நாகப்பட்டனம்: இந்தியாவின் நாகப்பட்டனத்துக்கும், இலங்கையின் காங்கேசன் துறைமுகத்திற்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை நாளை முதல் தொடங்குகிறது.
கானொளி மூலமாக பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் மத்திய, மாநில அமைச்சர்கள் இதை நாளை தொடங்கி வைக்கிறார்கள்.
.jpg)
நாகை-இலங்கை இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து அக்டோபர் 14ம் தேதி தொடங்கப்பட உள்ளது. இதற்கான சோதனை ஓட்டம் கடந்த 2 நாட்களுக்கு முன்னரே வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. இதையடுத்து அக்டோபர் 12ம் தேதி முதல் சேவை தொடங்கும் எனக் கூறப்பட்டது. தற்போது அது தள்ளி வைக்கப்பட்டு நாளை தொடங்குகிறது.
ஏசி வசதியுடன் கூடிய இந்த கப்பலில் 150 பயணிகள் வரை பயணிக்கலாம். நாகையில் இருந்து காங்கேசன் துறைமுகத்திற்கு கப்பல் போக்குவரத்து தொடக்க நாளை முன்னிட்டு நாளை ஒரு நாள் மட்டும் கட்டணமாக ரூபாய் 3000 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மற்ற நாட்களில் எல்லாம் இந்த கப்பலில் பயணிக்க, பயணிகளுக்கான கட்டணம் 18 சதவீத ஜிஎஸ்டி வரியுடன் ரூ.6500 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதுவரை 35 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். பயணிகள் 50 கிலோ வரை எந்தவித கட்டணமும் இல்லாமல் லக்கேஜ் கொண்டு செல்லலாம். இரு நாடுகளுக்கு இடையிலான பயணம் என்பதால், இந்தக் கப்பலில் பயணிக்க பாஸ்போர்ட் மற்றும் இ விசா அவசியம்.
இலங்கை - இந்தியா இடையே தற்போது விமானப் போக்குவரத்து மட்டுமே உள்ளது. இந்த நிலையில் கப்பல் போக்குவரத்துத் தொடங்குவது இரு நாட்டு மக்களிடையே, குறிப்பாக தமிழர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது. குறைந்த செலவில் இரு நாடுகளுக்கும் போய் வரும் கனவும் இதன் மூலம் நனவாகியுள்ளது.
கரூர் சம்பவ வழக்கில் நாளை விசாரணை : ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோருக்கு தடை விதிக்க திமுக கோரிக்கை
ஜூலை 21ம் தேதி சென்னை வருகிறார் ராகுல்காந்தி: முதல்வர் விஜய்யை சந்திப்பாரா?
தவெக அரசுக்கு ஓராண்டு அவகாசம் தர வேண்டும்: அண்ணாமலை பரபரப்பு பேச்சு!
மதிமுக.,விடம் திமுக குதிரை பேரம் நடத்தியது: வைகோ பகீர் குற்றச்சாட்டு
செந்தில் பாலாஜி, அசோக்குமாரின் முன்ஜாமீன் வழக்கு வேறு நீதிபதிக்கு மாற்றம்!
ரேஸ் வேண்டாம்...நடிக்க வாங்க அஜித் - மன்சூர் அலிகான் வேண்டுகோள்
அமைச்சர் ஆனந்துடன் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் திடீர் சந்திப்பு
அயோத்தி ராமர் கோயில் நன்கொடையில் தினசரி ரூ.6-8 லட்சம் திருட்டா?
சம்மன் அனுப்பிய போலீஸ்...ஆஜராகாத செந்தில் பாலாஜி...அடுத்து என்ன?
{{comments.comment}}