சென்னை: இந்த உலகத்தை விட சிறந்த ஜாதி, மதம், பணம், பொறாமை, வலி, வறுமை, வன்மம் இல்லாத ஒரு அமைதியான இடத்திற்கு தான் என் மகள் சென்று இருக்கிறாள் என்று இசையமைப்பாளர் - நடிகர் விஜய் ஆண்டனி கூறியுள்ளார்.
சமீபத்தில் விஜய் ஆண்டனியின் மகள் மீரா மன அழுத்தத்தின் காரணமாக தற்கொலை செய்து கொண்டார். மீராவின் தற்கொலை தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இவருடைய இறுதி சடங்குகள் முடிந்த நிலையில், தற்போது விஜய் ஆண்டனி ட்விட்டர் பக்கத்தில் உருக்கமான வார்த்தைகளால் பதிவிட்டு உள்ளார்.
இந்த பதிவு வைரலாகி வருவதுடன் காண்போரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அதேசமயம், மிகுந்த நம்பிக்கையுடன் விஜய் ஆண்டனி வடித்துள்ள இந்த வார்த்தைகள் ஒரு வகையான ஆறுதலையும் தருகிறது.
விஜய் ஆண்டனியின் ட்விட்டர் பக்கத்தில் அவர் போட்டுள்ள பதிவு:
அன்பு நெஞ்சங்களே
என் மகள் மீரா மிகவும் அன்பானவள், தைரியமானவள்.
அவள் இப்போது இந்த உலகத்தை விட சிறந்த ஜாதி, மதம், பணம், பொறாமை, வலி, வறுமை, வன்மம் இல்லாத ஒரு அமைதியான இடத்திற்கு தான் சென்று இருக்கிறாள். என்னிடம் பேசிக் கொண்டுதான் இருக்கிறாள்.
அவளுடன் நானும் இறந்து விட்டேன் .
நான் இப்போது அவளுக்காக நேரம் செலவிட ஆரம்பித்து விட்டேன்.
அவள் பெயரில் நான் செய்யப்போகும் நல்ல காரியங்கள் அனைத்தையும் அவளே தொடங்கி வைப்பாள்.
உங்கள்
விஜய் ஆண்டனி
மீண்டு வரட்டும்
நடிகர் விஜய் ஆண்டனி இந்தப் பதிவில் தனது மகள் பெயரில் நல்ல காரியம் செய்வதாக அறிவித்துள்ளார். இது பலருக்கும் நம்பிக்கையை அளித்துள்ளது. விஜய் ஆண்டனி தனது பெரும் துயரத்திலிருந்து விரைவில் மீண்டு விடுவார் என்ற நம்பிக்கையே அது.
அவர் செய்யப் போகும் நல்ல காரியம் எதுவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. தனது மகளின் பெயரில் அறக்கட்டளை நிறுவுதல், பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவுதல், பெற்றோர் இல்லாத குழந்தைகளுக்கு ஆதரவு அளித்தல் போன்ற வழிகளில் விஜய் ஆண்டனி நேரம் செலவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவரின் மன வலிமை உண்மையிலேயே வரவேற்கத்தக்கதாகும். அவர் செய்யும் நல்ல காரியத்திற்கு ஒட்டுமொத்த மக்களும் துணை நிற்பார்கள் என நம்பலாம்.
தமிழகத்தின் புதிய ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் நாளை பதவியேற்பு
ஒரே நாளில் 60 வேட்பாளர்கள் தேர்வு...அதிரடி காட்டும் தவெக விஜய்
பிரதமரின் தமிழக வருகைக்கு முன்பு தொகுதிப் பங்கீட்டை முடிக்க அதிமுக தீவிரம்
நாகர்கோவில் மற்றும் போத்தனூரிலிருந்து அம்ரித் பாரத் ரயில்கள்!
தேமுதிக.,விற்கு விருத்தாச்சலம் தொகுதி ஒதுக்கீடு?: மீண்டும் ஒரு 'கேப்டன்' மேஜிக் நடக்குமா?
திருச்சி வருகிறார் பிரதமர் மோடி.. ரூ. 5650 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்
Tamil Nadu Assembly Elections 2026: "ஹீரோ"வை எப்போது களம் இறக்கப் போகிறது திமுக?
மனசைத் தொட்ட அந்த 5 ரூபாய் பரிசு!
ஆசிரியர்!
{{comments.comment}}