சென்னை: மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட 2023-24 பஸ் பாஸை வருகிற 31ம் தேதி வரை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
மாற்றுத் திறனாளிகளுக்கான பஸ் பாஸ் ஆன்லைன் மூலமாக வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான பஸ் பாஸ் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் முழுமையாக வழங்கி முடிக்கவில்லை. இதையடுத்து தற்போது முக்கிய அறிவிப்பு ஒன்றை மாநகர போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ளது.
அதில், மாற்றுத்திறனாளிகள் 2024 -2025ம் ஆண்டுக்குரிய Online Travel Concessional Pass இணையதளம் வாயிலாக பெரும் வரை 2023-24 ஆண்டிற்கு மாநகர போக்குவரத்து கழகத்தால் வழங்கப்பட்ட பேருந்து பயண அட்டை வைத்திருப்பவர்களை, ஜூன் 31ம் தேதி வரை பயணம் செய்ய அனுமதிக்கப்படுகிறது.

மாற்றுத்திறனாளிகள் 2024-25க்குரிய ஆன்லைன் டிராவல் கன்செசன் பாஸ் இணையதளம் வாயிலாக பெற்றுக் கொண்டு வருகிறார்கள். இருப்பினும் மாற்றுத்திறனாளிகள் நலச் சங்கங்கள், அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து பேருந்து பயண அட்டை பெற்றுக் கொள்ளும் வரை ஆகஸ்டு 2024 வரை கால அவகாசம் கொடுக்கக் கோரியுள்ளனர்.
அதன் அடிப்படையில் அனைத்து மாற்றுத் திறனாளிகளும் பாஸ் பெற்றுக் கொள்வதற்காக 2023-24 ஆண்டுக்கு மாநகரப் போக்குவரத்து கழகத்தால் வழங்கப்பட்ட பேருந்து பயண அட்டையை பயன்படுத்தி ஜூன் மாதம் 31ம் தேதி வரை பயணம் செய்ய அனுமதிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை குலுங்கக் குலுங்க.. பச்சைப் பட்டுடுத்தி.. வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்
மே 1.. ரத்தத்தால் எழுதப்பட்ட தியாக வரலாற்றின் நினைவுச்சின்னம்!
May 1: 'ஒவ்வொரு வேர்வைக்கும் வெற்றி வேர் வைக்கும்!'
உலகத் தொழிலாளர்களே.. சிகாகோவில் ஒலித்து உலகெங்கும் பிரதிபலித்த உரிமைக் குரல்!
ஆற்றில் இறங்கிய அழகனைப் பார்!
RS Kumar Poem: தூரத்து வானத்தில்.. மங்கிய வெளிச்சத்தில்.. ஒன்றல்ல ஓராயிரம்
ஏப்பா.. பிள்ளைகளுக்கு வலிக்காம காது குத்துப்பா.. (கோடாங்கி 11)
Workers’ Day – A Note of Gratitude.. தொழிலாளர்களின் அர்ப்பணிப்பும் உழைப்பின் மதிப்பும்!
Dr Thangalakshmi Poem on May day: உழைப்பின் உன்னத தினம்!
{{comments.comment}}