மனம் திறந்து பேசுதடா .. மாந்தோப்பில் கிளி இரண்டு!

Apr 25, 2026,04:53 PM IST

- கவிஞர் பிஎஸ் முருகேசன்


மனம் திறந்து பேசுதடா 

மாந்தோப்பில் கிளி இரண்டு


மகிழ்ச்சியிலே உரசு தடா

மாறி மாறி வால் இரண்டு


அன்னாந்து பார்க்கயிலே 

அசையுது விழி இரண்டு


ஆத்துலே வெள்ளம் வந்து 

ஓடுது கரைபுரண்டு


காத்துலே கலந்து வந்து 

கலக்குது பூ வாசம்


காட்டிக்க முடியலியே 

காதலின்  நேசம்


என்னவள் நினைவில் 

ஏங்குதே தேசம்




எண்ணத்தில் நிறைந்தால் 

எழுப்புவேன் கோசம்


இதயம் மகிழும் 

ஈடில்லா பாசம்


உதயம் தந்தால் 

ஒளிரும் விடியல்


உவகையுடன் இருப்பேன் 

உன்னோட மடியில்


(கவிஞர் பிஎஸ் முருகேசன், திருநூத்துப்பட்டி, செந்துரை)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

DMK Introspection: தேர்தலில் தோற்றது ஏன்? .. திமுக கள ஆய்வு ரிப்போர்ட் தந்த அதிர்ச்சி தகவல்

news

எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில்.. கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் சுவாமி தரிசனம்!

news

தகுதி நீக்கமா? ராஜினாமா செய்த 4 எம்எல்ஏ.,க்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ்!

news

ஸ்டிக்கர் ஒட்டிய சோஃபா மாடல் அரசு - முதல்வர் விஜய் மீது உதயநிதி ஸ்டாலின் கடும் தாக்கு

news

தமிழ்நாடு எம்எல்ஏக்களுக்கு 2 நாள் பயிற்சி வகுப்பு: சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவிப்பு!

news

அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு!

news

ஆளே இல்லாத கடையில டீ ஆத்துவது போல...தமிழக அரசை விமர்சித்த திமுக தலைவர் ஸ்டாலின்

news

பைக் டாக்ஸி: தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன? உயர்நீதிமன்ற கிளை கேள்வி!

news

அரசியலுக்கு வரவா? வேண்டாமா?.. நீங்களே சொல்லுங்க பார்ப்போம்.. மக்களிடம் கேட்கும் ராகவா லாரன்ஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்