இன்று நவராத்திரி 09 ம் நாள் : களை கட்டிய சரஸ்வதி பூஜையும் ஆயுத பூஜையும்.. ஊரெங்கும் விழாக்கோலம்

Oct 11, 2024,09:47 AM IST

சென்னை : 2024ம் ஆண்டிற்கான நவராத்திரி விழா அக்டோபர் 03ம் தேதி துவங்கி, 11ம் தேதி வரை உள்ளது. நவராத்திரி விழாவின் நிறைவு நாளான அக்டோபர் 11ம் தேதி அன்று சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை வழிபாடும், அக்டோபர் 12ம் தேதி விஜயதசமி விழாவும் கொண்டாடப்பட உள்ளது. வட மாநிலங்களில் நவராத்திரி துர்கா பூஜை என்ற பெயரிலும், விஜயதசமியானது தசரா என்ற பெயரிலும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.


வருடத்திற்கு நான்கு நவராத்திரிகள் வந்தாலும் புரட்டாசி மாதத்தில் மகாளய அமாவாசைக்கு பிறகு வரும் வளர்பிறையில் கொண்டாடப்படும் சாரதா நவராத்திரியே மிகவும் விமர்சையாக பெரும்பாலானவர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. பிரதமை துவங்கி, தசமி வரையிலான நவராத்திரியின் ஒன்பது நாட்களும் வீடுகளிலும், கோவில்களிலும் கொலு வைத்து கொண்டாடுவது உண்டு. நவராத்திரியின் ஒன்பது நாட்களில் முதல் மூன்று நாட்கள் துர்க்கைக்கு உரியதாகவும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமிக்கு உரியதாகவும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதிக்கு உரியதாகவும் சொல்லப்படுகிறது.


வீட்டில் கொலு வைக்க முடியாதவர்கள் கலசம் அமைத்தும், அகண்ட தீபம் ஏற்றியும் அதில் அம்பிகையை எழுந்தருளச் செய்து வழிபடுவது வழக்கம். இந்த ஆண்டு நவராத்திரியின் 09 ம் நாள் அக்டோபர் 11 ம் தேதி வருகிறது. நவராத்திரியின் கடைசி நாள் சரஸ்வதியை வழிபட வேண்டிய நாளாகும். இதை நவராத்திரி நவமி என்றும், மகாநவமி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நாளில் ஞானத்தை தரும் சரஸ்வதி தேவியை வழிபட வேண்டும்.   




நவராத்திரி 9ம் நாள் வழிபாட்டு முறை :


அம்பிகை வடிவம் - பரமேஸ்வரி

கோலம் - தாமரை வகை கோலம்

மலர் - தாமரை

இலை - மரிக்கொழுந்து

நைவேத்தியம் - சர்க்கரை பொங்கல்

சுண்டல் - கொண்டைக்கடலை

பழம் - நாவல் பழம்

நிறம் - வெந்தய நிறம்


நவராத்திரியின் ஒன்பதாவது நாளில் நவதுர்கை வழிபாட்டில் சித்திதாத்ரி என்ற துர்கையின் வடிவத்தை வழிபட வேண்டும். இவள் வெற்றி, மகிழ்ச்சியை வழங்கக் கூடியவள். இவளை நவதுர்கை என்றும், மகாதேவி என்றும் அழைப்பதுண்டு. இவளை பல விதமான பழங்கள், பாரிஜாத மலர்கள் ஆகியவற்றால் பூஜை செய்து வழிபட வேண்டும். இவள் அளவில்லாத மகிழ்ச்சியை தரக் கூடியவள் ஆகும்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அலர்ட்!

news

பசி,பட்டினியை போக்கவில்லை... தீபம் ஏற்ற வேண்டும் என கூறுகிறார்கள்: சீமான் ஆவேசம்!

news

வானுயர் ஜிஎஸ்டிபி வளர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது:முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

news

மெஸ்ஸியை பார்க்க முடியாமல் ரசிகர்கள் ஆவேசம்... ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மம்தா பானர்ஜி!

news

திமுக அரசின் துரோகத்திற்கு எதிராக தெருவுக்கு வந்த போராடும் அரசுஊழியர்கள்: அன்புமணி ராமதாஸ் வேதனை!

news

ஜிடிபி வளர்ச்சியில் தமிழ்நாடு புதிய சாதனை.. பெரிய மாநிலங்களில் நம்பர் 1 நாமதான்!

news

Flashback 2025.. தென்னிந்தியத் திரையுலகுக்கு பெரும் சோகம் தந்து விடைபெறும் 2025!

news

சினிமாத் துறையினரை தொடர்ந்து பாதிக்கும் மன அழுத்தம்.. உரிய கவுன்சிலிங் அவசியம்!

news

Amma's Pride ஆஸ்கர் விருதுக்குப் போட்டியிடும் சென்னையில் உருவான குறும்படம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்