- பன்முகக் கவிஞர் க.முருகேஸ்வரி
புன்புலத்தில் பூத்திடும் பொன்பூ
முள் செடியில் படர்ந்திடும் முத்துப் பூ..
சங்க காலப் புலவர்களிடம் சல்லாபித்த தங்கப்பூ...
பொன் போர்வை விரித்தது போல் ..
பூமி எங்கும் பூத்திட்ட பொன் மஞ்சள் பூ..
சுட்டெரிக்கும் சூரியனையே சுற்றி வரும் சிங்கார பூ.
சங்கத்தலைவனின் தலைவிக்கு உவமையான அருமை பூ
சிறுநீரக நோய் தீர்க்கும் சின்ன பூ

கண்ணுக்குக் குளிர்ச்சி தரும் வண்ண பூ
சிறு நெருஞ்சியில் சின்னஞ்சிறு மஞ்சள் பூ ...
பெரு நெருஞ்சியில்
பேரிதழ் கொண்ட பூ...
செப்பு நெருஞ்சியில் ரோஜா நிறப் பூ
மூலிகைக் குணம் கொண்ட மூன்று வகைப் பூ
முன்னோர்கள் சொல்லி வைத்த அரிய வகைப் பூ
நெருஞ்சிப் பூ நெருஞ்சிப் பூ நெருஞ்சிப்பூ
நிலமெல்லாம் உன் வனம் தானே நெருஞ்சிப் பூ
பார்த்ததுமே நெஞ்சமெல்லாம் மஞ்சம் கொள்ளும் நெருஞ்சி பூ
வறண்ட நிலத்தில் வாழ்வோர்க்கு நீ தானே குறிஞ்சி பூ
(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார். சிங்கப்பூர் பொழில் பண்பலையில் கவிதைகள் எழுதுகிறார்.. சிங்கப்பெண், அருந்தமிழ் தாரகை விருதுகள் பெற்றுள்ளார்).
வீரம் வெளஞ்ச மண்ணு!
ஜூன் ஆறு வந்தது சிறப்பு நாளே !
Tamil Poem: பூவே பொன்பூவே
அதிமுக மயமாகும் தவெக.. கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன், மு.சி. சம்பத்.. இன்று இணைகின்றனர்!
Tamil Short Story: அழகு கோலம்!
Tamil Poem: மன(தின்)வலி
Classical Tamil: செம்மொழியாகிய தமிழ் மொழியே!
We The Leaders: புதிய அரசியல் இயக்கம்.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டி.. அண்ணாமலை அறிவிப்பு!
தமிழகத்தில் தீவிரம் அடையும் தென்மேற்கு பருவமழை: 4 மாவட்டங்களுக்கு நாளை ‘ஆரஞ்சு அலர்ட்’
{{comments.comment}}