- ந. தீபலட்சுமி
தென்றல் காற்று தாலாட்ட
தென்னங்கீற்று தலையாட்ட
குயிலின் ஓசை இசை பாட
இதோ
வானவில்லை உடையாக உடுத்தி
சிங்காரமாய் தன்னை மிடுக்கி
மேளதாளத்தை இடியாய் முழக்கி
சலங்கை சத்தத்தை சந்தமாக்கி
பளிச்சென்ற மின்னலாய் தலைநிமிர்ந்து
அடியெடுத்து வைத்த மேகமகள்.

அந்தோ.....
என்னவாயிற்றோ.....?
ஏனிந்த மாற்றமோ....?
பளிங்கு போன்ற
தெளிந்த முகத்தில்
ஏனிந்த கருமையோ...?
நிமிர்ந்த தலையினை- சற்றே
குனிந்து பார்த்ததன் விளைவோ...?
பார் போற்றும் பெண்கள்
பாரினில் படும் பாட்டை
பார்த்தவுடன் பட்டென
மடைதிறந்த வெள்ளமாக
வந்தது கண்ணீர்
மழை!
(ந.தீபலட்சுமி, பட்டதாரி ஆசிரியர் -ஆங்கிலம், அரசினர் மேல்நிலைப் பள்ளி , சத்துவாச்சாரி , வேலூர் மாவட்டம்)
விசில் கொடுத்தாச்சு.. கப்பு முக்கியம் பிகிலு.. மாமல்லபுரத்தில் ஆலோசனை.. ஆயத்தமாகும் விஜய்!
திருப்பூரில் பரபரப்பு... கவிஞர் வைரமுத்து பங்கேற்ற நிகழ்ச்சியில் காலணி வீச்சு
மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி..தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி: எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டம்
நட்பே வா!
இப்பூவுலகில் அழகில் சிறந்த பெண்கள் எங்கே ??
தாத்தா பாட்டிகள் தினம்.. கொண்டாடுவோம் இந்தக் குழந்தைகளையும்!
சத்தம் ஏதுமின்றி... மௌனமாய் விழிகளில்!
விநாயகப் பெருமானை வழிபட்டு.. தடைகள் நீங்கி வெற்றி பெற.. வர சதுர்த்தி!
ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் இன்று சற்று குறைந்தது... இதோ இன்றைய விலை நிலவரம்!
{{comments.comment}}