இயற்கை வழிபாடும் பொங்கலும்!

Jan 14, 2026,12:48 PM IST

- தி. மீரா


சூரியன் தந்த ஒளிக்கே நன்றி,

மழை தந்த மேகத்திற்கே நன்றி,

மண் தந்த தானியத்திற்கே நன்றி

நன்றி சொல்லும் நாளே பொங்கல்.


ஆறு, மரம், காற்று, மலை,

அனைத்தும் தெய்வம் தமிழர் நிலை,

உழவர் வியர்வை விதையாகி,

உலகம் நிறையும் உணவாய் மாறி.




பொங்கும் பானையில் பொங்கும் நன்றி,

இயற்கை தாய்க்கு செய்யும் வணங்கி,

வழிபாடாய் மாறும் வாழ்வு இதுவே

பொங்கல் காட்டும் பண்பாடு அதுவே. 


விதை விதைத்த நம்பிக்கைக்கு,

விளைச்சல் தந்த வானத்திற்கு,

உழைத்த கைகளின் கனவுக்கு,

உயிர் தந்த இயற்கைக்கு வணக்கம்.


கோலமிடும் வாசல் சொல்லும்,

பூமி தாய் மீது மரியாதை,

பொங்கும் பொங்கல் சுவையல்ல

பண்பாட்டின் பரிமாணம் அது.


சூரியன் தந்த ஒளி வணக்கம்,

மழை தந்த மேகம் வணக்கம்,

மண் தந்த தானியம் வணக்கம்

நன்றி சொல்லும் நாள் பொங்கல்.


மாட்டுக்கு மரியாதை,

மண்ணுக்கு மகிமை,

இயற்கை வழிபாடே

பொங்கலின் பெருமை.


நேற்று, இன்று, நாளை என,

இயற்கை இல்லா வாழ்வில்லை,

வழிபாடாய் வாழும் தமிழர்,

பொங்கலில் உணரும் உண்மை.


(பாவலர் முனைவர் தி.மீரா, எழுத்தாளர், கவிஞர், கட்டுரையாளர். ஈரோட்டைச் சேர்ந்தவர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

செம்மொழியான தமிழ் மொழியே

news

தாங்கி பிடிக்க தாயும் தூக்கி நிறுத்த தந்தையும் இருந்தால்!

news

இயற்கை நீதி!

news

பால் முதல் மின்சாரம் வரை...110 விதியின் கீழ் முதல்வர் விஜய் இன்று வெளியிட்ட 6 அறிவிப்புக்கள்

news

ஒரே நாளில் மதுவிலக்கு கொண்டு வர முடியும்...அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேச்சால் அதிர்ந்த சட்டசபை

news

மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய அறிவிப்புகள்: இலவச ஸ்கூட்டர், பஸ்களில் இலவச பயணத் திட்டம்

news

கொளத்தூர் தேர்தல் வழக்கு: தீர்ப்பை தள்ளிவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

news

டாஸ்மாக் ஊழியர்களுக்கு குட் நியூஸ்...சம்பள உயர்வு, தீபாவளி முன்பணம் அறிவிப்பு

news

சட்டசபையில் காங்கிரஸ் எம்எல்ஏ.,க்கள் இருக்கை மாற்றம்...மாணிக்க தாகூர் சொன்ன பதில்

அதிகம் பார்க்கும் செய்திகள்