Natural medicine for Ulcer.. வயிற்று வலி, அசிடிட்டி தாங்க முடியலையா.. இயற்கையான மருந்து இருக்கே!

Nov 26, 2024,11:25 AM IST

இன்றைய எந்திரமயமான வாழ்க்கை முறையில் மக்கள் பல்வேறு உடல் உபாதைகளை உபாதைகளை சந்தித்து வருகின்றனர். அதில் ஒன்றுதான் அல்சர். இதனால் மக்கள் முறையாக சாப்பிட முடியாமலும், உணவு சாப்பிட்ட பிறகு வயிற்று வலி, நெஞ்சு எரிச்சல், புளித்த ஏப்பம் போன்ற பிரச்சினைகளால் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.


சரி இந்த அல்சர் பிரச்சினை எதனால் வருகிறது.. இதற்கு காரணம் என்ன.. என்றால் முறையான உணவு பழக்கமின்மை, ஃபாஸ்ட் புக் உணவுகள், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், செயற்கை கலரூட்டப்பட்ட உணவுகள், போன்ற காரணங்களால் அல்சர் ஏற்படுகிறது. அதிலும் இரவில் அதிக நேரம் கண் விழித்து காலையில் தாமதமாக எழுந்து விட்டு காலை உணவை தவிர்த்து இஷ்டத்திற்கு உணவை உண்பதாலும் அல்சர் ஏற்படுகிறது.


அதே சமயத்தில் நாம் சாப்பிடும் காலை உணவு அனைத்து சத்துக்கள்  நிறைந்த உணவாக இருக்க வேண்டும். ஆனால் நாம் சாப்பிடும் உணவு அப்படி இருக்கிறதா என்றால்  இல்லை. அதேபோல் காலையில் நேரத்திற்கு சாப்பிடாத ஒரு காரணத்தால் மதிய இரவு உணவுகள் மிகவும் தாமதமாகிறது. இதனால் நம் உடலில் முறையான செரிமானத் தன்மையை இழப்பதாலும் அல்சர் ஏற்படுகிறது. இது மட்டுமல்லாமல் சாப்பிடும் உணவில் அதிக காரம், புளிப்பு, மசாலா போன்ற உணவுகள் மற்றும் எண்ணெயில் பொறித்த உணவுகளை அதிகம் உட்கொள்வதாலும் அல்சர் ஏற்படுகிறது.


அல்சர் என்றால் என்ன..? 




பொதுவாக தொண்டையில் இருந்து இரைப்பை வரை உணவு செல்லும் உணவுக் குழாயிலும், இரைப்பை முன்சிறு குடலிலும், ஏற்படும் புண்களை பெப்டிக் அல்சர் என  சொல்வார்கள். அதேபோல் இரைப்பையில் புண் ஏற்பட்டால் அதனை கேஸ்டிரிக் அல்சர் எனவும் கூறப்படுகிறது.


இந்த அல்சர் பிரச்சனைகளை ஹாஸ்பிடலுக்கு செல்லாமல் வீட்டிலேயே எப்படி குணப்படுத்தலாம்? இதற்கான என்ன இயற்கை வழிமுறைகளை பின்பற்றலாம் என்பது குறித்து பார்ப்போம்.


- அல்சர் பிரச்சனை முற்றிலும் குணமாக மாதுளை மற்றும் தேங்காய் சில்லு சேர்த்து ஜூஸ் செய்து பருகலாம். 


- அதேபோல் வெண் பூசணிக்காயை சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக்கி, அதனுடன் தேங்காய் சில்லுகளை சேர்த்து அரைத்து ஜூஸ் செய்து பருகி வந்தாலும் அல்சர் குணமாகும்.


- இது தவிர முட்டைக்கோசை சிறு சிறு துண்டுகளாக அறிந்து கொண்டு, அதனுடன் மிளகு, சீரகம், இஞ்சி, சின்ன வெங்காயம், தக்காளி  சேர்த்து சூப் செய்தும், முட்டைக்கோஸ் துண்டுகளை பச்சையாக அடித்து  ஜூஸ் செய்தும், பருகி வந்தால் அல்சர் குணமாகும் என இயற்கை வாழ்வியல் மருத்துவர்கள்  தெரிவித்துள்ளனர்.


குறிப்பு: மேற்குறிப்பிட்ட ஜூஸ் அல்லது சூப் ஏதேனும் ஒன்றை மட்டும் தினசரி பருகாமல், அன்றாட உணவு முறைகளை சரி செய்து அத்துடன் சுழற்சி முறையில் இந்த ஜூஸ் மற்றும் சூப்புகளை எடுத்து வந்தால் கண்டிப்பாக அல்சர் குணமாகும். இதுதொடர்பாக முறையான மருத்துவ ஆலோசனைகளைப் பெறுவதும் நல்லது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

74 வயதிலும் டப் கொடுக்கும் நிதீஷ் குமார்.. தேஜஸ்வி, காங்கிரஸ் கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு!

news

Gold price:அதிரடியாக குறைந்தது தங்கம் விலை...இன்று மட்டும் சவரனுக்கு ரூ.1,520 குறைவு!

news

தூய்மையின் வடிவம் மற்றும் புத்திசாலித்தனத்தின் அற்புதம் (குழந்தைப் பருவம்)

news

கல்வி கற்பதின் நோக்கம் பணம் சம்பாதிக்க மட்டுமல்ல.. விட்டுக்கொடுத்தும், பற்றி வாழ்தலுமே!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் நவம்பர் 15, 2025... இன்று நினைத்தது கைகூடும் நாள்

news

பீகார் தேர்தல்.. கருத்துக் கணிப்புகளை பொய்ப்பித்த Results.. வியத்தகு வெற்றி - ஒரு பார்வை!

news

தொடர்ந்து கை கொடுக்கும் பாஜக.,வின் வெற்றி பார்முலா... பீகாரிலும் பலித்தது எப்படி?

news

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மணிமகுடத்தில் மற்றுமொரு மாணிக்கம்: நயினார் நாகேந்திரன்

news

ராகுல் காந்தி அரசியலை விட்டு விலகுவதற்கு மேலுமொரு வாய்ப்பு கிடைத்துள்ளது: குஷ்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்