இயற்கை வழிபாடும் பொங்கலும்!

Jan 14, 2026,12:48 PM IST

- தி. மீரா


சூரியன் தந்த ஒளிக்கே நன்றி,

மழை தந்த மேகத்திற்கே நன்றி,

மண் தந்த தானியத்திற்கே நன்றி

நன்றி சொல்லும் நாளே பொங்கல்.


ஆறு, மரம், காற்று, மலை,

அனைத்தும் தெய்வம் தமிழர் நிலை,

உழவர் வியர்வை விதையாகி,

உலகம் நிறையும் உணவாய் மாறி.




பொங்கும் பானையில் பொங்கும் நன்றி,

இயற்கை தாய்க்கு செய்யும் வணங்கி,

வழிபாடாய் மாறும் வாழ்வு இதுவே

பொங்கல் காட்டும் பண்பாடு அதுவே. 


விதை விதைத்த நம்பிக்கைக்கு,

விளைச்சல் தந்த வானத்திற்கு,

உழைத்த கைகளின் கனவுக்கு,

உயிர் தந்த இயற்கைக்கு வணக்கம்.


கோலமிடும் வாசல் சொல்லும்,

பூமி தாய் மீது மரியாதை,

பொங்கும் பொங்கல் சுவையல்ல

பண்பாட்டின் பரிமாணம் அது.


சூரியன் தந்த ஒளி வணக்கம்,

மழை தந்த மேகம் வணக்கம்,

மண் தந்த தானியம் வணக்கம்

நன்றி சொல்லும் நாள் பொங்கல்.


மாட்டுக்கு மரியாதை,

மண்ணுக்கு மகிமை,

இயற்கை வழிபாடே

பொங்கலின் பெருமை.


நேற்று, இன்று, நாளை என,

இயற்கை இல்லா வாழ்வில்லை,

வழிபாடாய் வாழும் தமிழர்,

பொங்கலில் உணரும் உண்மை.


(பாவலர் முனைவர் தி.மீரா, எழுத்தாளர், கவிஞர், கட்டுரையாளர். ஈரோட்டைச் சேர்ந்தவர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நான் என்னுடைய சுய கணக்கெடுப்பை முடித்து விட்டேன்.. வீடியோ வெளியிட்ட முதல்வர் விஜய்

news

Census: தமிழகத்தில் ஆகஸ்ட் 1 முதல் முதற்கட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு.. ஆன்லைனிலும் சமர்ப்பிக்கலாம்!

news

ரோஹித் சர்மா ஓய்வு பெற நிர்ப்பந்தமா.. உண்மையில் என்னதான் நடக்கிறது?

news

ஜோர்டானில் இருந்த அமெரிக்க போர் விமானங்களை அழித்ததாக ஈரான் அதிரடி தகவல்

news

ரயில் டிக்கெட் முன்பதிவை எளிதாக்க ஐஆர்சிடிசி (IRCTC) புதிய பீட்டா பதிப்பு அறிமுகம்

news

சிந்தனைச் சிதறல்.. தனித்துவமும் தன் மதிப்பும் மிகுந்த தனிமையே உயர்வானது!

news

ரஷ்ய எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா மீது 100% வரி? அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதிய மசோதா

news

ஓய்வறியா தமிழ்ச் சூரியன்.. தளராமல் தமிழ் வளர்க்கும் பாரதிச்சுடர் நா.வே.நீலகண்டத் தமிழன்!

news

மிஸ்..இந்த வாட்டியும் வந்ததா!.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்

அதிகம் பார்க்கும் செய்திகள்