- தி. மீரா
சூரியன் தந்த ஒளிக்கே நன்றி,
மழை தந்த மேகத்திற்கே நன்றி,
மண் தந்த தானியத்திற்கே நன்றி
நன்றி சொல்லும் நாளே பொங்கல்.
ஆறு, மரம், காற்று, மலை,
அனைத்தும் தெய்வம் தமிழர் நிலை,
உழவர் வியர்வை விதையாகி,
உலகம் நிறையும் உணவாய் மாறி.

பொங்கும் பானையில் பொங்கும் நன்றி,
இயற்கை தாய்க்கு செய்யும் வணங்கி,
வழிபாடாய் மாறும் வாழ்வு இதுவே
பொங்கல் காட்டும் பண்பாடு அதுவே.
விதை விதைத்த நம்பிக்கைக்கு,
விளைச்சல் தந்த வானத்திற்கு,
உழைத்த கைகளின் கனவுக்கு,
உயிர் தந்த இயற்கைக்கு வணக்கம்.
பொங்கும் பொங்கல் சுவையல்ல
பண்பாட்டின் பரிமாணம் அது.
சூரியன் தந்த ஒளி வணக்கம்,
மழை தந்த மேகம் வணக்கம்,
மண் தந்த தானியம் வணக்கம்
நன்றி சொல்லும் நாள் பொங்கல்.
மாட்டுக்கு மரியாதை,
மண்ணுக்கு மகிமை,
இயற்கை வழிபாடே
பொங்கலின் பெருமை.
நேற்று, இன்று, நாளை என,
இயற்கை இல்லா வாழ்வில்லை,
வழிபாடாய் வாழும் தமிழர்,
பொங்கலில் உணரும் உண்மை.
(பாவலர் முனைவர் தி.மீரா, எழுத்தாளர், கவிஞர், கட்டுரையாளர். ஈரோட்டைச் சேர்ந்தவர்)
5 தொகுதி இடைத் தேர்தல்.. தவெக வியூகம் என்ன.. திமுக என்ன பண்ணப் போகுது.. அப்போ அதிமுக?
கேரளத்தில் பதிவான வழக்கு: தமிழகத்தில் 3 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை!
முடிவுக்கு வந்த குழப்பம்.. அதிமுக அலுவலக சாவி எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் ஒப்படைப்பு
அஜித் குமார் தாயார் மோகினி மணி மறைவு: முதல்வர் விஜய், பிரபலங்கள் இரங்கல்!
"இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா" .. மறக்க முடியாத முதல் நாள் வகுப்பறை அனுபவம்!
Tamil Short Story: கௌரவம் சிறுகதை (சென்ற வார தொடர்ச்சி)... எல்லாம் முடிந்து விட்டது பாஸ்கர்!
முருகப் பெருமான் அவதரித்த திருநாள்.. வைகாசி விசாகமும், காவடியும்!
Sasikala Viswanathan Haiku: நிலவு ஒளிர்கிறது!
My mother stood through every pain... தாயின் தியாகங்கள்!
{{comments.comment}}