- தெ.நாராயண லெட்சுமி, B.E
இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளை வளர்ப்பது என்பது பெற்றோர்களுக்கு மிகப் பெரிய சவாலாக மாறியுள்ளது. இருபது வருடங்களுக்கு முன்பு வரை, குழந்தைகளை தனியாக வெளியில் அனுப்புவதற்கு பல பெற்றோர்கள் பயப்பட்டனர். சிலர் “தனியாக சென்று கற்றுக்கொள்ள வேண்டும்” என்று உறுதியாக இருந்தாலும், பலர் பாதுகாப்பு காரணமாக அதிக கவனத்துடன் இருந்தனர்.
இன்று காலம் மாறியுள்ளது. கல்வி, வேலை, போக்குவரத்து என அனைத்தும் விரைவாக நகரும் சூழலில், குழந்தைகள் சிறு வயதிலேயே சுயநிறைவு பெற வேண்டிய நிலை உருவாகியுள்ளது. ஆனால் அதே நேரத்தில் பாதுகாப்பு குறித்த அச்சமும் அதிகரித்துள்ளது.
சில பெற்றோர் தற்போது தங்கள் குழந்தைகளை பொறுப்புடன் வெளியில் அனுப்பி பழக்கப்படுத்துகிறார்கள். உதாரணமாக, பள்ளி தூரமாக இருக்கும் குழந்தைகளை நம்பகமான டாக்ஸி சேவையில் குழுவாக அனுப்புவது, அருகிலுள்ள குழந்தைகளை தனியாக செல்ல பழக்கப்படுத்துவது போன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் மூலம் குழந்தைகள் சுயநம்பிக்கை மற்றும் அனுபவம் பெறுகிறார்கள்.

“குழந்தைகளை பொத்தி பொத்தி வளர்ப்பதை விட, உலகத்தை புரிந்து கொள்ளும் வாய்ப்பை அளிக்க வேண்டும். அதே சமயம் பாதுகாப்பும் முக்கியம்” என்பது பல பெற்றோரின் புதிய சிந்தனையாக மாறியுள்ளது.
இன்றைய பெற்றோரின் சவால் என்பது குழந்தைகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்வதோடு மட்டுமல்ல, அவர்களை சுயமாக வாழத் தயார்படுத்துவதும் ஆகும். வாழ்க்கையின் அனுபவங்களை நேரடியாக சந்தித்தால்தான் குழந்தைகள் எதிர்காலத்தில் தன்னம்பிக்கையுடன் செயல்பட முடியும் என்பதே பலரின் கருத்தாகும்.
சமநிலை தான் முக்கியம் — பாதுகாப்பும், சுயநிறைவும் சேர்ந்த வளர்ப்பு தான் இன்றைய காலத்தின் தேவையாகிறது.
(தெ. நாராயணலட்சுமி, ஐக்கிய அரபு அமீரகத்தின் ராஸ் அல் கைமாவில் வசித்து வருகிறார்)
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
காங்கிரஸ் அணுகுமுறையால் திமுக கூட்டணிக்குத் தோல்வி.. திருமாவளவன் குற்றச்சாட்டு
பெண் சிங்கம்.. ராத்திரி 11 மணி.. தனி ஆளாய்.. மொத்த கும்பலையும் வேரறுத்த.. ரிதி ராஜ் ஐபிஎஸ்!
மீண்டும் போர் பதற்றம்: ஈரானிலிருந்து இந்தியர்கள் வெளியேற மத்திய அரசு அறிவுறுத்தல்!
மக்களின் குறை தீர்க்கும் தமிழ்நாடு அரசு.. முக்கிய இமெயில் முகவரிகள்.. நோட் பண்ணிக்கங்க!
முதல்வர் விஜயைச் சந்தித்து.. செஸ் விளையாடி.. ஜெயித்து வாழ்த்து பெற்றார் சாம்பியன் பிரக்ஞானந்தா!
தமிழ்நாடு மின் வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி உத்தரவு!
பா.ஜ.க-விலிருந்து விலகிய செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ்.. அண்ணாமலையுடன் இணைகிறாரா?
ராஜ்யசபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு இன்று கடைசி நாள்.. தவெக ஆதரவுடன் எம்.பி ஆகும் காங்.
{{comments.comment}}