- அ. வென்சி ராஜ்
தாய் தந்தையை பிரிந்து
நான் தவழ்ந்த வீடு மறந்து
புத்தாடையும் புதுப்பையும் சுமந்து
முத்து முத்தாய் கண்ணில் நீர் வர
முகம் வாடி மழலையில் அழுதபடி
கொஞ்சி மகிழ்ந்த தாத்தா பாட்டியை விட்டு..
அம்மா கட்டிப்பிடித்து முத்தம் தர...
அப்பா கைப்பிடித்து தைரியம் தர...
இனிப்போடு சென்றேன்
என் பள்ளிக்கு முதல் நாள் அன்று....

பள்ளிக்கூட கட்டிடம் பார்த்து பயந்து நின்றேன்.
ஆசிரியர் எல்லாம் அயல் நாட்டவராயும்
அருகிருந்த குழந்தைகள் எல்லாம் அழுமூஞ்சிகளாகவும்
மனதில் பட்டதும் சட்டென நின்றது அழுகை...
தோள் மீது தூக்கிய தந்தையைக் காணோம்...
தங்கமே வைரமே என்ற தாயையும் காணோம்...
தரையில் விடாமல் தூக்கி வைத்திருந்த தாத்தா பாட்டியையும் காணோம்....
இனிப்போடு சிரிப்பையும் தந்தார் என் புது ஆசிரியர்...
அழுகை நின்றது...
அவர் கைபிடித்தேன்.
கூடவே சென்றேன்.
புதுவித அன்பு..
பிடித்துப் போயிற்று...
என்னை பண்படுத்திய ஆசான் அவரே...
பாசமிகு தாயும் இவர்தான்...
இவ் வீட்டின் பண்பு தரும் தந்தையும் இவர்தான் என்பது மட்டும் அப்போது புரிந்து போனது...
ஓடியது நாட்கள்...
கூடியது அறிவு....
கற்றேன் கல்வியை...
பெற்றேன் அறிவை...
அடைந்தேன் ஞானத்தை..
உயர்ந்தேன் ஒழுக்கத்தில்...
நாட்கள் மாதங்களாகின..
மாதங்கள் வருடங்கள் ஆயின...
இன்று லட்சியத்தை அடைய இலகுவாய் வழிகாட்டினார் என் ஆசான்...
கல்வியின் அவசியம் உணர்ந்தேன்...
மனிதத்தோடு மனிதனாய் நிமிர்ந்து நின்றேன்....
என்னை வளர்த்த என் ஆசானே...
எனை வார்த்தெடுத்த என் பள்ளிக்கூடமே....
உங்களை எப்படி மறப்பேன்...
பள்ளிக்கூடக் கட்டிடத்தை பாசத்தோடு பார்க்கின்றேன்...
நன்றியோடு
வணங்குகிறேன்...
என்னை வளர்த்த என் கல்விக்கூடமே...
என்னை வாழ வைத்த என் ஆசான்களே....
புது மனிதனாய் பெற்றெடுத்த புண்ணிய பூமியே...
இருகரம் கூப்பி உங்கள் இருவருக்கும் நன்றி கூறுகிறேன்
என் ஆசான்...
என் வழிகாட்டி...
என் பள்ளி...
என் பெருமை...
உயிர் உள்ளவரை நன்றிகள் உங்களுக்கு மட்டும்
என் அன்பு நிறைந்த ஆசிரியர்களுக்கு (என் தாய்க்கும்) சமர்ப்பணம்.
(அ. வென்சி ராஜ்... இவர் திருவாரூர் பகுதியைச் சேர்ந்தவர். பண்ணைவிளாகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார். இவர் பட்டிமன்ற பேச்சாளராகவும், தன்னம்பிக்கை பேச்சாளராகவும், சமூக செயல்பாட்டாளராகவும் அறியப்படுகிறார். திருவாரூர் தமிழ்ச்சங்கம், தமிழ்நாடு புலவர் பேரவை, இந்தியன் ரெட் கிராஸ் ஆகியவற்றில் வாழ்நாள் உறுப்பினராக உள்ளார். செஞ்சிலுவை சங்கத்தில் கொரடாச்சேரி இணை கண்வீனியராகவும், திருவாரூர் இன்னர்வீல் சங்கத்தில் உறுப்பினராகவும், ஹெல்ப் லைன் டிரஸ்ட் என்னும் ரத்ததான அமைப்பில் தலைமை ஆலோசகராகவும் பயணம் செய்கிறார்)
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
காங்கிரஸ் அணுகுமுறையால் திமுக கூட்டணிக்குத் தோல்வி.. திருமாவளவன் குற்றச்சாட்டு
பெண் சிங்கம்.. ராத்திரி 11 மணி.. தனி ஆளாய்.. மொத்த கும்பலையும் வேரறுத்த.. ரிதி ராஜ் ஐபிஎஸ்!
மீண்டும் போர் பதற்றம்: ஈரானிலிருந்து இந்தியர்கள் வெளியேற மத்திய அரசு அறிவுறுத்தல்!
மக்களின் குறை தீர்க்கும் தமிழ்நாடு அரசு.. முக்கிய இமெயில் முகவரிகள்.. நோட் பண்ணிக்கங்க!
முதல்வர் விஜயைச் சந்தித்து.. செஸ் விளையாடி.. ஜெயித்து வாழ்த்து பெற்றார் சாம்பியன் பிரக்ஞானந்தா!
தமிழ்நாடு மின் வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி உத்தரவு!
பா.ஜ.க-விலிருந்து விலகிய செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ்.. அண்ணாமலையுடன் இணைகிறாரா?
ராஜ்யசபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு இன்று கடைசி நாள்.. தவெக ஆதரவுடன் எம்.பி ஆகும் காங்.
{{comments.comment}}