ஆம் ஆத்மி "சுத்தம்" சுந்தர்ராஜன்.. பின்னாடியே வந்து.. முதுகில் கல்லால் தாக்கிய மர்ம நபர்!

Jan 10, 2024,06:39 PM IST

புதுச்சேரி:  புதுச்சேரியைச் சேர்ந்த சமூக ஆர்வலரும், ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவருமான சுத்தம் சுந்தரராஜனை மர்ம நபர் தாக்கியதால் காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


புதுச்சேரியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சுத்தம் சுந்தரராஜன், பல்வேறு மக்கள் நலப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். நேற்று  இரவு சுமார் 10:30 மணிக்கு நெல்லித்தோப்பு சிக்னல், சுப்பையா சிலை- லெனின் வீதி சந்திப்பில், தனது பணியை முடித்துக்கொண்டு வீட்டை நோக்கி நடந்து வந்துள்ளார்.


அப்போது, சுமார் 35 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் எந்த சத்தமும் இல்லாமல் சுந்தரராஜன் பின்னாடியே, ஒரு பெரிய கருங்கல்லை எடுத்துகொண்டு அவர் மீது கொலைவெறி தாக்குதலோடு வேகமாக வந்துள்ளார். அங்கு இருந்த பொதுமக்களும், அங்கு பேனர் கட்டும் பணியில் இருந்தவர்களும் சத்தம் எழுப்ப சுத்தம் சுந்தர்ராஜன் சுதாரித்துக்கொண்டு திரும்பியுள்ளார்.




ஆனால் அந்த நபர் வேகமாக வந்து சுந்தரராஜன் முதுகில் பலமாக அடித்துள்ளார். பின்னர் உன்னை கொன்றுவிடுவேன் என கொலை மிரட்டல் விடுத்துவிட்டு ஸ்கூட்டரில் தப்பி ஓடி விட்டார். அவரைப் பிடிக்க சுந்தரராஜன் விரைந்தா். இந்திராகாந்தி சிலை வழியே நோக்கி விரைந்த அந்த நபரை சிறிது தூரம் துரத்திய சுத்தம் சுந்தர்ராஜன் வலி காரணமாக அங்கேயே அமர்ந்து விட்டு, பிறகு அருகில் இருந்த உருளையன் பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.


காவல் துறை இந்த புகாரை எடுத்துகொண்டு வழக்குப் பதிவு செய்து குற்றவாளியை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.  காவவர்கள் உதவியோடு புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் சுந்தரராஜன் அனுமதிக்கப்பட்டார். 


சுத்தம் சுந்தர்ராஜன் புதுச்சேரியில் நடக்கும் அநீதிகளை சுட்டிக்காட்டியும் அதை அரசுக்கு கோரிக்கையாய் வைத்தும் வந்துள்ளார். இதை பொறுக்க முடியாமல், ஒரு சமூக விரோதி செய்த இந்த செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளியை உடனடியாக கைது செய்து உரிய தண்டனை அளிக்க காவல்துறையும், அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரூரபிள் அசோசியேஷன் நிறுவனர் டாக்டர் ஆ. ஜெயராஜன் உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் இருக்கா.. இல்லாட்டி கவலை இல்லை.. ஈஸியா சேர்க்கலாம்

news

நாங்கள் களத்தில் இருக்கின்றோமா இல்லையா என்பதை தேர்தல் முடிவுகள் தீர்ப்பளிக்கும்: செங்கோட்டையன்

news

களத்தில் யார் இருக்கா? விஜய் பேசுறதை எல்லாம் சிரிச்சிட்டு கடந்துடணும்: சீமான் பதில்!

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: துரைமுருகன் அறிவிப்பு

news

உறவுகள் உணர்த்தும் உண்மைகள்!

news

எரியும் ஆழ்மனதில் எண்ணெய்.. சீதா (6)

news

2026 டி20 உலகக் கோப்பை.. சூர்யகுமார் யாதவ் தலைமையில் அணி.. 2 தமிழக வீரர்களுக்கு இடம்

news

சென்னை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து... பல இடங்களில் இணைய மற்றும்108 சேவை பாதிப்பு!

news

செவிலியர்களின் சாபம் திமுக அரசை இனி அரியணை ஏறவிடாது: நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்