- ந. தீபலட்சுமி
தென்றல் காற்று தாலாட்ட
தென்னங்கீற்று தலையாட்ட
குயிலின் ஓசை இசை பாட
இதோ
வானவில்லை உடையாக உடுத்தி
சிங்காரமாய் தன்னை மிடுக்கி
மேளதாளத்தை இடியாய் முழக்கி
சலங்கை சத்தத்தை சந்தமாக்கி
பளிச்சென்ற மின்னலாய் தலைநிமிர்ந்து
அடியெடுத்து வைத்த மேகமகள்.

அந்தோ.....
என்னவாயிற்றோ.....?
ஏனிந்த மாற்றமோ....?
பளிங்கு போன்ற
தெளிந்த முகத்தில்
ஏனிந்த கருமையோ...?
நிமிர்ந்த தலையினை- சற்றே
குனிந்து பார்த்ததன் விளைவோ...?
பார் போற்றும் பெண்கள்
பாரினில் படும் பாட்டை
பார்த்தவுடன் பட்டென
மடைதிறந்த வெள்ளமாக
வந்தது கண்ணீர்
மழை!
(ந.தீபலட்சுமி, பட்டதாரி ஆசிரியர் -ஆங்கிலம், அரசினர் மேல்நிலைப் பள்ளி , சத்துவாச்சாரி , வேலூர் மாவட்டம்)
நான் என்னுடைய சுய கணக்கெடுப்பை முடித்து விட்டேன்.. வீடியோ வெளியிட்ட முதல்வர் விஜய்
Census: தமிழகத்தில் ஆகஸ்ட் 1 முதல் முதற்கட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு.. ஆன்லைனிலும் சமர்ப்பிக்கலாம்!
ரோஹித் சர்மா ஓய்வு பெற நிர்ப்பந்தமா.. உண்மையில் என்னதான் நடக்கிறது?
ஜோர்டானில் இருந்த அமெரிக்க போர் விமானங்களை அழித்ததாக ஈரான் அதிரடி தகவல்
ரயில் டிக்கெட் முன்பதிவை எளிதாக்க ஐஆர்சிடிசி (IRCTC) புதிய பீட்டா பதிப்பு அறிமுகம்
சிந்தனைச் சிதறல்.. தனித்துவமும் தன் மதிப்பும் மிகுந்த தனிமையே உயர்வானது!
ரஷ்ய எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா மீது 100% வரி? அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதிய மசோதா
ஓய்வறியா தமிழ்ச் சூரியன்.. தளராமல் தமிழ் வளர்க்கும் பாரதிச்சுடர் நா.வே.நீலகண்டத் தமிழன்!
மிஸ்..இந்த வாட்டியும் வந்ததா!.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்
{{comments.comment}}