- பன்முகக் கவிஞர் க.முருகேஸ்வரி
புன்புலத்தில் பூத்திடும் பொன்பூ
முள் செடியில் படர்ந்திடும் முத்துப் பூ..
சங்க காலப் புலவர்களிடம் சல்லாபித்த தங்கப்பூ...
பொன் போர்வை விரித்தது போல் ..
பூமி எங்கும் பூத்திட்ட பொன் மஞ்சள் பூ..
சுட்டெரிக்கும் சூரியனையே சுற்றி வரும் சிங்கார பூ.
சங்கத்தலைவனின் தலைவிக்கு உவமையான அருமை பூ
சிறுநீரக நோய் தீர்க்கும் சின்ன பூ

கண்ணுக்குக் குளிர்ச்சி தரும் வண்ண பூ
சிறு நெருஞ்சியில் சின்னஞ்சிறு மஞ்சள் பூ ...
பெரு நெருஞ்சியில்
பேரிதழ் கொண்ட பூ...
செப்பு நெருஞ்சியில் ரோஜா நிறப் பூ
மூலிகைக் குணம் கொண்ட மூன்று வகைப் பூ
முன்னோர்கள் சொல்லி வைத்த அரிய வகைப் பூ
நெருஞ்சிப் பூ நெருஞ்சிப் பூ நெருஞ்சிப்பூ
நிலமெல்லாம் உன் வனம் தானே நெருஞ்சிப் பூ
பார்த்ததுமே நெஞ்சமெல்லாம் மஞ்சம் கொள்ளும் நெருஞ்சி பூ
வறண்ட நிலத்தில் வாழ்வோர்க்கு நீ தானே குறிஞ்சி பூ
(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார். சிங்கப்பூர் பொழில் பண்பலையில் கவிதைகள் எழுதுகிறார்.. சிங்கப்பெண், அருந்தமிழ் தாரகை விருதுகள் பெற்றுள்ளார்).
நான் என்னுடைய சுய கணக்கெடுப்பை முடித்து விட்டேன்.. வீடியோ வெளியிட்ட முதல்வர் விஜய்
Census: தமிழகத்தில் ஆகஸ்ட் 1 முதல் முதற்கட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு.. ஆன்லைனிலும் சமர்ப்பிக்கலாம்!
ரோஹித் சர்மா ஓய்வு பெற நிர்ப்பந்தமா.. உண்மையில் என்னதான் நடக்கிறது?
ஜோர்டானில் இருந்த அமெரிக்க போர் விமானங்களை அழித்ததாக ஈரான் அதிரடி தகவல்
ரயில் டிக்கெட் முன்பதிவை எளிதாக்க ஐஆர்சிடிசி (IRCTC) புதிய பீட்டா பதிப்பு அறிமுகம்
சிந்தனைச் சிதறல்.. தனித்துவமும் தன் மதிப்பும் மிகுந்த தனிமையே உயர்வானது!
ரஷ்ய எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா மீது 100% வரி? அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதிய மசோதா
ஓய்வறியா தமிழ்ச் சூரியன்.. தளராமல் தமிழ் வளர்க்கும் பாரதிச்சுடர் நா.வே.நீலகண்டத் தமிழன்!
மிஸ்..இந்த வாட்டியும் வந்ததா!.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்
{{comments.comment}}