- பன்முகக் கவிஞர் க.முருகேஸ்வரி
புன்புலத்தில் பூத்திடும் பொன்பூ
முள் செடியில் படர்ந்திடும் முத்துப் பூ..
சங்க காலப் புலவர்களிடம் சல்லாபித்த தங்கப்பூ...
பொன் போர்வை விரித்தது போல் ..
பூமி எங்கும் பூத்திட்ட பொன் மஞ்சள் பூ..
சுட்டெரிக்கும் சூரியனையே சுற்றி வரும் சிங்கார பூ.
சங்கத்தலைவனின் தலைவிக்கு உவமையான அருமை பூ
சிறுநீரக நோய் தீர்க்கும் சின்ன பூ

கண்ணுக்குக் குளிர்ச்சி தரும் வண்ண பூ
சிறு நெருஞ்சியில் சின்னஞ்சிறு மஞ்சள் பூ ...
பெரு நெருஞ்சியில்
பேரிதழ் கொண்ட பூ...
செப்பு நெருஞ்சியில் ரோஜா நிறப் பூ
மூலிகைக் குணம் கொண்ட மூன்று வகைப் பூ
முன்னோர்கள் சொல்லி வைத்த அரிய வகைப் பூ
நெருஞ்சிப் பூ நெருஞ்சிப் பூ நெருஞ்சிப்பூ
நிலமெல்லாம் உன் வனம் தானே நெருஞ்சிப் பூ
பார்த்ததுமே நெஞ்சமெல்லாம் மஞ்சம் கொள்ளும் நெருஞ்சி பூ
வறண்ட நிலத்தில் வாழ்வோர்க்கு நீ தானே குறிஞ்சி பூ
(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார். சிங்கப்பூர் பொழில் பண்பலையில் கவிதைகள் எழுதுகிறார்.. சிங்கப்பெண், அருந்தமிழ் தாரகை விருதுகள் பெற்றுள்ளார்).
ஏகப்பட்ட பிரச்சினை: சுறுசுறுப்பு காட்டும் தமிழக அரசியல் கட்சிகள்.. அடுத்தடுத்து போராட்டம் அறிவிப்பு
ஆண் மகனை அவனாகவே வாழ விடுங்கள்!
நாகர்கோவில் சிறையில் கைதி கொலை: CBCID விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவு!
முதல்வரை மிரட்டிய வழக்கு: திமுக எம்எல்ஏ மார்கண்டேயனின் ஜாமீன் மனு தள்ளுபடி!
நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: விரிவான விவாதம் நடத்த தயார் - மத்திய அரசு அறிவிப்பு
நீட் தேர்வு போராட்டம்.. இதைத்தான் தொடர்ந்து சொல்லி வருகிறது திமுக.. மு.க.ஸ்டாலின்
ராகுல் காந்தி கைது வன்மையாக கண்டிக்கத்தக்கது.. முதல்வர் விஜய் கண்டனம்
போதையில் கார் ஓட்டிய வழக்கு: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னருக்கு சிறை தண்டனையா?
முடிவுக்கு வந்தது பாமக விவகாரம்...அன்புமணிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற ராமதாஸ்
{{comments.comment}}