அமைதியான இடத்திற்கு தான் என் மகள் சென்றிருக்கிறாள்.. விஜய் ஆண்டனி உருக்கம்

Sep 22, 2023,10:44 AM IST

சென்னை:  இந்த உலகத்தை விட சிறந்த ஜாதி, மதம், பணம், பொறாமை, வலி, வறுமை, வன்மம் இல்லாத ஒரு அமைதியான இடத்திற்கு தான் என் மகள் சென்று இருக்கிறாள் என்று இசையமைப்பாளர் - நடிகர் விஜய் ஆண்டனி கூறியுள்ளார்.


சமீபத்தில் விஜய் ஆண்டனியின் மகள் மீரா மன அழுத்தத்தின் காரணமாக தற்கொலை செய்து கொண்டார். மீராவின் தற்கொலை தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இவருடைய இறுதி சடங்குகள் முடிந்த நிலையில், தற்போது விஜய் ஆண்டனி ட்விட்டர் பக்கத்தில் உருக்கமான வார்த்தைகளால் பதிவிட்டு உள்ளார். 


இந்த பதிவு வைரலாகி வருவதுடன் காண்போரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.  அதேசமயம், மிகுந்த நம்பிக்கையுடன் விஜய் ஆண்டனி வடித்துள்ள இந்த வார்த்தைகள் ஒரு வகையான ஆறுதலையும் தருகிறது.



விஜய் ஆண்டனியின் ட்விட்டர் பக்கத்தில் அவர் போட்டுள்ள பதிவு:


அன்பு நெஞ்சங்களே


என் மகள் மீரா மிகவும் அன்பானவள், தைரியமானவள்.


அவள் இப்போது இந்த உலகத்தை விட சிறந்த ஜாதி, மதம், பணம், பொறாமை, வலி, வறுமை, வன்மம் இல்லாத ஒரு அமைதியான இடத்திற்கு தான் சென்று இருக்கிறாள்.  என்னிடம் பேசிக் கொண்டுதான் இருக்கிறாள். 


அவளுடன் நானும் இறந்து விட்டேன் .


நான் இப்போது அவளுக்காக நேரம் செலவிட ஆரம்பித்து விட்டேன்.


அவள் பெயரில் நான் செய்யப்போகும் நல்ல காரியங்கள் அனைத்தையும் அவளே தொடங்கி வைப்பாள்.


உங்கள் 

விஜய் ஆண்டனி


மீண்டு வரட்டும்


நடிகர் விஜய் ஆண்டனி இந்தப் பதிவில் தனது மகள் பெயரில் நல்ல காரியம் செய்வதாக அறிவித்துள்ளார். இது பலருக்கும் நம்பிக்கையை அளித்துள்ளது. விஜய் ஆண்டனி தனது பெரும் துயரத்திலிருந்து விரைவில் மீண்டு விடுவார் என்ற நம்பிக்கையே அது.


அவர் செய்யப் போகும் நல்ல காரியம் எதுவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. தனது மகளின் பெயரில் அறக்கட்டளை நிறுவுதல், பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவுதல், பெற்றோர் இல்லாத குழந்தைகளுக்கு ஆதரவு அளித்தல் போன்ற வழிகளில் விஜய் ஆண்டனி நேரம் செலவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


அவரின் மன வலிமை உண்மையிலேயே வரவேற்கத்தக்கதாகும். அவர் செய்யும் நல்ல காரியத்திற்கு ஒட்டுமொத்த மக்களும் துணை நிற்பார்கள் என நம்பலாம்.

சமீபத்திய செய்திகள்

news

இந்தியாவின் 15வது துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு.. 452 வாக்குகள் பெற்று வெற்றி

news

தவெக தலைவர் விஜய் சுற்றுப் பயணம்.. சனி, ஞாயிற்றை தேர்வு செய்ய இதுதான் காரணமா?

news

மக்களே அலர்ட்டா இருந்துக்கோங்க..இன்றும், நாளையும் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

news

செங்கோட்டையன்-அமித்ஷா சந்திப்பு.. எடப்பாடி பழனிச்சாமிக்கு வைக்கப்படும் "செக்" ஆ?

news

மன அமைதிக்காக ஹரித்வாருக்குக் கிளம்பி.. டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த செங்கோட்டையன்!

news

Heart Attack: ராத்திரி நேரத்தில்தான் மாரடைப்பு அதிகமாக வருமா.. டாக்டர்கள் சொல்வது என்ன?

news

பீகார் சட்டசபைத் தேர்தல் களம்.. ஓவைசி வைக்கப் போகும் செக்.. இந்த முறை யாருக்கு?

news

நேபாளத்தில் வெடித்த பெரும் கலவரம்.. பின்வாங்கிய பிரதமர்.. நீங்கிய சமூக வலைதள தடை!

news

ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது

அதிகம் பார்க்கும் செய்திகள்