இன்று நவராத்திரி 09 ம் நாள் : களை கட்டிய சரஸ்வதி பூஜையும் ஆயுத பூஜையும்.. ஊரெங்கும் விழாக்கோலம்

Oct 11, 2024,09:47 AM IST

சென்னை : 2024ம் ஆண்டிற்கான நவராத்திரி விழா அக்டோபர் 03ம் தேதி துவங்கி, 11ம் தேதி வரை உள்ளது. நவராத்திரி விழாவின் நிறைவு நாளான அக்டோபர் 11ம் தேதி அன்று சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை வழிபாடும், அக்டோபர் 12ம் தேதி விஜயதசமி விழாவும் கொண்டாடப்பட உள்ளது. வட மாநிலங்களில் நவராத்திரி துர்கா பூஜை என்ற பெயரிலும், விஜயதசமியானது தசரா என்ற பெயரிலும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.


வருடத்திற்கு நான்கு நவராத்திரிகள் வந்தாலும் புரட்டாசி மாதத்தில் மகாளய அமாவாசைக்கு பிறகு வரும் வளர்பிறையில் கொண்டாடப்படும் சாரதா நவராத்திரியே மிகவும் விமர்சையாக பெரும்பாலானவர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. பிரதமை துவங்கி, தசமி வரையிலான நவராத்திரியின் ஒன்பது நாட்களும் வீடுகளிலும், கோவில்களிலும் கொலு வைத்து கொண்டாடுவது உண்டு. நவராத்திரியின் ஒன்பது நாட்களில் முதல் மூன்று நாட்கள் துர்க்கைக்கு உரியதாகவும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமிக்கு உரியதாகவும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதிக்கு உரியதாகவும் சொல்லப்படுகிறது.


வீட்டில் கொலு வைக்க முடியாதவர்கள் கலசம் அமைத்தும், அகண்ட தீபம் ஏற்றியும் அதில் அம்பிகையை எழுந்தருளச் செய்து வழிபடுவது வழக்கம். இந்த ஆண்டு நவராத்திரியின் 09 ம் நாள் அக்டோபர் 11 ம் தேதி வருகிறது. நவராத்திரியின் கடைசி நாள் சரஸ்வதியை வழிபட வேண்டிய நாளாகும். இதை நவராத்திரி நவமி என்றும், மகாநவமி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நாளில் ஞானத்தை தரும் சரஸ்வதி தேவியை வழிபட வேண்டும்.   




நவராத்திரி 9ம் நாள் வழிபாட்டு முறை :


அம்பிகை வடிவம் - பரமேஸ்வரி

கோலம் - தாமரை வகை கோலம்

மலர் - தாமரை

இலை - மரிக்கொழுந்து

நைவேத்தியம் - சர்க்கரை பொங்கல்

சுண்டல் - கொண்டைக்கடலை

பழம் - நாவல் பழம்

நிறம் - வெந்தய நிறம்


நவராத்திரியின் ஒன்பதாவது நாளில் நவதுர்கை வழிபாட்டில் சித்திதாத்ரி என்ற துர்கையின் வடிவத்தை வழிபட வேண்டும். இவள் வெற்றி, மகிழ்ச்சியை வழங்கக் கூடியவள். இவளை நவதுர்கை என்றும், மகாதேவி என்றும் அழைப்பதுண்டு. இவளை பல விதமான பழங்கள், பாரிஜாத மலர்கள் ஆகியவற்றால் பூஜை செய்து வழிபட வேண்டும். இவள் அளவில்லாத மகிழ்ச்சியை தரக் கூடியவள் ஆகும்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

இந்த வாழ்க்கை ஒரு கனவா?

news

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை.. முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 30, 2025... இன்று மகிழ்ச்சி தேடி வரும் ராசிகள்

news

பணியாளர் நியமனத்தில் முறைகேடா?.. களங்கம் கற்பிக்க மத்திய அரசு முயற்சி.. அமைச்சர் கே. என். நேரு

news

2,538 பணியிடங்களுக்கு முறைகேடாக பணி நியமனம் செய்து ரூ.888 கோடி திமுக ஊழல்: அண்ணாமலை குற்றச்சாட்டு

news

Rain Rain come again.. தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்

news

மக்களைக் காக்க யாரும் எங்களுக்கு சொல்லித் தர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

நவ. 5ல் சிறப்பு பொதுக்குழு: ஆழ் நீள் அடர் அமைதிக்குப் பிறகு.. பேசப் போகிறேன்.. விஜய் அறிக்கை

news

காலையில் மட்டுமில்லங்க..பிற்பகலிலும் உயர்ந்தது தங்கம் விலை.. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.2,000 உயர்வு

அதிகம் பார்க்கும் செய்திகள்