வாஷிங்டன்: பூமிக்கு திரும்ப முடியாமல் கடந்த எட்டு மாதங்களாக சர்வதேச விண்வெளியில் மையத்தில் சிக்கி தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோரை பூமிக்கு அழைத்து வர நாசா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சர்வதேச விண்வெளி மையத்திற்கு கடந்த ஆண்டு ஜூன் 5-ம் தேதி ஆய்வுக்காக நாசா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் போயிங் ஸ்டார் லைனர் விண்கலத்தில் சென்றனர். ஆனால், விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இருவரும் பூமிக்கு திருப்ப முடியாமல் 8 மாதங்களாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கி உள்ளனர்.
இவர்களை பூமிக்கு மீட்டு வருவதற்கு நாசா எலான் மாஸ்க் உதவியை நாடியது. இதனை தொடர்ந்து இருவவரையும் பூமிக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வந்தது. ஆனால் பல்வேறு சிக்கல்கள் காரணமாக இருவரையும் பூமிக்கு அழைத்து வருவதில் சிக்கல் நீடித்தது.

இதற்கிடையே சர்வதேச விண்வெளி மையத்தில் தங்கியிருக்கும் சுனிதா வில்லியம்ஸ் மார்ச் 25 ஆம் தேதி பூமிக்கு திரும்ப இருப்பதாக அறிவித்திருந்தனர். இந்த நிலையில் அதற்கு முன்னதாகவே பூமிக்கு அழைத்து வர நாசா திட்டமிட்டுள்ளது.
அதன்படி, சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோரை spacex நிறுவனத்தின் crew dragon capsule மூலம் வரும் மார்ச் 12 ஆம் தேதி பூமிக்கு அழைத்து வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஸ்பேக்எக்ஸ் நிறுவனம், எலான் மஸ்க்கின் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.
சுதந்திர தாகம் தணிந்து... சுதந்திர மோகம் எழுந்தது ஏனோ???
தீரமும் வீரமும் செறிந்த.. விடுதலை முழக்கம்.. சுதந்திரக் காற்றை சுவாசிக்க இந்தியா கடந்து வந்த பாதை!
முதல்வர் விஜய்யின் முதல் சுதந்திர தினம்.. கோட்டைக் கொத்தளத்தில் தேசியக் கொடியேற்றினார்
அறிவுஜீவி நக்சலைட்டுகளால் நாட்டுக்கு ஆபத்து.. களையெடுத்து அகற்ற வேண்டும்.. பிரதமர் மோடி பேச்சு
சாக்லெட்டுக்கு பதில் கடலை மிட்டாய் – தேவகோட்டை பள்ளியில் வித்தியாசமான சுதந்திர தின விழா!
போர் இல்லா உலகைத் தேடும் புவி மகளோ பாரதம்!
இன்றெனக்கு விடுதலை கிடைத்தது!
சுதந்திரம் எனும் ஒளி
சுதந்திரம் என்ன சும்மாவா கிடைத்தது?
{{comments.comment}}