- ந. தீபலட்சுமி
தென்றல் காற்று தாலாட்ட
தென்னங்கீற்று தலையாட்ட
குயிலின் ஓசை இசை பாட
இதோ
வானவில்லை உடையாக உடுத்தி
சிங்காரமாய் தன்னை மிடுக்கி
மேளதாளத்தை இடியாய் முழக்கி
சலங்கை சத்தத்தை சந்தமாக்கி
பளிச்சென்ற மின்னலாய் தலைநிமிர்ந்து
அடியெடுத்து வைத்த மேகமகள்.

அந்தோ.....
என்னவாயிற்றோ.....?
ஏனிந்த மாற்றமோ....?
பளிங்கு போன்ற
தெளிந்த முகத்தில்
ஏனிந்த கருமையோ...?
நிமிர்ந்த தலையினை- சற்றே
குனிந்து பார்த்ததன் விளைவோ...?
பார் போற்றும் பெண்கள்
பாரினில் படும் பாட்டை
பார்த்தவுடன் பட்டென
மடைதிறந்த வெள்ளமாக
வந்தது கண்ணீர்
மழை!
(ந.தீபலட்சுமி, பட்டதாரி ஆசிரியர் -ஆங்கிலம், அரசினர் மேல்நிலைப் பள்ளி , சத்துவாச்சாரி , வேலூர் மாவட்டம்)
RIP S Janaki: நான் போன பின்னும் நீ வாழ வேண்டும்.. பாட்டுக்குயில் ஜானகி அம்மா!
மறைந்தார் பின்னணிப் பாடகி எஸ். ஜானகி.. 3 தலைமுறையாக ரசிகர்களை மகிழ வைத்த வானம்பாடி!
Vietnam boat tragedy: வியட்நாட் துயரத்தில் 10 தமிழர்கள் பலி.. முதல்வர் சி. ஜோசப் விஜய் வேதனை
மக்கள் தொகைக் கணக்கெடுப்பு.. உங்களிடம் கேட்கப்படவுள்ள 33 கேள்விகள்!
அண்ணாமலையின்'We The Leaders' பொள்ளாச்சியில் நாளை முதல் மாநாடு
வாரிசுகளுக்கு அரசு வேலை வேண்டும் : பாமக அன்புமணி வலியுறுத்தல்
Jananayagan release update விரைவில் ஜனநாயகன் ரிலீஸ்...போஸ்டருடன் வந்த புதிய அப்டேட்
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆடி முளைக்கொட்டு திருவிழா 2026 நாளை துவக்கம்
இந்தியாவில் OTT தளங்களுக்கும் சென்சார் சான்று: மத்திய அரசு திட்டம்!
{{comments.comment}}