பொய்யைப் படிக்க வேண்டாம் என்பதால் வெளியேறிப் போயிருக்கலாம்.. ஆளுநருக்கு சீமான் ஆதரவு

Jan 08, 2025,06:48 PM IST

சென்னை: பொய்யை படிக்க வேண்டாம் என்பதால் ஆளுநர் படிக்காமல் சென்றிருக்கலாம் என்று உரையை படிக்காமல் சென்ற ஆளுநர் ஆர். என். ரவிக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆதரவு தெரிவித்துள்ளார்.


2025ம் ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டம் கடந்த 6ம் தேதி தொடங்கியது. அவை தொடங்கிய சிறிது நேரத்திலேயே ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றாமல் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தார்.  சட்டப்பேரவையை விட்டு ஆளுநர் வெளியேறிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.




இந்நிலையில், இது குறித்து நாம் தமிழர் கட்சி ஒங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், நீங்க எழுதி கொடுத்ததை அவர் படிக்க வேண்டும்.  அதை பார்த்த அவர் இவ்வளவு பொய்பேச வேண்டுமா என்று பார்த்து விட்டு போய்விட்டார். இப்ப இதை ஆளுநர் படித்திருந்தால் நாங்கள் எல்லாம் என்ன நினைப்போம். நல்ல ஆளுநருனு நினைச்சோம். இதுக்கு அவரு திமுகவிலேயே சேர்ந்திருக்கலாம்னு நினைத்திருப்போம்.


எல்லாருக்கும் தெரியும். தெருவுக்கு தெரு மதுக்கடைகள். எங்கும் போதைப் பொருட்கள் விற்கப்படுகின்றன. குறிப்பாக பள்ளி, கல்லூரி வளாகங்களில் அதிகமாக விற்கப்படுகிறது. வழிபாட்டு தலங்களிலும் போதைப் பொருட்கள் விற்கப்படுகின்றது. எல்லாருக்கும் கோபம் இருக்கிறது. அதை தடுப்பதற்கு தான் வழி தெரியவில்லை. 


திமுகவினர் இதை எல்லாம் மறைத்து விட்டு நாங்கள் நல்லாட்சி செய்கிறோம் என்கின்றனர். முதலில் 5000 பொங்கல என்றார்கள். அப்புறம் 2500 என்றார்கள். அப்புறம் 1000 என்றார்கள். இப்போது 103 ரூபாய்க்கு வந்துள்ளது. வெறும் 3 ரூபாய்க்கு வருவதற்குள் நாங்கள் முழித்துக்கொள்ள வேண்டும்.


ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி நிச்சயமாக போட்டியிடும். சின்னம் கேட்டிருக்கிறோம் என்றார் சீமான்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!

news

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்

news

அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!

news

Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!

news

படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!

news

எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!

news

நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!

news

புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து

அதிகம் பார்க்கும் செய்திகள்