- ச. அகல்யா
ஆயிரம் உறவுகள் நம் வளர்ச்சிக்கு வழிகாட்டியாக இருந்தாலும்
அம்மா என்ற மூன்று எழுத்துக்கு சொந்தக்காரியைப்போல் வராது...
அவளுக்கு ஒன்றும் தெரியவில்லை என்றாலும் கூட ....
நமக்கு முதல் வார்த்தை பேச கற்றுக் கொடுத்தவளும் அவளே...
அதைப் பார்த்து சந்தோஷத்தில் அழுததும் அவளே...
நமக்கு முதல் அடி எடுத்து வைக்க கற்றுக் கொடுத்ததும் அவளே...
அந்த முதல் அடியைப் பார்த்த அந்த ஒரு நொடி குழந்தையைப் போல் மாறி
சந்தோஷத்தில் துள்ளியதும் அவளே...

அவளைப் போல் ஒரு மூன்றெழுத்து மந்திரம் இல்லை,
அவளைப் போல் ஒரு சிறந்த ஆசிரியரும் இல்லை
பத்து மாதம் நம்மை சுமந்ததற்காக அல்ல...
வாழ்நாள் முழுவதும் நம்மை தன் இதயத்தில் சுமந்து கொண்டிருப்பதற்காகவே
அவள் கடவுளாகிறாள்!
நமக்கு பசிக்கும் முன்னே அவள் வயிறு துடிக்கும்...
நமக்கு ஒரு சிறு காயம் என்றால்
அவள் கண்கள் முதலில் கண்ணீர் வடிக்கும்!
உலகமே நம்மை எதிர்த்தாலும்,
"என் பிள்ளை தோற்காது" என்று நம்பும் ஒரே ஜீவன் அவள்!
கோடி நன்மைகள் செய்தாலும் ஈடாகாது அவளது ஒரு நொடி அன்பிற்கு...
அவள் பாதம் தொட்டு வணங்கினால் போதும்,
வேறெந்தக் கோவிலும் தேவையில்லை நம் வாழ்விற்கு!
(ச.அகல்யா , பி.காம், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன், வயலை)
ஏகப்பட்ட பிரச்சினை: சுறுசுறுப்பு காட்டும் தமிழக அரசியல் கட்சிகள்.. அடுத்தடுத்து போராட்டம் அறிவிப்பு
ஆண் மகனை அவனாகவே வாழ விடுங்கள்!
நாகர்கோவில் சிறையில் கைதி கொலை: CBCID விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவு!
முதல்வரை மிரட்டிய வழக்கு: திமுக எம்எல்ஏ மார்கண்டேயனின் ஜாமீன் மனு தள்ளுபடி!
நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: விரிவான விவாதம் நடத்த தயார் - மத்திய அரசு அறிவிப்பு
நீட் தேர்வு போராட்டம்.. இதைத்தான் தொடர்ந்து சொல்லி வருகிறது திமுக.. மு.க.ஸ்டாலின்
ராகுல் காந்தி கைது வன்மையாக கண்டிக்கத்தக்கது.. முதல்வர் விஜய் கண்டனம்
போதையில் கார் ஓட்டிய வழக்கு: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னருக்கு சிறை தண்டனையா?
முடிவுக்கு வந்தது பாமக விவகாரம்...அன்புமணிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற ராமதாஸ்
{{comments.comment}}