சென்னை : 2024ம் ஆண்டிற்கான நவராத்திரி விழா அக்டோபர் 03ம் தேதி துவங்கி, 11ம் தேதி வரை உள்ளது. நவராத்திரி விழாவின் நிறைவு நாளான அக்டோபர் 11ம் தேதி அன்று சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை வழிபாடும், அக்டோபர் 12ம் தேதி விஜயதசமி விழாவும் கொண்டாடப்பட உள்ளது. வட மாநிலங்களில் நவராத்திரி துர்கா பூஜை என்ற பெயரிலும், விஜயதசமியானது தசரா என்ற பெயரிலும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
வருடத்திற்கு நான்கு நவராத்திரிகள் வந்தாலும் புரட்டாசி மாதத்தில் மகாளய அமாவாசைக்கு பிறகு வரும் வளர்பிறையில் கொண்டாடப்படும் சாரதா நவராத்திரியே மிகவும் விமர்சையாக பெரும்பாலானவர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. பிரதமை துவங்கி, தசமி வரையிலான நவராத்திரியின் ஒன்பது நாட்களும் வீடுகளிலும், கோவில்களிலும் கொலு வைத்து கொண்டாடுவது உண்டு. நவராத்திரியின் ஒன்பது நாட்களில் முதல் மூன்று நாட்கள் துர்க்கைக்கு உரியதாகவும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமிக்கு உரியதாகவும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதிக்கு உரியதாகவும் சொல்லப்படுகிறது.
வீட்டில் கொலு வைக்க முடியாதவர்கள் கலசம் அமைத்தும், அகண்ட தீபம் ஏற்றியும் அதில் அம்பிகையை எழுந்தருளச் செய்து வழிபடுவது வழக்கம். இந்த ஆண்டு நவராத்திரியின் 09 ம் நாள் அக்டோபர் 11 ம் தேதி வருகிறது. நவராத்திரியின் கடைசி நாள் சரஸ்வதியை வழிபட வேண்டிய நாளாகும். இதை நவராத்திரி நவமி என்றும், மகாநவமி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நாளில் ஞானத்தை தரும் சரஸ்வதி தேவியை வழிபட வேண்டும்.

நவராத்திரி 9ம் நாள் வழிபாட்டு முறை :
அம்பிகை வடிவம் - பரமேஸ்வரி
கோலம் - தாமரை வகை கோலம்
மலர் - தாமரை
இலை - மரிக்கொழுந்து
நைவேத்தியம் - சர்க்கரை பொங்கல்
சுண்டல் - கொண்டைக்கடலை
பழம் - நாவல் பழம்
நிறம் - வெந்தய நிறம்
நவராத்திரியின் ஒன்பதாவது நாளில் நவதுர்கை வழிபாட்டில் சித்திதாத்ரி என்ற துர்கையின் வடிவத்தை வழிபட வேண்டும். இவள் வெற்றி, மகிழ்ச்சியை வழங்கக் கூடியவள். இவளை நவதுர்கை என்றும், மகாதேவி என்றும் அழைப்பதுண்டு. இவளை பல விதமான பழங்கள், பாரிஜாத மலர்கள் ஆகியவற்றால் பூஜை செய்து வழிபட வேண்டும். இவள் அளவில்லாத மகிழ்ச்சியை தரக் கூடியவள் ஆகும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தவெக ஆட்சியமைப்பது உறுதியானது.. தொடங்குகிறது விஜய் சகாப்தம்!
தமிழகத்தில் ஆட்சி அமைக்க முயற்சி செய்யவில்லை.. பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்
பிளஸ்டூ தேர்வு முடிவுகள்: ஆண்கள் பள்ளிகளை விட பெண்கள் பள்ளிகளில் அசத்தலான தேர்ச்சி விகிதம்!
ஆட்சியமைப்பதில் சிக்கல்.. இப்போது கூட விஜய் பேசாமல் இருப்பது ஏன்.. என்னதான் பிரச்சினை?
நல்லதே நடக்கும்.. ஒரு நிமிடக் கதை (8)
மாணிக்க மகனே மரகத செல்வா.. மகனுக்கு ஓர் மடல்!
மே 1ம் தேதி மட்டுமல்ல.. எப்போதுமே கொண்டாடுவோம் தொழிலாளர்களை!
எண்ணங்களை நிறுத்துவது எப்படி? (How to Stop Thoughts?)
சென்னை ஹஸ்தினாபுரம் நகராட்சி மேல்நிலைப் பள்ளி +2 பொதுத்தேர்வில் 98.10% தேர்ச்சி!
{{comments.comment}}