பொய்யைப் படிக்க வேண்டாம் என்பதால் வெளியேறிப் போயிருக்கலாம்.. ஆளுநருக்கு சீமான் ஆதரவு

Jan 08, 2025,06:48 PM IST

சென்னை: பொய்யை படிக்க வேண்டாம் என்பதால் ஆளுநர் படிக்காமல் சென்றிருக்கலாம் என்று உரையை படிக்காமல் சென்ற ஆளுநர் ஆர். என். ரவிக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆதரவு தெரிவித்துள்ளார்.


2025ம் ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டம் கடந்த 6ம் தேதி தொடங்கியது. அவை தொடங்கிய சிறிது நேரத்திலேயே ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றாமல் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தார்.  சட்டப்பேரவையை விட்டு ஆளுநர் வெளியேறிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.




இந்நிலையில், இது குறித்து நாம் தமிழர் கட்சி ஒங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், நீங்க எழுதி கொடுத்ததை அவர் படிக்க வேண்டும்.  அதை பார்த்த அவர் இவ்வளவு பொய்பேச வேண்டுமா என்று பார்த்து விட்டு போய்விட்டார். இப்ப இதை ஆளுநர் படித்திருந்தால் நாங்கள் எல்லாம் என்ன நினைப்போம். நல்ல ஆளுநருனு நினைச்சோம். இதுக்கு அவரு திமுகவிலேயே சேர்ந்திருக்கலாம்னு நினைத்திருப்போம்.


எல்லாருக்கும் தெரியும். தெருவுக்கு தெரு மதுக்கடைகள். எங்கும் போதைப் பொருட்கள் விற்கப்படுகின்றன. குறிப்பாக பள்ளி, கல்லூரி வளாகங்களில் அதிகமாக விற்கப்படுகிறது. வழிபாட்டு தலங்களிலும் போதைப் பொருட்கள் விற்கப்படுகின்றது. எல்லாருக்கும் கோபம் இருக்கிறது. அதை தடுப்பதற்கு தான் வழி தெரியவில்லை. 


திமுகவினர் இதை எல்லாம் மறைத்து விட்டு நாங்கள் நல்லாட்சி செய்கிறோம் என்கின்றனர். முதலில் 5000 பொங்கல என்றார்கள். அப்புறம் 2500 என்றார்கள். அப்புறம் 1000 என்றார்கள். இப்போது 103 ரூபாய்க்கு வந்துள்ளது. வெறும் 3 ரூபாய்க்கு வருவதற்குள் நாங்கள் முழித்துக்கொள்ள வேண்டும்.


ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி நிச்சயமாக போட்டியிடும். சின்னம் கேட்டிருக்கிறோம் என்றார் சீமான்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாடு பணியாது... நாம் ஒன்றாக எழுவோம்.. இது ஓரணி vs டெல்லி அணி.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களே... எனக்கு உங்களைத் தவிர வேறு எவருமில்லை: டாக்டர் அன்புமணி!

news

என் வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி.. வைத்தது யார்.. சீக்கிரம் கண்டுபிடிப்பேன்.. டாக்டர் ராமதாஸ்

news

அரசியல் தலைவர்கள் 75 வயதில் ஓய்வு பெற வேண்டும்.. ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு

news

ஜூலை 27, 28 ஆகிய தேதிகளில் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!

news

சாதனை இந்தியர் சுபான்ஷு சுக்லா.. 14ம் தேதி பூமி திரும்புகிறார்.. தடபுடலாக வரவேற்கத் தயாராகும் நாசா!

news

தேனியில் விவசாயிகளுடன் இணைந்து ஆடு மாடு மேய்ப்பேன்.. சீமானின் அதிரடி அறிவிப்பால் பரபரப்பு!

news

அதிவேக இணையத்தில் ஜப்பான் புதிய உலக சாதனை.. இந்தியாவை விட 16 மில்லியன் மடங்கு அதிகம்!

news

ஆட்சித்திறனுக்காக நோபல் பரிசு தந்தால் அதை எனக்குத் தரலாம்.. அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி

அதிகம் பார்க்கும் செய்திகள்