இயற்கை வழிபாடும் பொங்கலும்!

Jan 14, 2026,12:48 PM IST

- தி. மீரா


சூரியன் தந்த ஒளிக்கே நன்றி,

மழை தந்த மேகத்திற்கே நன்றி,

மண் தந்த தானியத்திற்கே நன்றி

நன்றி சொல்லும் நாளே பொங்கல்.


ஆறு, மரம், காற்று, மலை,

அனைத்தும் தெய்வம் தமிழர் நிலை,

உழவர் வியர்வை விதையாகி,

உலகம் நிறையும் உணவாய் மாறி.




பொங்கும் பானையில் பொங்கும் நன்றி,

இயற்கை தாய்க்கு செய்யும் வணங்கி,

வழிபாடாய் மாறும் வாழ்வு இதுவே

பொங்கல் காட்டும் பண்பாடு அதுவே. 


விதை விதைத்த நம்பிக்கைக்கு,

விளைச்சல் தந்த வானத்திற்கு,

உழைத்த கைகளின் கனவுக்கு,

உயிர் தந்த இயற்கைக்கு வணக்கம்.


கோலமிடும் வாசல் சொல்லும்,

பூமி தாய் மீது மரியாதை,

பொங்கும் பொங்கல் சுவையல்ல

பண்பாட்டின் பரிமாணம் அது.


சூரியன் தந்த ஒளி வணக்கம்,

மழை தந்த மேகம் வணக்கம்,

மண் தந்த தானியம் வணக்கம்

நன்றி சொல்லும் நாள் பொங்கல்.


மாட்டுக்கு மரியாதை,

மண்ணுக்கு மகிமை,

இயற்கை வழிபாடே

பொங்கலின் பெருமை.


நேற்று, இன்று, நாளை என,

இயற்கை இல்லா வாழ்வில்லை,

வழிபாடாய் வாழும் தமிழர்,

பொங்கலில் உணரும் உண்மை.


(பாவலர் முனைவர் தி.மீரா, எழுத்தாளர், கவிஞர், கட்டுரையாளர். ஈரோட்டைச் சேர்ந்தவர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு..வருகிற 15ம் தேதி உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி:வானிலை மையம்

news

திமுகவிடம் தாலி கட்டிய மனைவி போல் தான் உள்ளனர் கூட்டணி கட்சிகள்: செல்லூர் ராஜூ விமர்சனம்!

news

சேலம் வருகிறார் விஜய்.. நாளை நிர்வாகிகள் சந்திப்பு.. 4,998 பேருக்கு மட்டுமே அனுமதி!

news

சத்துணவு ஊழியர்கள் போராட்டம்: நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார் நயினார் நாகேந்திரன்

news

தொலைந்த பைசா தினம்.. ஆமாங்க.. இப்படியும் ஒரு தினம் இருக்கு.. அதுவும் இன்றுதான் அது!

news

கமகமக்கும் இறால் தொக்கு.. நம்ம ஊரு ஸ்டைல்ல.. சாப்ட்டுப் பாருங்க.. நாக்கு ஊறும்!

news

தாயையும் தம்பியையும்.. பள்ளியில் புகுந்து மாணவர்களை வேட்டையாடிய 18 வயது திருநங்கை!

news

கல்யாணம் காது குத்தா.. சுப நிகழ்ச்சிகளுக்கு இனி அரசு பேருந்து உங்கள் வாசலில்!

news

ஒரு சிறு பயணம்.. நிறைவாக கடப்போம்.. A Short Journey

அதிகம் பார்க்கும் செய்திகள்