மனம் திறந்து பேசுதடா .. மாந்தோப்பில் கிளி இரண்டு!

Apr 25, 2026,01:35 PM IST

- கவிஞர் பிஎஸ் முருகேசன்


மனம் திறந்து பேசுதடா 

மாந்தோப்பில் கிளி இரண்டு


மகிழ்ச்சியிலே உரசு தடா

மாறி மாறி வால் இரண்டு


அன்னாந்து பார்க்கயிலே 

அசையுது விழி இரண்டு


ஆத்துலே வெள்ளம் வந்து 

ஓடுது கரைபுரண்டு


காத்துலே கலந்து வந்து 

கலக்குது பூ வாசம்


காட்டிக்க முடியலியே 

காதலின்  நேசம்


என்னவள் நினைவில் 

ஏங்குதே தேசம்




எண்ணத்தில் நிறைந்தால் 

எழுப்புவேன் கோசம்


இதயம் மகிழும் 

ஈடில்லா பாசம்


உதயம் தந்தால் 

ஒளிரும் விடியல்


உவகையுடன் இருப்பேன் 

உன்னோட மடியில்


(கவிஞர் பிஎஸ் முருகேசன், திருநூத்துப்பட்டி, செந்துரை)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்