்ட மதுரை.. மீனாட்சி சுந்தரேஸ்வரர் சிறப்புகள்!
சார் மேடம் எங்கே.. அசர வைத்த ஏர்ஹோஸ்டஸ்.. மறக்க முடியாத பாஸ்டன் விமான பயணம்!
யானை பூனையாச்சு நீல வானத்தில் வெண்பஞ்சு திரள்.. மூவரி கவிதைகள்!
Happay Vinayagar Chaturthi: முழுமுதற் கடவுளே துணை நீயே
பட்டிமன்றத்தை பட்டி தொட்டியெங்கும் பயணிக்க வைத்த பண்பாட்டுத் தமிழன்!
Tasty Lunch Recipes: கமகமக்கும்.. சுவையான உருண்டை குழம்பு
பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்.. இலக்கியத்தில் விநாயகர்!
அசுரனை அழிக்க ஆவணி சதுர்த்தியில் அருளிய விநாயகப் பெருமான்!
கருத்து மிகுந்தவளே கருத்துக்காளை மருமகளே உருத்தான சொந்தம் நீ உசுரான பந்தம் நீ!
{{comments.comment}}