அம்மா!

Jan 21, 2026,10:34 AM IST

- ச. அகல்யா


ஆயிரம் உறவுகள் நம் வளர்ச்சிக்கு வழிகாட்டியாக இருந்தாலும் 

அம்மா என்ற மூன்று எழுத்துக்கு சொந்தக்காரியைப்போல் வராது... 


அவளுக்கு ஒன்றும் தெரியவில்லை என்றாலும் கூட ....

நமக்கு முதல் வார்த்தை பேச கற்றுக் கொடுத்தவளும் அவளே... 


அதைப் பார்த்து சந்தோஷத்தில் அழுததும் அவளே... 

நமக்கு முதல் அடி எடுத்து வைக்க கற்றுக் கொடுத்ததும் அவளே... 


அந்த முதல் அடியைப் பார்த்த அந்த ஒரு நொடி குழந்தையைப் போல் மாறி

சந்தோஷத்தில் துள்ளியதும் அவளே... 




அவளைப் போல் ஒரு மூன்றெழுத்து மந்திரம் இல்லை, 

அவளைப் போல் ஒரு சிறந்த ஆசிரியரும் இல்லை


பத்து மாதம் நம்மை சுமந்ததற்காக அல்ல... 

வாழ்நாள் முழுவதும் நம்மை தன் இதயத்தில் சுமந்து கொண்டிருப்பதற்காகவே

அவள் கடவுளாகிறாள்!


நமக்கு பசிக்கும் முன்னே அவள் வயிறு துடிக்கும்... 

நமக்கு ஒரு சிறு காயம் என்றால் 

அவள் கண்கள் முதலில் கண்ணீர் வடிக்கும்!


உலகமே நம்மை எதிர்த்தாலும், 

"என் பிள்ளை தோற்காது" என்று நம்பும் ஒரே ஜீவன் அவள்!


கோடி நன்மைகள் செய்தாலும் ஈடாகாது அவளது ஒரு நொடி அன்பிற்கு... 

அவள் பாதம் தொட்டு வணங்கினால் போதும், 

வேறெந்தக் கோவிலும் தேவையில்லை நம் வாழ்விற்கு!


(ச.அகல்யா , பி.காம், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன், வயலை)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

news

அஜா ஏகாதசி.. மகா விஷ்ணுவையும்.. மகாலட்சுமி தாயாரையும் நினைத்து விரதம் இருப்போம்!

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

உன்னையே கதியென்று நினைக்கிறேனடி கண்ணம்மா!

news

Motivational Monday: மாறுபடும் மதிப்புகளும் மதிப்பீடுகளும்.. சிறுகதை!

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

அதிகம் பார்க்கும் செய்திகள்