Natural medicine for Ulcer.. வயிற்று வலி, அசிடிட்டி தாங்க முடியலையா.. இயற்கையான மருந்து இருக்கே!

Nov 26, 2024,11:25 AM IST

இன்றைய எந்திரமயமான வாழ்க்கை முறையில் மக்கள் பல்வேறு உடல் உபாதைகளை உபாதைகளை சந்தித்து வருகின்றனர். அதில் ஒன்றுதான் அல்சர். இதனால் மக்கள் முறையாக சாப்பிட முடியாமலும், உணவு சாப்பிட்ட பிறகு வயிற்று வலி, நெஞ்சு எரிச்சல், புளித்த ஏப்பம் போன்ற பிரச்சினைகளால் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.


சரி இந்த அல்சர் பிரச்சினை எதனால் வருகிறது.. இதற்கு காரணம் என்ன.. என்றால் முறையான உணவு பழக்கமின்மை, ஃபாஸ்ட் புக் உணவுகள், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், செயற்கை கலரூட்டப்பட்ட உணவுகள், போன்ற காரணங்களால் அல்சர் ஏற்படுகிறது. அதிலும் இரவில் அதிக நேரம் கண் விழித்து காலையில் தாமதமாக எழுந்து விட்டு காலை உணவை தவிர்த்து இஷ்டத்திற்கு உணவை உண்பதாலும் அல்சர் ஏற்படுகிறது.


அதே சமயத்தில் நாம் சாப்பிடும் காலை உணவு அனைத்து சத்துக்கள்  நிறைந்த உணவாக இருக்க வேண்டும். ஆனால் நாம் சாப்பிடும் உணவு அப்படி இருக்கிறதா என்றால்  இல்லை. அதேபோல் காலையில் நேரத்திற்கு சாப்பிடாத ஒரு காரணத்தால் மதிய இரவு உணவுகள் மிகவும் தாமதமாகிறது. இதனால் நம் உடலில் முறையான செரிமானத் தன்மையை இழப்பதாலும் அல்சர் ஏற்படுகிறது. இது மட்டுமல்லாமல் சாப்பிடும் உணவில் அதிக காரம், புளிப்பு, மசாலா போன்ற உணவுகள் மற்றும் எண்ணெயில் பொறித்த உணவுகளை அதிகம் உட்கொள்வதாலும் அல்சர் ஏற்படுகிறது.


அல்சர் என்றால் என்ன..? 




பொதுவாக தொண்டையில் இருந்து இரைப்பை வரை உணவு செல்லும் உணவுக் குழாயிலும், இரைப்பை முன்சிறு குடலிலும், ஏற்படும் புண்களை பெப்டிக் அல்சர் என  சொல்வார்கள். அதேபோல் இரைப்பையில் புண் ஏற்பட்டால் அதனை கேஸ்டிரிக் அல்சர் எனவும் கூறப்படுகிறது.


இந்த அல்சர் பிரச்சனைகளை ஹாஸ்பிடலுக்கு செல்லாமல் வீட்டிலேயே எப்படி குணப்படுத்தலாம்? இதற்கான என்ன இயற்கை வழிமுறைகளை பின்பற்றலாம் என்பது குறித்து பார்ப்போம்.


- அல்சர் பிரச்சனை முற்றிலும் குணமாக மாதுளை மற்றும் தேங்காய் சில்லு சேர்த்து ஜூஸ் செய்து பருகலாம். 


- அதேபோல் வெண் பூசணிக்காயை சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக்கி, அதனுடன் தேங்காய் சில்லுகளை சேர்த்து அரைத்து ஜூஸ் செய்து பருகி வந்தாலும் அல்சர் குணமாகும்.


- இது தவிர முட்டைக்கோசை சிறு சிறு துண்டுகளாக அறிந்து கொண்டு, அதனுடன் மிளகு, சீரகம், இஞ்சி, சின்ன வெங்காயம், தக்காளி  சேர்த்து சூப் செய்தும், முட்டைக்கோஸ் துண்டுகளை பச்சையாக அடித்து  ஜூஸ் செய்தும், பருகி வந்தால் அல்சர் குணமாகும் என இயற்கை வாழ்வியல் மருத்துவர்கள்  தெரிவித்துள்ளனர்.


குறிப்பு: மேற்குறிப்பிட்ட ஜூஸ் அல்லது சூப் ஏதேனும் ஒன்றை மட்டும் தினசரி பருகாமல், அன்றாட உணவு முறைகளை சரி செய்து அத்துடன் சுழற்சி முறையில் இந்த ஜூஸ் மற்றும் சூப்புகளை எடுத்து வந்தால் கண்டிப்பாக அல்சர் குணமாகும். இதுதொடர்பாக முறையான மருத்துவ ஆலோசனைகளைப் பெறுவதும் நல்லது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது.. விஜய்யை மறைமுகமாக சுட்டுகிறாரா ரஜினிகாந்த்?

news

அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பும் ஆசை.. ஓய்வுபெற ரூ. 25 கோடி போதுமா?.. கலகலக்கும் விவாதம்!

news

TNPSC குரூப் 4 தொடங்கியது.. 3935 பணியிடங்களுக்கு.. 14 லட்சம் பேர் மோதல்.. 4922 மையங்களில் தேர்வு!

news

அகமதாபாத் விமான விபத்து .. புறப்பட்ட சில விநாடிகளிலேயே 2 என்ஜின்களும் பழுது.. அதிர்ச்சி தகவல்

news

அமலாக்கத்துறை பயம் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குத்தான்.. எங்களுக்கு அல்ல.. எடப்பாடி பழனிச்சாமி

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூலை 12, 2025... இன்று நல்ல காலம் பிறக்க போகும் ராசிகள்

news

தமிழ்நாடு பணியாது... நாம் ஒன்றாக எழுவோம்.. இது ஓரணி vs டெல்லி அணி.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களே... எனக்கு உங்களைத் தவிர வேறு எவருமில்லை: டாக்டர் அன்புமணி!

news

என் வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி.. வைத்தது யார்.. சீக்கிரம் கண்டுபிடிப்பேன்.. டாக்டர் ராமதாஸ்

அதிகம் பார்க்கும் செய்திகள்