சென்னை: போதைப் பொருள் கடத்தலில் முக்கிய புள்ளியாக இருந்த ஜாபர் சாதிக் இன்று கைது செய்யப்பட்ட நிலையில், குற்றம் நிரூபிக்கப்பட்டால் மதம், இனம், மொழி, கட்சி ,கடந்து ஜாபர் சாதிக் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவின் துணை இயக்குனர் ஞானேஸ்வரர் பேட்டியளித்துள்ளார்.
டெல்லியில் உள்ள மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கடந்த சில தினங்களுக்கு முன்பு கைலாஷ் பார்க் பகுதியில் சோதனை நடத்தி வந்தனர். அப்போது அங்கு போதைப் பொருள் தயாரிக்க மூலப்பொருளாக பயன்படும் சூடோ பெட்ரின் என்ற வேதிப்பொருளை கண்டறிந்தனர். இதன் மதிப்பு சுமார் 2000 கோடி ஆகும். இதனை அடுத்து இதில் சம்பந்தப்பட்ட மூவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது இதில் ஜாபர் சாதிக் என்ற தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் முக்கிய புள்ளியாக செயல்பட்டது தெரியவந்தது.மேலும் இந்த ரசாயன பொருட்களை ஆஸ்திரேலிய மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு கடத்துவதாகவும் தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் போலீசார் இவரை கண்டுபிடிக்க தீவிர முனைப்புடன் செயல்பட்டு வந்தனர்.

நேற்று ஜாபர் சாதிக் ஜெய்ப்பூரில் உள்ள ஹோட்டலில் தலைமறைவாக இருக்கிறார் என்ற தகவல் கிடைத்தது.இதனை அடுத்த இன்று ஜாபர் சாதிக்கை போலீசார் கைது செய்தனர். பின்னர் அங்கிருந்து உடனடியாக டெல்லிக்கு அழைத்துச் சென்று,இவரிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு துணை இயக்குனர் ஞானேஸ்வர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ராஜஸ்தானில் பதுங்கியிருந்த ஜாபர் சாதிக்கை போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் கைது செய்து விசாரணை நடத்திய போது, இவர் போதைப்பொருள் கடத்தலில் கிடைத்த பணத்தை சினிமா, கட்டுமானம் போன்ற தொழிலில் முதலீடு செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஏற்கனவே இவர் மீது 2019-ல் மும்பை சுங்கத்துறையில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக வழக்கு உள்ளது. ஜாபர் சாதிக்கிற்கு பல்வேறு பெரும் புள்ளிகளுடன் தொடர்புள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் 3,500 கிலோ சூடோபெட்ரைன் போதைப்பொருளை கடத்தியுள்ளார். உணவுப் பொருள் என்ற பெயரில் ஆஸ்திரேலியா, மலேசியா, நியூசிலாந்துக்கு போதைப் பொருளை கடத்தியுள்ளார்.மேலும் ஜாபர் சாதிக் அரசியல் கட்சிகளுக்கு நிதியுதவி அளித்தாரா? என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம். மெத்தம் பெட்டமைன் தயாரிக்க பயன்படும் மூலப்பொருளான சூடோபெட்ரைனை கடத்தினால் 10 ஆண்டு வரை சிறை தண்டனை வழங்கப்படும்.குற்றம் நிரூபிக்கப்பட்டால் மதம், இனம், மொழி, கட்சி கடந்து ஜாபர் சாதிக் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.
இளமையே....எதைக் கொண்டு அளவிடலாம் உன்னை?
வைக்கதஷ்டமி திருவிழா.. வைக்கம் மகாதேவர் கோவில் சிறப்புகள்.. இன்னும் தெரிஞ்சுக்கலாம் வாங்க!
டிசம்பர் 15ம் தேதி சென்னை வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா
முன்னாள் மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் காலமானார்
தோசையம்மா தோசை.. ஹெல்த்தியான தோசை.. சுட்டுச் சுட்டுச் சாப்பிடுங்க.. சூப்பராக வாழுங்க!
அரங்கன் யாவுமே அறிந்தவனே!
அவரது நடிப்பாற்றல் பல தலைமுறைகளைக் கவர்ந்துள்ளது: ரஜினிகாந்திற்கு பிரதமர் மோடி, முதல்வர் வாழ்த்து
தங்கம் விலையில் அதிரடி... இன்று மட்டும் சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு... புதிய உச்சத்தில் வெள்ளி விலை!
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு... அதிகாலையில் பனிமூட்டமும் இருக்குமாம் - IMD
{{comments.comment}}