ஜாபர் சாதிக் பற்றிய திடுக்கிடும் தகவல்..! அம்பலப்படுத்திய தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி

Mar 09, 2024,08:09 PM IST

சென்னை: போதைப் பொருள் கடத்தலில் முக்கிய புள்ளியாக இருந்த ஜாபர் சாதிக் இன்று கைது செய்யப்பட்ட நிலையில், குற்றம் நிரூபிக்கப்பட்டால் மதம், இனம், மொழி, கட்சி ,கடந்து ஜாபர் சாதிக் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவின் துணை இயக்குனர் ஞானேஸ்வரர் பேட்டியளித்துள்ளார்.


டெல்லியில் உள்ள மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கடந்த சில தினங்களுக்கு முன்பு கைலாஷ் பார்க் பகுதியில் சோதனை நடத்தி வந்தனர். அப்போது அங்கு போதைப் பொருள் தயாரிக்க மூலப்பொருளாக பயன்படும் சூடோ பெட்ரின் என்ற வேதிப்பொருளை கண்டறிந்தனர். இதன் மதிப்பு சுமார் 2000 கோடி ஆகும். இதனை அடுத்து இதில் சம்பந்தப்பட்ட மூவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது இதில்  ஜாபர் சாதிக் என்ற தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் முக்கிய புள்ளியாக செயல்பட்டது தெரியவந்தது.மேலும் இந்த ரசாயன பொருட்களை ஆஸ்திரேலிய மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு கடத்துவதாகவும் தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் போலீசார் இவரை கண்டுபிடிக்க தீவிர முனைப்புடன் செயல்பட்டு வந்தனர். 




நேற்று ஜாபர் சாதிக்  ஜெய்ப்பூரில் உள்ள ஹோட்டலில் தலைமறைவாக இருக்கிறார் என்ற தகவல் கிடைத்தது.இதனை அடுத்த  இன்று ஜாபர் சாதிக்கை  போலீசார் கைது செய்தனர். பின்னர் அங்கிருந்து உடனடியாக டெல்லிக்கு அழைத்துச் சென்று,இவரிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு துணை இயக்குனர் ஞானேஸ்வர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ராஜஸ்தானில் பதுங்கியிருந்த ஜாபர் சாதிக்கை போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் கைது செய்து விசாரணை நடத்திய போது, இவர் போதைப்பொருள் கடத்தலில் கிடைத்த பணத்தை சினிமா, கட்டுமானம் போன்ற தொழிலில் முதலீடு செய்ததாக  வாக்குமூலம் அளித்துள்ளார்.


ஏற்கனவே இவர் மீது 2019-ல் மும்பை சுங்கத்துறையில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக வழக்கு உள்ளது. ஜாபர் சாதிக்கிற்கு பல்வேறு பெரும் புள்ளிகளுடன் தொடர்புள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் 3,500 கிலோ சூடோபெட்ரைன் போதைப்பொருளை கடத்தியுள்ளார். உணவுப் பொருள் என்ற பெயரில் ஆஸ்திரேலியா, மலேசியா, நியூசிலாந்துக்கு போதைப் பொருளை கடத்தியுள்ளார்.மேலும் ஜாபர் சாதிக் அரசியல் கட்சிகளுக்கு நிதியுதவி அளித்தாரா? என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம். மெத்தம் பெட்டமைன் தயாரிக்க பயன்படும் மூலப்பொருளான சூடோபெட்ரைனை கடத்தினால் 10 ஆண்டு வரை சிறை தண்டனை வழங்கப்படும்.குற்றம் நிரூபிக்கப்பட்டால் மதம், இனம், மொழி, கட்சி கடந்து ஜாபர் சாதிக் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!

news

பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!

news

ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!

news

குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு

news

தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?

news

என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!

news

டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க

news

11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்

news

ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்