புதுச்சேரி: புதுச்சேரியைச் சேர்ந்த சமூக ஆர்வலரும், ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவருமான சுத்தம் சுந்தரராஜனை மர்ம நபர் தாக்கியதால் காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
புதுச்சேரியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சுத்தம் சுந்தரராஜன், பல்வேறு மக்கள் நலப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். நேற்று இரவு சுமார் 10:30 மணிக்கு நெல்லித்தோப்பு சிக்னல், சுப்பையா சிலை- லெனின் வீதி சந்திப்பில், தனது பணியை முடித்துக்கொண்டு வீட்டை நோக்கி நடந்து வந்துள்ளார்.
அப்போது, சுமார் 35 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் எந்த சத்தமும் இல்லாமல் சுந்தரராஜன் பின்னாடியே, ஒரு பெரிய கருங்கல்லை எடுத்துகொண்டு அவர் மீது கொலைவெறி தாக்குதலோடு வேகமாக வந்துள்ளார். அங்கு இருந்த பொதுமக்களும், அங்கு பேனர் கட்டும் பணியில் இருந்தவர்களும் சத்தம் எழுப்ப சுத்தம் சுந்தர்ராஜன் சுதாரித்துக்கொண்டு திரும்பியுள்ளார்.

ஆனால் அந்த நபர் வேகமாக வந்து சுந்தரராஜன் முதுகில் பலமாக அடித்துள்ளார். பின்னர் உன்னை கொன்றுவிடுவேன் என கொலை மிரட்டல் விடுத்துவிட்டு ஸ்கூட்டரில் தப்பி ஓடி விட்டார். அவரைப் பிடிக்க சுந்தரராஜன் விரைந்தா். இந்திராகாந்தி சிலை வழியே நோக்கி விரைந்த அந்த நபரை சிறிது தூரம் துரத்திய சுத்தம் சுந்தர்ராஜன் வலி காரணமாக அங்கேயே அமர்ந்து விட்டு, பிறகு அருகில் இருந்த உருளையன் பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
காவல் துறை இந்த புகாரை எடுத்துகொண்டு வழக்குப் பதிவு செய்து குற்றவாளியை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. காவவர்கள் உதவியோடு புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் சுந்தரராஜன் அனுமதிக்கப்பட்டார்.
சுத்தம் சுந்தர்ராஜன் புதுச்சேரியில் நடக்கும் அநீதிகளை சுட்டிக்காட்டியும் அதை அரசுக்கு கோரிக்கையாய் வைத்தும் வந்துள்ளார். இதை பொறுக்க முடியாமல், ஒரு சமூக விரோதி செய்த இந்த செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளியை உடனடியாக கைது செய்து உரிய தண்டனை அளிக்க காவல்துறையும், அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரூரபிள் அசோசியேஷன் நிறுவனர் டாக்டர் ஆ. ஜெயராஜன் உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெண்கள் ஒரு நாள் கொண்டாடப்பட வேண்டியவர்கள் அல்ல.. தினமும் பாராட்டப்பட வேண்டியவர்கள்!
பாதிப்புக்குள்ளாகும் பிற பெண்கள் மீதும் கவனம் செலுத்த வேண்டாமா.. நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன்
மண்ணின் மகத்துவம்.. பெண்ணே நீ தனித்துவம்!
இன்னும் அபிஷேக் சர்மா திருந்தவே இல்லையே.. சுனில் கவாஸ்கருக்கு வருத்தம்ப்பா!
குவைத் விமான நிலையத்தைக் குறி வைத்த ஈரான்.. எரிபொருள் டேங்கர்கள் பெரும் சேதம்
அவள்.. தைரியத்துடன் நிற்கிறாள்.. போராடத் தயாராக இருக்கிறாள்!
பெண்கள் சுதந்திரம்.. Women freedom!
ஓ பெண்ணே வெற்றி காண வெளியே வா!
இந்திய வரலாற்றில் தடம் பதித்த பெண் ஆளுமைகள்.. வரலாறு அறிவோம்!
{{comments.comment}}