நிலவின் கவிதை!

Apr 25, 2026,02:44 PM IST

- கவிஞர் க.முருகேஸ்வரி


நிலாப்பெண்ணே

உனைப் பார்த்து 

சிலையானேன் நேற்று 


கண்ணே உனைப் பார்த்து

கவி வடிப்பேன் காதல் சேர்த்து


எத்தனை கவிஞர் என்னை பெண் என்று அழைத்தாலும்

ஒத்துக்கொள்ள மறுக்கிறேனே....


அந்தி வானில் 

உன்னை பார்க்கும் போது




உந்தன் கையில் 

என்னை கொண்டு 


உலா போகும்

நிலா பெண்ணே


மாலை நேர பொழுதெல்லாம்


உன் அழகில் மயங்கி 


காதலித்து காதலித்து 


புதுக்கவிதை செய்வோம்


சந்திரனாய் நானும்


மதியாய் நீயும் ....


கண்ணில் நூறு 

காதல் பேசும்


எந்தன் ஆசை 

நிலா பெண்ணே!


காலம் நேரம் மறவாமல் 


நிலவே முகம் காட்டு!


காத்திருப்பேன் உனை எதிர்பார்த்து!


(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா  போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார்).

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பிரதமர் நரேந்திர மோடியின் செல்ஃபி வீடியோவை முடக்கிய மெட்டா.. மன்னிப்பு கேட்டது!

news

பழனியை தொடர்ந்து மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சொத்திலும் முறைகேடு.. தீவிர விசாரணை

news

அரசு பஸ்சில் பயணம் செய்யும் பயணிகளின் கனிவான கவனத்திற்கு…

news

ஜென் Z போராட்டக்காரர்கள் மாபெரும் சாக்கடைகள்.. கங்கனா ரணாவத் கருத்தால் பெரும் சர்ச்சை

news

ஜார்ஜ் பெர்னாட் ஷா.. இலக்கியத்தையும் சமூக சிந்தனையையும் இணைத்த அபூர்வ படைப்பாளி!

news

இந்தியாவில் விரைவில் அறிமுகமாகிறது பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்

news

சீனாவின் அடாவடி.. இந்திய எல்லை அருகே அதிநவீன J-20 போர் விமானங்களை குவித்து அக்கிரமம்!

news

இலங்கை தொடருக்கான இந்திய டெஸ்ட் அணி அறிவிப்பு

news

An Empty Wallet.. காலியான பணப்பை!

அதிகம் பார்க்கும் செய்திகள்