நிலவின் கவிதை!

Apr 25, 2026,02:44 PM IST

- கவிஞர் க.முருகேஸ்வரி


நிலாப்பெண்ணே

உனைப் பார்த்து 

சிலையானேன் நேற்று 


கண்ணே உனைப் பார்த்து

கவி வடிப்பேன் காதல் சேர்த்து


எத்தனை கவிஞர் என்னை பெண் என்று அழைத்தாலும்

ஒத்துக்கொள்ள மறுக்கிறேனே....


அந்தி வானில் 

உன்னை பார்க்கும் போது




உந்தன் கையில் 

என்னை கொண்டு 


உலா போகும்

நிலா பெண்ணே


மாலை நேர பொழுதெல்லாம்


உன் அழகில் மயங்கி 


காதலித்து காதலித்து 


புதுக்கவிதை செய்வோம்


சந்திரனாய் நானும்


மதியாய் நீயும் ....


கண்ணில் நூறு 

காதல் பேசும்


எந்தன் ஆசை 

நிலா பெண்ணே!


காலம் நேரம் மறவாமல் 


நிலவே முகம் காட்டு!


காத்திருப்பேன் உனை எதிர்பார்த்து!


(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா  போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார்).

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

DMK Introspection: தேர்தலில் தோற்றது ஏன்? .. திமுக கள ஆய்வு ரிப்போர்ட் தந்த அதிர்ச்சி தகவல்

news

எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில்.. கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் சுவாமி தரிசனம்!

news

தகுதி நீக்கமா? ராஜினாமா செய்த 4 எம்எல்ஏ.,க்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ்!

news

ஸ்டிக்கர் ஒட்டிய சோஃபா மாடல் அரசு - முதல்வர் விஜய் மீது உதயநிதி ஸ்டாலின் கடும் தாக்கு

news

தமிழ்நாடு எம்எல்ஏக்களுக்கு 2 நாள் பயிற்சி வகுப்பு: சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவிப்பு!

news

அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு!

news

ஆளே இல்லாத கடையில டீ ஆத்துவது போல...தமிழக அரசை விமர்சித்த திமுக தலைவர் ஸ்டாலின்

news

பைக் டாக்ஸி: தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன? உயர்நீதிமன்ற கிளை கேள்வி!

news

அரசியலுக்கு வரவா? வேண்டாமா?.. நீங்களே சொல்லுங்க பார்ப்போம்.. மக்களிடம் கேட்கும் ராகவா லாரன்ஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்