தென்னிந்திய சினிமா சூப்பர் ஸ்டார் நயன்தாரா, தனது 22 வருட திரைப்பயணத்தை நிறைவு செய்துள்ளார்.
லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் இவர், தனது அழுத்தமான நடிப்பாலும், பலதரப்பட்ட கதாபாத்திரங்களாலும், படங்களை தனியாளாக தாங்கி நிற்கும் திறமையாலும் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார். காதல் கதைகள் முதல் அதிரடி த்ரில்லர்கள் வரை இவரது பயணம் ரசிகர்களுக்கும், சினிமா துறையில் நுழைய நினைப்பவர்களுக்கும் ஒரு உத்வேகமாக அமைந்துள்ளது.
தனது 22 வருட நடிப்பு பயணத்தை நிறைவு செய்ததை ஒட்டி, நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஒரு நெகிழ்ச்சியான பதிவை பகிர்ந்துள்ளார். அதில், "நான் முதன்முதலில் கேமரா முன் நின்றதில் இருந்து 22 வருடங்கள் ஆகின்றன. சினிமா என் வாழ்வின் காதலாக மாறும் என்று அப்போது எனக்குத் தெரியாது. ஒவ்வொரு ஷாட், ஒவ்வொரு ஃபிரேம், ஒவ்வொரு மௌனம்... என்னை செதுக்கியது, குணப்படுத்தியது, நான் இன்று இருக்கும் நிலைக்கு கொண்டு வந்தது. எப்போதும் நன்றியுடன் இருப்பேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.
2003 ஆம் ஆண்டு வெளியான 'மனசினக்கரே' என்ற மலையாளப் படத்தின் மூலம் நயன்தாரா தனது நடிப்புப் பயணத்தைத் தொடங்கினார். அதன் பிறகு, தென்னிந்திய சினிமாவில் மிகவும் விரும்பப்படும் நடிகைகளில் ஒருவராக உயர்ந்தார். ஐயா படம் மூலம் தமிழில் அறிமுகமான நயன்தாரா அதைத் தொடர்ந்து 'சந்திரமுகி', 'ஸ்ரீ ராம ராஜ்யம்', 'அறம்', 'மாயா', 'கோலமாவு கோகிலா', மற்றும் 'ஜவான்' போன்ற படங்களில் அவரது மறக்க முடியாத நடிப்புகள், அவரது பன்முகத்தன்மையையும், நடிப்பில் அவர் காட்டும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தின.
நடிப்பைத் தாண்டி, நயன்தாரா தனது எளிமை, சமூக சேவைகள் மற்றும் கடின உழைப்பிற்காகவும் பாராட்டப்படுகிறார். இவர் இயக்குநர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு உயிர் மற்றும் உலகு என்ற இரண்டு இரட்டை மகன்கள் உள்ளனர்.
தற்போது, நயன்தாரா சுந்தர் சி இயக்கும் பிரம்மாண்டமான படமான 'மூக்குத்தி அம்மன் 2' படப்பிடிப்பில் பிஸியாக உள்ளார். கன்னடத்தில், யஷ்ஷுடன் இணைந்து அவர் நடிக்கும் 'Toxic' என்ற படத்திலும் விரைவில் நடிக்க உள்ளார். மேலும், விஷ்ணு எடவன் இயக்கும் நயன்தாரா மற்றும் கவின் நடிக்கும் படத்திற்கு 'Hi' என்று பெயரிடப்பட்டுள்ளது. அதன் முதல் பார்வை போஸ்டர்கள் இன்று வெளியாகி உள்ளன. இதன் மூலம், நடிகை மிகவும் பிஸியாக இருக்கிறார் என்பது தெளிவாகிறது.
கோவையின் புதிய அடையாளம்... ஜி.டி.நாயுடு மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
வட இந்தியாவில் வெகு விசேஷமாக கொண்டாடப்படும் கர்வா செளத்.. அப்படி என்றால் என்ன?
யாராவது ஏதாவது செய்து விடலாம் என விஜய் அஞ்சுவது போல தெரிகிறது.. நயினார் நாகேந்திரன்
திமுகவில் உறுதியாக தொடர்கிறேன்.. நான் ஏன் தவெகவுக்குத் திரும்ப வேண்டும்.. வைஷ்ணவி
தினம் தினம் புதிய உச்சம் அடைந்து வரும் தங்கம் விலை... இதோ இன்றைய விலை நிலவரம்!
25 வயது இளமைப் புயல்.. புது வசந்தம் (2)
சாதி அடையாளங்களை தடை செய்யும் அரசாணையை முதல்வரே மீறக் கூடாது.. ஆ.த.மு.க.
மீண்டும் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்.. தவெக தலைவர் விஜய் வீட்டில் குவிந்த போலீஸ்..!
நயன்தாரா நடிக்க வந்து.. 22 வருஷமாச்சாம்.. லேடி சூப்பர்ஸ்டார்னா சும்மாவா!
{{comments.comment}}