சென்னை: பொய்யை படிக்க வேண்டாம் என்பதால் ஆளுநர் படிக்காமல் சென்றிருக்கலாம் என்று உரையை படிக்காமல் சென்ற ஆளுநர் ஆர். என். ரவிக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆதரவு தெரிவித்துள்ளார்.
2025ம் ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டம் கடந்த 6ம் தேதி தொடங்கியது. அவை தொடங்கிய சிறிது நேரத்திலேயே ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றாமல் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தார். சட்டப்பேரவையை விட்டு ஆளுநர் வெளியேறிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில், இது குறித்து நாம் தமிழர் கட்சி ஒங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், நீங்க எழுதி கொடுத்ததை அவர் படிக்க வேண்டும். அதை பார்த்த அவர் இவ்வளவு பொய்பேச வேண்டுமா என்று பார்த்து விட்டு போய்விட்டார். இப்ப இதை ஆளுநர் படித்திருந்தால் நாங்கள் எல்லாம் என்ன நினைப்போம். நல்ல ஆளுநருனு நினைச்சோம். இதுக்கு அவரு திமுகவிலேயே சேர்ந்திருக்கலாம்னு நினைத்திருப்போம்.
எல்லாருக்கும் தெரியும். தெருவுக்கு தெரு மதுக்கடைகள். எங்கும் போதைப் பொருட்கள் விற்கப்படுகின்றன. குறிப்பாக பள்ளி, கல்லூரி வளாகங்களில் அதிகமாக விற்கப்படுகிறது. வழிபாட்டு தலங்களிலும் போதைப் பொருட்கள் விற்கப்படுகின்றது. எல்லாருக்கும் கோபம் இருக்கிறது. அதை தடுப்பதற்கு தான் வழி தெரியவில்லை.
திமுகவினர் இதை எல்லாம் மறைத்து விட்டு நாங்கள் நல்லாட்சி செய்கிறோம் என்கின்றனர். முதலில் 5000 பொங்கல என்றார்கள். அப்புறம் 2500 என்றார்கள். அப்புறம் 1000 என்றார்கள். இப்போது 103 ரூபாய்க்கு வந்துள்ளது. வெறும் 3 ரூபாய்க்கு வருவதற்குள் நாங்கள் முழித்துக்கொள்ள வேண்டும்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி நிச்சயமாக போட்டியிடும். சின்னம் கேட்டிருக்கிறோம் என்றார் சீமான்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
IPL 2026: கடைசி வரை போராட்டம்.. 10 ரன்கள் வித்தியாயசத்தில் வெற்றியை நழுவ விட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்
மகளிர் சக்தியை அவமதித்தவர்களுக்குத் தண்டனை நிச்சயம்.. பிரதமர் மோடி ஆவேச உரை!
எடுக்கவோ கோர்க்கவோ.. ஏட்டில் படித்ததை.. பார்த்து பார்த்து .. பரவசத்தில் புதுப் பூவாய் பூத்தேன்!
Priase the Husband Day: கணவரை மனசார பாராட்டுங்கள் இன்னிக்கு!
பூவிதா...! நான் உன்னை நேசிக்கிறேன்.. (மெல்லிய பூங்காற்று - 3)
சிவகங்கை குடியிருப்பு பகுதியில் புகுந்த கண்ணாடி விரியன்.. லாவகமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்!
A Vency Raj short story: முடியுமா என்னால்?.. ஒரு வினாவே விடையாகும் தருணம்!
மனங்களில் வாழும் ரங்கா மாமா.. Ranga Mama – The Guruswamy of Our Hearts!
True Wisdom.. உண்மையான ஞானம் எதிலிருந்து நமக்குக் கிடைக்கும்?
{{comments.comment}}