- ந. தீபலட்சுமி
தென்றல் காற்று தாலாட்ட
தென்னங்கீற்று தலையாட்ட
குயிலின் ஓசை இசை பாட
இதோ
வானவில்லை உடையாக உடுத்தி
சிங்காரமாய் தன்னை மிடுக்கி
மேளதாளத்தை இடியாய் முழக்கி
சலங்கை சத்தத்தை சந்தமாக்கி
பளிச்சென்ற மின்னலாய் தலைநிமிர்ந்து
அடியெடுத்து வைத்த மேகமகள்.

அந்தோ.....
என்னவாயிற்றோ.....?
ஏனிந்த மாற்றமோ....?
பளிங்கு போன்ற
தெளிந்த முகத்தில்
ஏனிந்த கருமையோ...?
நிமிர்ந்த தலையினை- சற்றே
குனிந்து பார்த்ததன் விளைவோ...?
பார் போற்றும் பெண்கள்
பாரினில் படும் பாட்டை
பார்த்தவுடன் பட்டென
மடைதிறந்த வெள்ளமாக
வந்தது கண்ணீர்
மழை!
(ந.தீபலட்சுமி, பட்டதாரி ஆசிரியர் -ஆங்கிலம், அரசினர் மேல்நிலைப் பள்ளி , சத்துவாச்சாரி , வேலூர் மாவட்டம்)
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}